✨📿🌼ஓம் 🙏 நமசிவாய 🌼📿✨ துயர் மறைந்து போகவே! நமசிவாய வாழ்கவே! பலம் நிறைந்து வாழவே! ஈசன் நாமம் போற்றவே!...... ஜடா முடியில் சூலம் ஏந்தி ஆடுகின்ற என் சிவா!.. விடாது வேண்டும் உந்தன் பக்தன் வார்த்தை இன்று கேட்கவா! ... பராரி கோலம் சூடி நின்று ஆடும் தில்லை நாதனே! கடைக்கண் பார்க்க தொல்லை எல்லாம் எம்மை விட்டு போகுமே!.... உடுக்கை சத்தம் கேட்டுவிட்டு சொக்கி போகும் வேளையில், அடுக்கடுக்கு துன்பம் யாவும் ஓடிப் போகும் மூலையில்!...... ஜகம் நடுங்க ருத்ரதாண்டம் ஆடுகின்ற கூத்தனே!... பயம் ஒடுங்க எங்கள் நெற்றி தீண்டி போக வேண்டுமே!... (துயர் மறைந்து போகவே,,........) அளந்து பார்க்கும் பூமி எங்கும் உந்தன் பாதம் கோடியே!..... மலர்ந்து வாசம் வீசும் பூக்கள் சொல்லும் உந்தன் ஜாடையே!... தினவெடுத்து மற்றவர்கள் வாழ்வை சீண்டி பார்க்கையில்!... கணக்குகள் எடுத்து வைத்து தீர்ப்பை நீயும் வாசிப்பாய்!.... தினம் தினங்கள் துன்பம் செய்து நிலங்கள் கொன்று வீசினால், நிலத்தைப் போல மௌனம் காத்து நடப்பதெல்லாம் பார்க்கிறாய்!.... பொறுத்துப் பார்த்து வாய்ப்பு தந்து நிலம் பிளந்து சொல்கிறாய், இறுதியில் வெல்வதென்ன , வெற்றுக் கைகள் காட்டுவாய்!..... (துயர் மறைந்து.......) விடாது ஓடும் ஆறு எல்லாம் உந்தன் பாதம் தேடியே!.... அடாது பெய்யும் வானில் கூட உந்தன் ரூபம் கோடியே!.... வெடித்து பாயும் வெள்ளம் போல துன்பம் நீங்கி ஓடட்டும்., ஜகத்தைக் காக்க பூமி எங்கும் உந்தன் பாதம் ஆளட்டும்!.... அலைக்கழித்து மண்ணில் தேடி ஓய்ந்து போகும் நேரத்தில் , ... துளித்தெழுநவாழுகின்த்து வாழுகின்ற ஜீவன் ஒன்றை மீட்டுவாய்!..... துடித்து நின்று வாடி போகும் வாழ்வின் நீண்ட தாகத்தில் . , மனம் ஒடுக்கி நீரைத் தந்து காயம் தீண்டி மாற்றுவாய்!.... (துயர் மறைந்து.....) அடர் இருட்டில் வாழும் இந்த வாழ்க்கையற்ற வாழ்விலே, சுடர் கொளுத்தி போகும் உந்தன் நெற்றிக்கண்ணின் தீரமே!..... திரும்பிப் பார்க்க காலம் எங்கும் சூன்யம் சூலும் தோரணம், விரும்பி உந்தன் தாளை தீண்ட , வாழ்க்கை ஆகும் பூரணம்!... நெருப்பில் இங்கு சுத்த பத்தம் மிச்ச சொச்சம் ஏதடா , கனல் விழுந்து பாயும் போது தீமை இங்கு கூறடா, வெறுப்பு பேச்சு வீணர் வீச்சு இந்த மண்ணை ஆளுமா, அவன் விழிகள் பார்க்கும் போது , மொத்தம் யாவும் வேகுமே!... (துயர் மறைந்து.....) திசைகள் எங்கும் சூழுகின்ற , காற்றைப் போல் உளாவினாய், தசைகளில் நிறைந்து தேடும் வாழ்வின் அர்த்தம் காட்டினாய்! ..... இசை அனைத்தும் இன்பமாக உந்தன் கால்கள் காரணம் அசைந்து நிற்கும் ஜீவராசி தன்னில் உன்னை தேடனும்!.... சுரம் பிரித்து தாளம் பாடும் நேரம் நெஞ்சம் எங்கோ போய் வரும் நிறம் உணர்ந்து துள்ளும் நெஞ்சில் வண்ண வண்ண ஓவியம்!..... உணர்ந்து கொள்ளும் பக்தருக்கு காற்றை எங்கும் பூட்டினாய் புரிந்து கொள்ள தேடுவோர்க்கு சுவாச சூட்டை காட்டினாய்!... (துயர் மறைந்து......) அடர்ந்த வானின் மாறும் பாதை திட்டமிட்ட காலமே மறைந்து வாழும் மின்னல் யாவும் உந்தன் கையில் கோலமே! ...... உறைந்து மண்ணை தேடி ஓடும் மாரி எங்கும் உன் முகம் கரைந்து வெப்பம் ஆவியாகி மீண்டும் மண்ணில் நின்றிடும் !..... பதம் குழைந்து வாடி நின்று ஏங்கி நிற்கும் போதிலே நிலைத்து நிற்க பாதை தேடி ஓடும் எங்கள் கால்களே வதம் புரிந்து வேட்டையாடி தீமை தின்று மாற்றுவாய் சிதம்பரத்தின் வானம் காட்டி வாழ்வின் அர்த்தம் காட்டுவாய்!.... (துயர் மறைந்து.....) ஓம் நமசிவாய 🙏🌼
Enaku kasu, naga ethum venam appa en purusana matum enaku thirupi kodu appa 🙏 en kita irundhu pirichetanga en pullaike appa venum inum 5 days la thedi varanum appa 🙏 🙏🙏🙏
என் அப்பன் அல்லாவா🙏🪔 ஓம் நமசிவாய என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் அப்பனே🪔🙏 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க வேண்டும் என் ஐயனே🙏🪔என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ வேண்டும் குடும்பத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த சூழலையும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் ஐயனே அப்பனே 🪔🙏🙏🙏
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v2VNDm9MMR4.htmlsi=t1jFuFm-HEoG1ll8 Rock version of Shiva thandava stotram stanza 1 to 4, aigiri nandini stanza 1 translation sung in tamil essence in english