மனிதன் தெய்வத்தோடு வைக்கும் இணக்கம் (பக்தி) எத்தகையது ஆயினும் அது நலத்தையே நல்கும்.
பரம்பொருளை அடையப்பெற்ற அருளாளர்கள் தங்கள் அனுபூதியில் கண்டறிந்த உண்மைகளை தம்தம் மொழியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
அருள் நாட்டம் கொண்டிருப்பவர்களுக்கு அருள் தாகத்தை வளர்க்கும் தன்மையதாய் அமைந்துள்ள இப்பாடல்களை இசையாகவும், உரையாகவும் குருவருளாலும், திருவருளாலும் வெளியிடுகின்றேன்.
இணையதளத்தில் உள்ள பல பக்தி வலைதளங்களுக்கும் எனக்கு தேவாரம், திருவாசகம், திருப்புகழை அறிமுகப்படுத்திய தெய்வத்திரு கந்தசாமி ஓதுவார், திருமந்திரத்தையும் பல பக்தி இலக்கியங்களை கற்றுத் தருகின்ற திருமதி பாக்யம் தமிழாசிரியைக்கும், இசை ஆசிரியை திருமதி கல்யாணி மற்றும் எனக்கு தமிழ்மொழி மீது அதிக பற்று வரவழைத்த என் தந்தை தமிழ் பேராசிரியர் காலஞ்சென்ற திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனக்கு உதவுகின்ற என் தோழிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனந்தவல்லி கங்கையை எழில் ஒவியமாக கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டாய். சந்தனுமகா ராஜாவும் ஆண்மையின் இலக்கணமாய் (very Hand someman) காட்சி தருகிறார். வாழ்க வளர்க உன் ஆன்மீகப்பணி. மிக்கநன்றி . மிக்கமகிழ்ச்சி
On the footsteps of your Guru Swami Omkarananda you hv taken up Thirukural in your exposition on Villi bharatham. With well thought out pictures in the video the video made by you is very good with your commentary. Jai Sriram.
நன்றி, அருமையான பொருளுள்ள பாடல். கடவுள் எங்கும், நமக்குள்ளும் இருப்பதை உணரவும், அன்பு இல்லாதவன் மூர்க்கன் எனவும் உணர்த்தும் தேவார பாடலை அவசியம் அனைவருமே கேட்டு, உணர எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.