நமஸ்காரம்... எப்பொழுதும் போல் ஶ்ரீ திருச்சி கல்யாணராமன் அவர்களின் இந்த உபன்யாசம் அருமை அருமை....இந்த உபன்யாசத்தில் அவர் ஶ்ரீ Right Honourable Sreenivasa Sastrigal ஐ பற்றி சில துளிகளை பகிர்ந்து கொண்டார்....நான் கல்யாணராம பாகதவர்வாள் அவர்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ஏன் என்றால் ஶ்ரீ Right Honourable Sreenivasa Sastrigal எனது தாயாரின் தாய் வழி தாத்தா ஆவார்.... எங்களது குடும்பங்கள் மிகவும் ஆச்சார அனுஷ்டானங்களை நம்பி வந்தன. காலத்தின் கொடுமை குடும்பங்கள் பிரிந்து தகர்ந்து போயின என்பதை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குசேலர் சரித்திரம் மிக அருமை. நான் பிராமணர் இல்லை. அய்யா அவர்களின் உபன்யாசம் அனைத்தும் கேட்டு விடுவேன். எங்கள் குல தெய்வதிருக்கு சிவன் ராத்திரி அன்று அய்யாவின் உபன்யாசம் வைக்க வேண்டும் என்று ஆசை.
உபன்யாசம் கேட்க பிராமினாக இருக்கு வேண்டும் என்பது இல்லை..... நல்ல விஷயம் கேட்பவர்களும், பேசுபவர்கள், தன் வாழ்வில் கடைபிடிப்பவர்கள் அனைவரும் பிராமினர்கள் தான்
நல்ல பக்தி பெண்களுக்கு இருந்தால் தான் பெண்கள் சிறப்பான சமுதாய வாழ்க்கையை வாழ முடியும். அப்படி பெண்கள் சிறப்பாக வாழ்ந்தால் தான் ஆண்களும் சிறப்பாக வாழ முடியும், வம்ச விருத்தியோடு பரம்பரை, பரம்பரையாக என்பதை முன்னோர்கள் அனுபவத்தில் உணர்ந்ததால் தான் இலக்கியங்களை எழுதி வைத்து அதன் மூலம் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும், பெண்களின் சிறப்புக்கள் என்னென்ன என்பது பற்றியும் எழுதி வைத்தும், செவி வழிக் கதைகளாகவும் சொல்லி வைத்தும் அவைகளை சமுதாயப் பண்புகளாகவும், கலாச்சாரங்களாகவும் தொடர வைத்தனர். நான் பிராமணன் இல்லை. ஆனால், சிறு வயதிலிருந்து இன்றைய 70 வயது வரையிலும் சுயமாக சிந்தித்தும், பல அனுபவங்கள் வழியாகவும் உணர்ந்த உண்மைகள் தான் பிராமணர்கள் கடவுள் பக்தி நெறிகளோடு வாழும் முறைகளும், இயல், இசை, நாடகம் போன்றவற்றில் பிராமணர்களின் பங்களிப்பும் போல் ஏனைய சாதி மக்கள் ஆர்வம் காட்டாமல் வாழ்கிறார்கள் என்பது தான் அது. இயல்பில் மனிதர்களுக்கு சோம்பேறித் தனம் அதிகம் தான். ஒழுங்கு முறைகளும் பிடிக்காது தான். ஆனால், பிராமணர்கள் இவைகள் இரண்டையும் தங்களின் பக்தி நெறியாலும், அதன் தொடர்பில் உள்ள ஒழுங்கு முறையாலும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் வாழ்க்கை முறையை ஏனைய சாதி மக்கள் வியந்து பார்த்து வருவதும், அதே போல் தங்கள் வீட்டிலும் அனைவரும் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தால் வந்த விளைவு தான் பிராமணர்களை சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றனர் என்பதை தெளிவாக உணர முடிகிறது. பார்த்தான் ராமசாமி, பிராமணர்களிடம் தொடரும் இந்த பக்தி மற்றும் சமுதாய ஒழுங்கு முறைகளை உடைத்து விட்டால், அது ஏனைய சாதி மக்களையும் பக்தி நெறி மற்றும் சமுதாய ஒழுங்கு முறைகளிலிருந்து விலகி வாழும் வழியைத் தானாகவே ஏற்படுத்தி விடும் என்று ஆரம்பித்தது தான் பிராமண எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்பு என்பதாகும். ஒன்று உயர்ந்த இடத்திலும், ஒன்று தாழ்ந்த இடத்திலும் இருப்பதை சமன் செய்திட முடியாது என்பது தான் இயற்கை அமைத்துள்ள விதியாகும். அரசர்களின் ஆட்சியில் நல்ல பண்பாடுகளோடும், கலாச்சாரங்களோடும் வாழ்ந்து வந்த பாரத தேசத்து மக்களை, சுதந்திரம் பெற்ற பின்பு உரிமை, சமத்துவம் என்கிற பெயரில் பெண் கல்வி என்று வெளியில் இழுத்து விட்டு கற்ற கல்விக்கு வேலை தேடிச் செல்லும் நிலையை உருவாக்கி பணம் சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்தி விட்டால் பிறகு பக்தியும், கலாச்சார ஒழுங்கு முறைகளும் தானாகவே காணாமல் போய் விடும் என்பதைத் தான் ராமசாமி சமூக சீர்திருத்தம் என்கிற பெயரில் சமுதாயத்தை நாசமாக்கும் வேலையில் இறங்கினான் என்பதை தெளிவாக என்னால் உணர முடிகிறது. அதைத் தான் பெண்களின் லெக்கின்ஸாக, சுடிதாராக, நைட்டிகளாக தற்போது பெண்களிடம் பார்த்து வருகிறோம். ஆகவே, ஐயா, நீங்கள் சொல்வது போல் பக்தி நெறியை மீட்டெடுத்து, அதன் மூலம் சமுதாய ஒழுங்கு முறைகளை உருவாக்கிட நினைக்கும் உங்கள் சிந்தனை பாராட்டுக்குரியதாகும். பெண்களின் சுதந்திரம் எல்லை மீறித் தான் போகிறது. அதைத் தடுத்து நிறுத்தும் இடத்தில் ஆண்கள் உள்ளனர் என்பது 100% உண்மையாகும். இப்போதே நிறைய படித்த பெண்கள் வயது கடந்தும் திருமண வாழ்க்கையின்றி அவலமான நிலையில் வாழ்கின்றனர். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ சநாதன தர்மத்தில் நமக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம் கலைமாமணி உ.வே.கல்யாணராமன் ஸ்வாமிகள் என்ன புலமை ?என்ன குரல்வளம்? என்ன ஞாபக சக்தி? புராண இதிகாசங்களை பிழையற சாதிக்கும் திறமை நகைச்சுவை எனும் தேனுடன் கலந்து சம்பிரதாயங்களை வர்ணிக்கும் சகல கலா வல்லமை அவர் காலத்தில் ஸ்வாமிகளின் உபந்யாஸம் நாம் கேட்பது பெரும் பேறு அடியேன் தாஸன்