இளவல் முனைவர் கு.கா அவர்களின் " தோட்டுக்காரி அம்மன்" ஓரங்க நாடகம் கண்டு கேட்டு மகிழ்ந்தேன்! கதையின் கம்பீரமா? கதை சொன்ன குரலின் கம்பீரமா? விஞ்சி நிற்பது எது? பாலொடு தேன் கலந்த பைந்தமிழ்க் கலை இன்பம்! பாராட்டி வாழ்த்தி மகிழும் - நாஞ்சில் நெடுமாறன்!
கதையின் விரிவாக்கமும் சார் குரலின் தொனியும் அருமை கொட்டாரம் அப்பாவு. ஐயா படைப்பில் தோட்டுக்காரியாக கிருஷ்ணா அக்கா அவர்களும் குறத்தி மகளாக நானும் நிறைய மேடைகளில் நடித்திருக்கின்றோம் மறக்க முடியாது மலரும் நினைவுகளை தந்தமைக்கு மிக்க நன்றி சார்🙏( நெல்லை அம்பிகா, பிரபல நாடக நடிகை)
எழுதப் படிக்க தெரியாத பாமரமக்களையும் அன்றய கா லக்கடடத்தில் வரலாற்று காவியங்களை திரையில் தந்து பல முகப்பாவனயில் மக்களுக்கு புரிய வைத்த மாபெரும் கலைஞர் நடிகர் திலகம் அவர்கள். அவரது காவிய திறனை இன்றும் எடுத்துரைத்து மக்கள் மனதில் அவரை பெருமை சேர்க்கும் டாக்டர் திரு. காமராஜின் புகழும் ஓங்குக.
🎉குலதெய்வக் கதைகளெல்லாம் உண்மைக் கதைகள்! சில துணுக்குகள் இடைசெறுகளாக இருக்கலாம். ஆனால் மூலக்கதை வீரமரணம் அல்லது அநியாய படுகொலை தொடர்புடையதுதான். அருமையாகச் சொன்னீர்கள்!🎉🎉❤
நாகேஷ் ராவ் நடித்த வெற்றி பெற்ற திரைப்படம் மிகச் சிறந்த நடிகர் அந்தத் திரைப்படத்தை சிவாஜி ஐயா தமிழில் நடித்ததால் நாகேஸ்வரா அவர்களின் நடிப்பு வீணானது நாகேஷ் ராவ் அவர்கள் 50 சதவீதம் சிறப்பாக நடித்திருப்பார் சிவாஜி கணேசன் ஐயா நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்று விட்டார் அதை ஹிந்தியில் ராஜஸ்தான் அவர்கள் சிறப்பாக நடித்தார் பாலிவுட்டில் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணா அப்படி இருந்தும் தமிழில் சிவாஜிகணேசன் ஐயா நடிப்புக்கு முன்பு ராஜேஷ் கண்ணா நடிப்பு ஒன்றும் இல்லாத போனது
👌👌மிக மிக அருமையான பதிவு. தொடக்கத்தில் பராசக்தி, உத்தமபுத்திரன் இரண்டு படங்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்கவேண்டும். பாசமலர்,பாவமன்னிப்பு,பாகப்பிரிவினை, பாபு படங்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். தெய்வமகன், நவராத்திரி படங்களுக்கும் கொடுத்தேயாக வேண்டும். எது தடையாக இருந்தது என்று தெரியவில்லை. எம்ஜியார் போல இல்லாமல் முழுக்க இயக்குநர் நடிகராக இருந்த சிவாஜியை இயக்குநர்கள் அவரை வீணடித்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசியலும் இருந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தத்தில் நடிக்கத் தெரியாமலேயே வாழ்ந்துவிட்டார். அழியாது அவர் புகழ்! உணர்வுபூர்வமான பதிவு! முத்தமிழர் முனைவர் காமராஜ் வாழ்க!🙏🙏🙏💐💐💐 ( முனைவர்: செந்தில் குமார், சென்னை)
சிவாஜி கணேசனைப் பற்றி மிகத்தெளிவான கணிப்பு. இந்தக் காணொலியில்தான் முனைவர் கு. காமராஜ் அவர்கள், புன்னகை மாறாமல் உரையாற்றியுள்ளார். பாராட்டு -பேரா.முகிலை ராசபாண்டியன்
இதே போல் திரிசூலம் கன்னடம் தெலுங்கு தமிழ் 3 மொழிகளில் வந்து தமிழில் மாபெரும் Record break collection. மேலும் ராமுடு பீமுடு தெலுங்கு ( NTR ) Ram aur shyam ஹிந்தி ( Dilip kumar ) எங்க வீட்டுப்பிள்ளை MGR தமிழ் மூன்றும் ஒரே கதை ஆனால் தமிழில் தான் பெரிய வெற்றி.
