என் உடன் பிறந்த ரஹீம் தம்பிக்கு பிடித்த பாடல் இன்று அவன் இந்த உலகை விட்டும் என்னை விட்டும் சென்றுவிட்டான் 10/09/2024 என்றும் உன் நினைவில் ரபிக் 😰😥😢😭😓😫😩
திண்டுக்கல்லில் பார்த்த படம். சிறு வயது.அதுவும் இளவயது. என்னவள் பெயரும் விஜி. முதல் காதல், மனம் மறவா காதல். அது மறைந்து விட்டால், மனம் படும் துயர் என்ன... இன்று அவள் என்னுடன் இல்லை. மூச்சு வாங்குது ஒரு ஜீவன்...
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : தேவா பெண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே பெண் : கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில் உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன் உன்னை தாய் போல் காத்திருப்பேன் ஆண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள் வாழும் தொடர் கதை தான் உந்தன் தேசம் வளர் பிறை தான் பெண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே பெண் : உன்ன பாத்து ஆச பட்டேன் அத பாட்டில் சொல்லி புட்டேன் நீயும் தொட நானும் தொட நாணம் அது கூச்சமிட அட்டை போல் ஒட்டி இருப்பேன் ஆண் : இந்த காதல் பொல்லாதது ஒரு காவல் இல்லாதது ஊத காத்து வஞ்சி மாது ஒத்தையில வரும் போது போர்வை போல பொத்தி அணைப்பேன் பெண் : ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி ஆண் : நீதானே மானே என் இளஞ்ஜோடி உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி பெண் : நித்தம் தவித்தேன் நீ வரும் வரைக்கும் ஆண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே பெண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே ஆண் : புள்ளி மானு பெண்ணானதா கெண்ட மீனு கண்ணானதா பூ முடிச்சி பொட்டு வச்சி புன்னகையில் தேன் தெளிச்சு பக்கம் ஒரு சொர்க்கம் வருதா பெண் : அட வாயா கைய தொடு பள்ளி பாடம் கத்து கொடு ஆவணியில் பூபடைஞ்சு தாவணிய போட்டு கிட்ட சின்ன பொண்ணு ஆசை விடுதா ஆண் : ஆவாரம் பூவாக விடுவேனா ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா பெண் : தேனாறும் பாலாறும் கலந்தாச்சி அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு ஆண் : என்ன படச்சான் நீ துணை வரத்தான் பெண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே பெண் : கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில் உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன் உன்னை தாய் போல் காத்திருப்பேன் பெண் : முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே