Ethanayoo muslims ivara thandi pavam lan pandranga athelam yarum ethum pesa matranga ivaru oru marriage panatha potuu evoloo criticism. Knjm achum human ah pesunga oru marriage ayi 10 days kuda agala ipdi oru accidentally oru visyam nadathutu oru arthal solalanalum paravala athukunu ellarum potukitu avolo sambam vidurimhala neengalum unmaiya va human thana chaiiiii . Kandipa intha marri pesuravangalukum allah bathil kuduparuu 💔😒
இஸ்லாத்தில் யார் யாருக்கும் சாபம் கொடுப்பதற்கு அனுமதியில்லை. இறைவனின் சோதனைக்கும் மற்றும் தண்டைனக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. சோதனைகள் வரும் போது யார் இறைவனை நெருங்குகின்றார்களோ அது சோதனை மாறாக அது தண்டனை அல்ல. உதாரணமாக ஒருவருக்கு நோய் வரும் போது அவர் இறைவனிடம் அதிகம் நெருக்கம் காட்டினால் அது அவருக்கான சோதனையே தவிர தண்டனையல்ல. மேலும் ஒருவருக்கு அதிகம் செல்வம் கொடுத்தும் அதன் மூலமாக அவர் இறைவனிடமிருந்து தூரமானால் அது அவருக்கான தண்டனை. இறைவன் மிகவும் கருணை மிக்கவன் மற்றும் மன்னிப்பவன். கபூரூர் ரஹீம். இங்கு நான் கூற வருவது இர்பான் உழைப்பது ஹலாலா அல்லது ஹறாமா என்பது பற்றியல்ல. ஏன் நீங்கள் அவருக்கு சாபம் கொடுக்கின்றீர்கள்? அல்லாஹ் மன்னிப்பவர்களை அதிகம் நேசிக்கின்றான். எதற்கும் ஒரு முறை இருக்கின்றது அதனை எடுத்துக் கூறுவதற்கு. அதைவிட்டு விட்டு இவ்வாறு பதிவிடுவது தனிமனித மனதை புன்படுத்தும் செயல். இஸ்லாம் எளிமையான மார்க்கம். அது எளிமைைய விரும்புகின்றது. இறைவனும் இர்பானும் பார்த்துக் கொள்ளும் விடயத்தில் தங்களைப் போன்றவர்கள் ஏன் பத்வா கொடுக்கின்றீர்கள். இங்கு யாரும் மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுவதில்லை காரணம் நாம் மனிதர்கள் தவறுகள் செய்யக்கூடியவர்கள். நபிமார்களோ அல்லது மலக்கு மார்களோ அல்ல. இறைவனின் தண்டணை மற்றும் சோதனை எது என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நோய் ஒரு தண்டனை அல்லது விபத்து ஒரு தண்டனை என்று உங்களிடம் பத்வா கூறிய அந்த மேலான இமாம் அல்லது முப்தி யார்?