அடியேனின் நமஸ்காரங்கள் 🙏அருமையான தலைப்பு. காலம் கருதி ஆற்றப்படும் மிகவும் அவசியமான அற்புதமான சொற்பொழிவு. தங்களது பணி மென்மேலும் சிறக்க கடவுள் ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
நிறைவுப் பகுதி - கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருமையாய் மூட நம்பிக்கையும்முழு நம்பிக்கையும் என்ற தலைப்பில் தொடர்ந்து உரைத்ததிலிருந்து - 'யாரோ ஒரு ஸ்தீரி விதவை ஆகி விட்டால் அவருக்கு மொட்டை அடித்து வெள்ளை புடவை உடுத்தி அவளுக்கு இல்லாத கஷ்டத்தை கொடுப்பது. பெண்களுக்கு உரிமை இருக்கிறதா? கோயிலுக்கு போனால் ஆண்களை நிறுத்தி வைக்கும் இடத்தில் பெண்களை நிறுத்தி வைக்கிறார்களா? இது இப்போது எங்கேயோ உச்சநீதிமன்றம் அளவிற்கு நடக்கிறது. ஆண்கள் பெண்கள் வேறு இடத்தில் உயர்வு தாழ்வு பார்ப்பது கிடையாது. ஆனால் இந்து மதம் தான் பழையது என்று அனைவரும் அறிவார்கள். மற்ற 2 மதத்திற்கும் தேதி உண்டு. அது தோன்றி அன்றிலிருந்து இன்று வரை வந்திருக்கிறது. இன்னொரு மதம் நமக்கும் பிற்பாடுதான் தோன்றியிருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றிய காலத்திற்கு முன்னிருந்தே நாம் தமிழர்களாய் இருந்து வருகிறோம் என கூறுகிறோம் அல்லவா? தீடிரென்று சிலர் இந்து மதத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு கிடையவே கிடையாது. தமிழர்களாய் இருக்கும் நாங்கள் வேறு ஹிந்துக்களாய் இருக்கும் நீங்கள் வடக்கத்திக்காரர்கள் என்று சொல்வார்கள். எந்த வடக்கத்தியும் எதற்கும் இல்லை. எல்லாரும் தமிழர்கள் தான். இந்து தர்மத்தில் தான் தமிழ் என்று சில மேடை பேச்சு எல்லாரிடத்தில் உண்டு. நாம் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என காத்துக் கொண்டு இருக்கிறோம்.உட்கார்ந்து புஸ்தகத்தை திறந்து படித்து ஆராய்ந்து ஆராய்ச்சி பண்ண நேரமில்லை. யாராவது ஒன்று சொன்னால் அதை சரி என்று ஒத்துக் கொள்வோம். அடுத்த நாள் காலை நாம் வேலைக்கு ஒடனுமே. இது நாளைய நிலைமை. யாராவது ஏதாவது சொன்னால் கேட்போம். கோவிந்தா கிருஷ்ணா என்று கூறி 2 புஷ்பத்தை பெருமான் திருவடியில் சமர்ப்பிப்போம். அவ்வளவு தான் எங்களால் முடிந்தது என்று இப்படி இருக்க வே தான் பண்டைய கால நூல்கள் எல்லாம் அதன் ஆழமான அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமலே இவ்வளவு தான் போலிருக்கிறது என்று விட்டு விடுவோம் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதுமானது. இதை அறிந்து கொள்ள கஷ்டமேயில்லை. ஈடுபாட்டுடன் கேட்டால் தானே எல்லாம் விளங்கிவிடும் இப்படி புரியும் போது ஏற்படும் சந்தோஷம். அப்போது அடையும் இன்பம் எவ்வளவு என்று கூற இயலாது. அதை நாம் தான் அனுபவித்து பார்க்கனும். உண்மையாக பார்த்தால் நம் இந்து தர்மத்தில் தான் மூடநம்பிக்கைக்கு இடம் கிடையாது. மற்ற தர்மங்களில் வேற்று நாடுகளில் எந்த அளவிற்கு மூடநம்பிக்கை இருக்கிறது என்பதை பார்க்கவில்லை. அவ்வளவு தூரம் ஆச்சர்யமாய் இருக்கும். இப்படி கூட வா மூடநம்பிக்கை ? நாம் தேவலை போலிருக்கிறது. மூடநம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கு என்பதை ஒருவர் கேலி பண்ணி படம் எடுக்கலாம். ஒரு சிலருக்கு ஒரு நாற்காலியில் தான் உட்காரனும். அந்த நாற்காலியில் அமர்ந்தால் தான் கதை எழுதவ முடியும் என்ற மூடநம்பிக்கை. பகவானின் பிரபாவம் தெரிந்தால் எங்கும் எழுதுவார். ஏனெனில் பற்றுவது பெருமானை முழுநம்பிக்கையுடன் பற்றுகிறோம். 108 படி பால் பெருமாளுக்கு திருமஞ்சனம் கொடு. அவர் திருமேனிக்கு இது பல மோ இந்துக்களுக்கே இந்த கேள்வி பிறக்கும். வசிஷ்டர் விசுவாமித்திரர் காலத்திலிருந்தே கேள்வி கேட்கும் மரபு நம்மிடையே நிலவி வருகிறது. கேளுங்கள் விடை கொடுங்கள் என தைரியமாக கூறுவர்கள். வாத்தியாரிடத்தில் கேள்வி கேட்டு நம் சந்தேகத்தை தீர்த்து கொள்வது மட்டும் முக்கியமல்ல.. பின் பதில் கிட்டியவுடன் அதை சரிவர கடைபிடித்தே ஆக வேண்டும். ஆக திறந்த உள்ளத்துடன் ஒரிரண்டு நல்ல விஷயத்தை பற்றி பேசுவோம் என்று கூறி இப்பகுதியை நிறைவாக நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
