OFFICIAL RU-vid CHANNEL OF "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
கு. ஞானசம்பந்தன் - தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார்.
மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார்.
நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது. 1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.
சார் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மைதான்! சில குறிப்பிட்ட இரண்டு மூன்று சதவீதம் உள்ள கூட்டம் சேர்ந்த மக்களின் மண்டை ஓட்டினை ஆராய்ச்சி செய்தால் அவர்களுடைய ஜாதகமே தெரிந்து விடப் போகிறது 😂😂😂😂
ஞானம் என்கிற ஒருசிறுபொரியாவது ஏற்பட்டால்தான் இறைவன் இறுக்கிறார் என்கிறநம்பிக்கை மனதில் ஏற்படும் அது ஏற்படாதவர்கள் எதிர்வாதத்தை மிகதிறபையாக எடுத்துவைத்து எந்ததெய்வங்களும் புரானங்களூம் இல்லை அதை கதை என்றே சொல்வார்கள் வீன் விவாதம் செய்வதைவிட அவர்கறுத்து அவருக்குபெரிது என மதிப்பழித்து விலகுவதே உத்தமம் தூங்குகிறவனை எழுப்பமுடியும் தூஙாகுவதுபோல் நடிப்பவனை எழுப்பமுடியாது அவரவர் உணறும் வரை அவருக்கு அந்தபிராப்தம் இல்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் அதுவே இன்றையசூழ்நிலைக்கு உகந்தது வாழ்கபாரததேசம் வளர்க பக்திமார்கம்
இந்திரனை ஜெயித்தவன் அதனால் அவன் பெயர் இந்திர ஜித்தன் என்பது தவறு இந்திரன் என்ற பெயரில் உள்ள அர்த்தம் அவன் தான் முதன் முதலாக சக்கரத்தை கண்டு பிடித்தவன் அதாவது முதல் இயந்திரத்தை உருவாக்கி அதனை இயக்கியவன் அதனால் அவன் பெயர் இயந்திரன் என்பது மருவி இந்திரன் என்று வழங்கப்படுகிறது அது தான் இயந்திரம் கண்டு பிடித்த சித்தன் என்பது பொருள் இது தான் அவன் பெயருக்குரிய காரணம் ஆகவே இந்திர சித்தன்
ஆஹா! ஆஹா! அருமையான நுட்பமான பதிவு ஐயா. ஆரம்பத்தில் புரட்சித்தலைவர் எம்ஜியார் டைரக்ஷனின் முக்கியத்துவம் கொடுப்பவர் இருந்தும் இப்படத்தில் அவர் அறிமுகத்தைப் போகிற போக்கில் காட்டுவார்கள் என்பதில் தொடங்கி நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயமும் அருமை. அசோகன் அவர்கள் புருவத்தைத் திருகுவார் என்பதை நீங்கள் குறிப்பிட்ட போது வாய்விட்டுச் சிரித்தேன். 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்' பாடல் காட்சியில் குமரியை அங்கே கைகளில் ஏந்துவதையும் இங்கே எம்ஜியார் அவர்கள் கைகளில் ஏந்துவதையும் நீங்கள் குறிப்பிட்ட பிறகு தான் அந்த நுணுக்கமான காட்சியமைப்பை கவனித்தேன். அபாரம் ஐயா! அதேபோல அந்தக் குழந்தையை அதன்பிறகு அவர் ஆசிரமத்தில் விட்டுவிட்டு மீண்டும் முரட்டு சிங்கிளாக வலம்வருவார் என்று இன்றைய சொல்லாடலோடு ஒப்பிட்டுக்கூறியது உங்களுக்கேயுரிய தனித்துவம். சைக்கிள் ஸ்டாண்ட் காட்சியைப் பின்னாளில் வந்த பாட்ஷா படக்காட்சியோடு ஒப்பிட்டுக்கூறியது அருமையோ அருமை! ரிக்ஷாவை விட்டு இறங்காமல் எம்ஜியார் சண்டைபோடும் காட்சியைத் தாங்கள் விவரித்த பாங்கு! அடடா! ரசனையின் உச்சம்! புரட்சித்தலைவரின் சுருள் வாள் சண்டை, அற்புதமான வசனங்களோடு இப்படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரைப்பற்றியும் நீங்கள் விளக்கிய விதம் உங்களுடைய பண்பிற்குச் சான்று! வழக்கம் போல இயல் டிஜிட்டல் குழுவினர் உங்கள் இணையற்ற பேச்சிற்கு ஈடு கொடுத்து பொருத்தமான காட்சிகளை சரியான இடத்தில் சேர்த்து பதிவுக்கு மேலும் மெருகேற்றிவிட்டனர். வாழ்த்துகள் ஐயா! குறிப்பு: கல்கி திரைப்படம் குறித்தான உங்கள் பார்வையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் ஐயா 🙏
Ayya… Baasha la irukkura scene sonninga sari sari unga nanbar yedhu sonnalum sari seynjalum sari haha unga mel irukkum mariyadha kurathukolladheerghal !! 🙏🏽🙏🏽
பார்த்தேன் ரசித்தேன் மக்களின் மனத்தேன் M.G.R என நினைத்தேன்...... """ வாழும் காலத்தில் வந்தாரை வாழவைத்து, வீழ்ந்தாரை எழவைத்து, வையத்தின் படு நிலவாய்...... வாழ்வுக்கோர் புத்துணர்வாய்...... நாட்டை நல்வழியில் ஆண்ட நாடோடி மன்னனாய்...... இறவாப் புகழ் கண்ணனாய்...... பாரதத்தின் ரத்தினமாய்...... என்றும் உன் நினைவலைகளில்...... பதிவுக்கு நன்றி ஐயா.
