ஒரு சிறிய மாற்றம் இன்று பரங்கிமலை என அழைக்கப்படும், "பிரிங்கிமா முனிவர்" தவம் செய்து வந்த மலையைத் தான் அப்போதைய மக்கள் "பிரிங்கிமா மலை" என்று அழைத்து வந்தனர். இராமர் இலங்கையில் இருந்து சீதையை மீட்டு அயோத்திக்கு அழைத்து செல்லும் வழியில் "பிரிங்கிமா முனிவரின்" ஆசிரமத்தில் தங்கி, அவர் ஆசீர்வாதத்தையும் பெற்ற செல்ல விரும்புகிறார். பிரிங்கிமா முனிவர் வேண்டுதலுக்கு இணங்கி இராமர், பிரிங்கிமா முனிவரின் "நந்தவனத்தில்" தங்கியிருந்து சென்றதாக செவிவழிச் செய்திகளாக இருந்து வந்தது. "பிரிங்கிமா மலை' "பரங்கிமலை", யாகவும்' பிரிங்கிமா முனிவரின் "நந்தவனம்", "நந்தம்பாக்கமாகவும்" மருவி விட்டது என்று பல முதியவர்களுக்கும் மற்றும் இந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்த, என் தமிழ் ஆசிரியர் மு வரதராசனார் பல சான்றுகளை காட்டி பழைய பெயர்களான " பிரிங்கிமா மலை" "நந்தவனம்" என அழைக்க ஒரு மக்கள் கூட்டத்தை ஏற்படுத்தி முயற்சி எடுத்து வந்தார். அது இன்று மேலும் வளராமல் அப்படியே இருந்து வருகிறது.