தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் அன்பு வணக்கம்🙏🙏🙏 நான் யாழ்பாணத்தில் இருந்து உங்கள் வேணுஜன் எங்களுடைய இந்த வலையொளி தளமானது எமது பிரதேசங்களின் உள்ள தனித்துவமான பழமையான பல விடையங்களை ஆவணப்படுத்தவும், இன்றைய புதுமையான பல படைப்புகளையும் படைப்பாளிகளையும் எதிர்கால சந்ததியினர்கு தெரியப்படுத்தவும் .அத்தோடு எமது பிரதேசங்களின் கலை ,கலாசாரம் , உணவு, பண்பாடுகள், விழாக்கள் மற்றும் பல முக்கிய நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம்.🤘🤙
DOCUMENTRY | VLOGS | TRAVEL | REVIEW
தொடர்ந்தும் எங்களின் இவ் வலையொளி தளம் ஊடாக உங்களுடன் பயணிக்க தங்கள் அனைவரின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.....❤️
நன்றி வேணுஜன், உங்கள் ஆவணப்படுத்தும் காணொளிகளுக்கு வரவேற்பும் பாராட்டுகளும்! பண்ணாகத்தில் பாரம்பரியங்கள் பல மற்றைய இடங்களைவிட பாதுகாக்கப்பட்டு வருவதற்கு அவ்வூர் மக்களுக்கு எமது நன்றிகள். பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்கள் அப்படியே மாற்றங்களும் புதுப்பித்தலும் இல்லாது புனருத்தாரண வேலைகள் மட்டும் துறைசார் வல்லுனர்களால் செய்யப்பட வேண்டும். உதாரணமாக காட்சிப்படுத்தப்பட்ட சுமைதாங்கி பேணப்படுவதற்கு நன்றி. ஆனாலும் அது அதன் வர்ணப்பூச்சினால் சிறப்பிழந்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறமுடியாதவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை கவலையே! தொல்பொருள் அங்கீகாரம் UNESCO போன்ற நிறுவனங்களிடமிருந்து பெறுவதாயின் அவை மாற்றங்களின்றி இருப்பது அவசியமாகும். இது எமது புராதனக் கோயில்கள், கேணிகள் என்பவற்றிற்கும் பொருந்தும். யாழ் பல்கலைக்கழகத் தொல்பொருட் திணைக்களத்திற்கு இவைபற்றிய மக்களிடையேயான விழிப்புணர்வூட்டல் மற்றும் பேணிப் பாதுகாப்பதில் பெரிய பொறுப்புண்டு.
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக முன்பு நடந்தது வட்டுக் கோட்டை தீர்மானம். ஜே.ஆர். ஜெயவர்தன தான் ஆட்சிக்கு வருவதற்கும் அப்படி வந்தால் தனக்கு பலமான எதிர்க்கட்சி இருக்கக் கூடாது என்று அமிர்தலிங்கத்தை எதிர்க்கட்சி தலைவராக ஆக்குவதற்கும், ஸ்ரீமாவிற்கு தமிழர்களின் வோட்டுகள் போகக் கூடாது என்பதற்காக போடப்பட்ட தீர்மானமே வட்டுக் கோட்டை தீர்மானம். இதில் பெருமை பட ஒன்றும் இல்லை. பொய்களை பெருமையாக எடுத்துக்கொண்டால் அந்த இனம் எப்படி .... கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.