நடிகர் திலகம் + TMS.+ கண்ணதாசன் + KV மகாதேவன் மிகச்சிறந்த கூட்டணி. வேறு யாராலும் நெருங்க கூட முடியவில்லை. குறிப்பாக சிவாஜி style நடிப்பு எல்லாவற்றையும் தாண்டிய சிகரம்.
உங்கள் நாடு அதியுயர் தேசிய விருது ஏன் வழங்கவில்லை என இந்திய நடுவன அரசை ஏன் கேட்கவில்லை.அவன் இவன் கெளரவித்ததை மட்டும் சொல்கிறீர்கள் . இந்தியா, நடிகர் திலகம் என ஏற்றுக்கொள்ளவில்லையோ ? அதைக் கேள் பின்பு வா வழிக்கு . இதைக் தட்டிக் கேட்க வக்கில்லை ஏனென்றால் ஹிந்திக்காரனுக்கு பயம் !
கண்களில் நீர் சிந்த வைத்தது அய்யா.. இதை நானும் அனுபவித்து இருந்து இழந்தவன் அய்யா.. உண்மையில் நெஞ்சினை உருகவைத்த பதிவு.. அதுவும் கறைபடாக் கரத்து கர்மவீரர் காமராசர் திறந்து வைத்த பள்ளியைக் காண்பித்து அந்தத் தன்னலமற்ற தலைவனை வணங்கவைத்து விட்டீர்கள் அய்யா.. நன்றி கு.காமராஜ் முனைவர் அய்யா 🙏🏵️ -கவிஞர் கோ.இராமலிங்கம், சென்னை
நாஞ்சில் நாட்டு ஏர் உழவன் போல் மக்கள் நெஞ்சம் எல்லாம் எளிய தமிழால் எங்கள் கவிமணி விநாயகம் கவி உழுதான்! தோல் நோய் கண்டு சிரங்கும் சொறியும் சேர்ந்திடக் கண்டும் - அவன் பா அடங்கவில்லை பக்தியும் அடங்கவில்லை! முத்தும் பவளமும் எனக்கு தரம் கண்டு தந்தான் என் அப்பன் சிரங்கப்ப ராயன் என சிந்து கவி பாடியவன் அவன் புகழை நன்று பாடிய தம்பியே நீ வாழ்க! 💐💐👏👏🙏 -கவிஞர் நா.சுயம்பு அகத்தீசுவரம்
இளமைக்கால எண்ணங்களை கல்வி தந்த பள்ளிக்கூடத்தை கற்றுத் தந்த ஆசிரியரை கண்ணியமிக்க காமராசரை பட்டையில் குடித்த பத நீரை உடை உடுத்திய பனங்கிழங்கை உடலுக்கு உறுதி தந்த கருப்பட்டியை ஆடிக் களைத்த ஆலிகளை அன்பு தந்த நண்பர்களை என்று மறப்போம்? அதை நினைவுக்கு கொண்டு வந்த காமராஜுக்கு வாழ்த்துகள். 💐💐👏👏 -கவிஞர் நா.சுயம்பு, அகத்தீசுவரம்
உலகில் அமெரிக்காவின் ஒரு நாள் மேயர் பிரான்சு செவாலியர் விருது முதன்முதலில் ஆஸ்காருக்க சிவாஜி படம் அனுப்பினர் சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் சிவாஜிக்கு பாராட்டு விருது உலகிலேயே 30ஆயிரம் ரசிகர்கள் மன்றம் உள்ள ஒரே நடிகர் கர்ணன் படம் 50ஆண்டு கள் கழித்துகின்னஸ் சாதனை இலங்கையில் கலைக்குரிச்சில் பட்டம் இன்னும் பல புகழ் ஐயா ச
அண்ணனை பற்றி சொல்வதற்கு தமிழில் எல்லா வார்த்தைகளையும் பயன் படுத்தி விட்டோம் தமிழில் வேறு வார்த்தைகள் கிடைக்காதா என்று தேடுகிறேன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன் விட்டோம்