முதல் பகுதி - மூடநம்பிக்கையும் முழுநம்பிக்கையும் என்ற தலைப்பில் அத்புதமாய் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் விபுலமாய் விளக்கத்தை அளித்ததிலிருந்து சில - அநந்யஸாத்தே ஸ்வாபிஷ்டே ... எனதுவங்கும் ஸ்லோகத்தின் படி பெருமானிடத்தில் நாம் செய்யும் சரணாகதியை பற்றி இந்த ஸ்லோகம் சொல்லுகிறது. நமக்கு வேறு வழி தோன்றா விட்டாலும் நாம் எந்த பலத்தை அடைய வேண்டும் என ஆசைப்படுகிறோமோ அதை அடைவதற்கு பகவானின் திருவடிகளை இறுகப்பற்றி சரணம் சொல்லி சரணாகதி அடைவதே ஒரே வழி.நம்மால் ஆகாது என்று தெரிந்து கொண்டாலும் யாரால் ஆகுமோ அவரைப் பற்றி பொறுப்பை ஒப்படைப்பது தான் புத்திசாலித்தனம். ஆக அநந்யஸாத்தே ஸ்வாபிஷ்டே...என்ற பிரமாணப் படி வேறு ஒன்றும் வழி இல்லாமல் போனால் அப்போது சரணாகதி செய்யலாம். பகவானிடத்தில் முழு நம்பிக்கை வைத்து சரணாகதி பண்ண வேண்டும் என தெரிகிறது. / இதையே எல்லா ஆஸ்திகர்களும் நியாயம் என ஒத்துக் கொள்வார்கள். இது நம் நாட்டில் மட்டும் தான் ஹிந்து தர்மத்தில் மட்டும் தானா என்று பார்த்தால் நிறைய மூட பழக்க வழக்கங்களும் இதில் காணப்படுகின்றன. ஒரு சிலர் கடவுளிடத்தில் முழுநம்பிக்கையுடன் இருப்பதே மூடநம்பிக்கை என்று கூறுகின்றனர். வேறு சிலர் தாங்கள் பிடித்திருக்கிற மூடநம்பிக்கையையே கடவுள் என்று முமு நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். இப்படி இருதரப்பட்டவர்களையும் நாம் பார்க்கிறோம். ஆக முழு நம்பிக்கை வைக்க வேண்டிய இடத்தில் மூடநம்பிக்கை என்று சொல்வதுண்டு. சிலர் தாங்கள் எதை மூடத்தனமாய் பிடித்திருக்கிறார்கள அது தான் கடவுள் என்கிறார்கள். அவர்கள் கதி என்ன? முழு நம்பிக்கை வைக்க வேண்டிய இடத்தையே கடவுளையே மூடநம்பிக்கை என சொல்வதுண்டு. அவர்களுடைய நிலை என்ன? எதற்கு இந்த தலைப்பை மாற்றி வைத்திருக்கலாமே என்றால் எதை விடனுமோ அதை முதலில் தெரிந்து கொள்வோம். எதை பற்றனுமோ அதை அடுத்து அறிந்து கொள்வோம். யாராவது ஒருத்தருக்கு கெட்ட பழக்கம் இருந்தால் அதை முதலில் போக்கனும் என தாய் தந்தை ஆசைப்படுவார்கள் அதன் பின் நல்ல பழக்கம் வரட்டும் என இருப்பார்கள். முதலில் அஜீரண வியாதி தொலைந்தால் தான் லட்டு சாப்பிட முடியும். அது போல் மூடநம்பிக்கை இருக்க வே ஒரிடத்தில் முழுநம்பிக்கை ஏற்க மறுக்கிறது. ஆக அந்த மூடநம்பிக்கை தொலைந்து விட்டால் தானே முழுநம்பிக்கை வந்துவிடும். அடுத்து அந்த இந்து தர்மத்தை குற்றம் சொல்வார்கள் .நம் ஸனாதன தர்மத்தில் மட்டும் தான் நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கு. அதனாலேயே நாம் கெட்டு போகிறோம் நரபலி கொடுக்கிறார்களே அதை வேதம் தான் நரபலி கொடுக்க சொல்கிறதா? உடம்பில் மண்ணை பூசிக்கொண்டு ஏதே தோ செய்கிறார்கள். அங்கப்ரதக்ஷணம் செய்வது முதுகில் அலகு குத்திக் கொள்வது போன்றவைகள் இந்து தர்மத்தில் தான் இருக்கு. வேறு தர்மத்தில் கிடையாது. இது போல் தப்பான நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் நாம் வளருவதே கிடையாது. யோசித்து பார்த்தால் இன்னன்ன நக்ஷத்திரம் உயர்ந்தது இன்னன்ன நக்ஷத்திரம் தாழ்ந்தது என்பதை வெளகீக திருஷ்டாந்தத்துடன் எடுத்துரைத்தார். யாராவது ஒரு கைம்பெண் வந்துவிட்டால் சகுனம் சரியில்லை வாசலில் போக வேண்டாம் என்றும் யாருக்கு குழந்தை இல்லையோ அந்த பெண்களை கூப்பிடாதீர்கள் என்று இந்த மாதிரி மற்ற மதங்கள் சொல்வதில்லையே என்று கூறி அத்புதமாய் இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.