18 Vayasula eirudhu 51 vayasuvarai enku oru sonthamaha oru vitu ella na ulikiran kasda patran analum nan allahva oru oothum tholama eirudathu ella kadhu kontu eirukan enkum kalam neram varum varai ameen❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எனக்கு ஒரு நோய் வந்தது என் உடல் முழுவதும் இருக்கின்ற தோல்கள் காய்ந்து காய்ந்து விழும் இந்த நேரத்தில் நான் இறைவனை திட்டினேன் என்னை விட பாவம் செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்க ஏன் எனக்கு இந்த நோய் வர வேண்டும் என்று அழுது புலம்பினேன் என்னென்னவோ வைத்தியங்கள் செய்து பார்த்தேன் ஆனால் அது குணமடையவில்லை வைத்தியர்கள் இதற்கு மருந்து இல்லை என்று சொன்னார்கள் என் தலையிலும் வரத் தொடங்கியது ஒரு நாள் நான் அப்துல் பாசித் மௌலவி அவர்களின் பயானை கேட்டுக் கொண்டிருக்கும்போது உள்ளத்தில் அவன் வெளிச்சத்தை உண்டாக்கினான் அவனைப் பற்றி அறிந்து கொண்டேன் அவனுக்கு நன்றி கெட்ட மனிதனாக இருப்பதை அறிந்து வருத்தப்பட்டேன் அன்றிலிருந்து தொழுகையை கையில் எடுத்தேன் இன்று என் உடல் முழுவதுமாக குணமடைந்து நான் நன்றாக இருக்கின்றேன் அல்லாஹ்வின் உதவியால் பரிபூரண சுகத்துடன் வாழ்கின்றேன் இப்பொழுது என் தேவைகள் அனைத்தையும் நான் அவனிடமே கேட்கின்றேன் அவனே எனக்கு அனைத்தையும் நிறைவேற்றி தருகிறான் அல்லாஹ் அந்த சோதனையின் பின் எனக்கு பல வெற்றிகளை தந்தான் அவன் உதவியால் நான் இன்று மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே