இந்தப்பாடல் அனேகமானோர் நினைப்பதுபோல் சிவரஞ்சனி ராகம் அல்ல; நீலமணி ராகமாகும். இவை இரடையும் கேட்கும்போது ஒரேமாதிரியாகத்தான் தோன்றுவன. இருந்தும், வெவ்வேறானவை. சிவரஞ்சினி: 22ஆவது தாய்ராகமாகிய கரகரப்பிரியாவின் சேய்; ஆ: சரிகபதச், அ: ச்தபகரிச நீலமணி: 27ஆவது தாய்ராகமாகிய சரசாங்கியின் சேய்; ஆ: சரிமபதநிச், அ: ச்நிதபமரிச ஆனால், நீலமணியின் மத்திமத்தை சட்ஜமாக கிரகபேதம் செய்யும்போது, தோன்றும் `கற்பூரபரணி அல்லது விஜயநகரி` இராகத்தின் மத்திமத்தை (பிரதி) தவிர்த்துப்பார்த்தால் அது சிவரஞ்சினியே!! அல்லது, சிவரஞ்சினியின் பஞ்சமத்தை சட்ஜமாக கிரகபேதம் செய்யும்போது, தோன்றும் 'சாமப்பிரியா அல்லது சுசாமா அல்லது சூத்ரதாரி` ஆகிய ஒன்றின் சுரத்தானத்தில் காகலி நிசாதத்தை சேர்த்தால் அதுவே நீலமணி!! அதுதான் அந்த மயக்கம்.!