வஞ்சிக்காண்டமும் உங்கள் வார்த்தை வழி கேட்க ஆவல் கொண்டு உள்ளோம். முழுமையாக எடுத்துவிடுங்கள்ஐயா. புகார்காண்டம் போல் மதுரைக்காண்டம் சுருக்கம் தொகுப்பு தேவை ஐயா
ஐயா , நீங்கள் கூறிய விளக்கம் சரி என்றால் ஒருவர் அறத்தை தவறிவிட்டு பின் அதற்கு ஒரு விளக்கத்தை குடுத்தால் சரியாகி விடுமா? விளக்கத்தில் கூறிய விளக்கத்தி ஏன் கதையில் எந்த இடத்திலும் நேரடியாக கூறவில்லை என்றும் கூறங்கள்? அப்படி நீங்கள் விளக்கம் சரி என்றால் ஏன் அதை ராமன் அதை கூறவில்லை , ஒருவரின் செயலுக்கு அடுத்தவர் விளக்கம் கூறுவது எப்படி சரியாகும் ? இவை அனைத்திலும் உங்கள் கருத்து சரி என்றால் , தன் தங்கையை அவமானப்படுத்திவர்க்கு பாடம் புகட்ட அவர் மனைவியை தூக்கி சென்றதும் சரியான செயல்தானே
கடவுளின் அவதாரமே ஆயினும் மனிதராக பிறந்ததால் கடைசி வரையிலும் எந்த மாயாஜால வித்தைகளையும் சைய்யாத இராமனின் இராமாயணத்தை நல்ல பண்பாடு உள்ளவர்கள் 'வெறும் கதை' என்று ஒருபோதும் கருதக் கூட மாட்டார்கள்
அய்யா, தங்கள் பேச்சை மிகவும் லயித்து கேட்பேன். நீங்கள் கூறியது போல முழுமையான அர்பணிப்பு உங்களிடமும், அவரிடமும் உண்டு. அவரை பல பேர் பல விதமாக கூறலாம். அது அவரவர்களின் பார்க்கும் தன்மையை பொருத்து மாறுபடுகின்றது. ஆனால், என்னை பொருத்தவரை திரையுலகத்திலும், அரசாட்சியிலும் அக நிறை கொண்ட சக்கரவர்த்தி அவரை தவிர வேறு யாரையும் என்னகம் ஏற்கா. ( அவரைப் பற்றி கேள்விபட்டுள்ளேன் விபரமறிந்து, பெருந்தலைவர் காமராஜரத் தவிர) மன தெய்வம் அய்யா அவர்.
"..பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ" என்று இராமன் சொன்னது இலக்குவனை சிறுமைப்படுத்த அல்ல. தனக்கு கிடைத்த ஆட்சியை வேண்டாம் என்று அண்ணனிடம் ஒப்படைக்க வந்த பரதனோடு, அண்ணனை அழித்து ஆட்சியை பெற நினைக்கும் சுக்ரீவனோடு ஒப்பிட்டே அவ்வாறு கூறினார்.
பழைய நினைவுகளில் மூழ்கி... கண்ணீர் ததும்பக் கேட்டேன். நம் குருநாதர் அவர்களைப் பற்றிய நேர்மையான பதிவு. என்றும் மறக்க இயலாத பேராசான் அவர். நினைவில் என்றும் நிற்கும் அவரை இன்னும் ஆழமாய்ப் பதித்தமைக்கு நன்றிண்ணே! அன்புடன் பேரா.சாகுல்
நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும். நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.