இந்தியாவில் தமிழ்நாட்டை நடுவமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மூத்த பத்திரிகை - ஊடகவியலாளர் தி.மு. விசுவநாத் என்பவரால் நடத்தப்படும் ஊடகம் டிஎன்டிவி தமிழ் ஊடகம் மற்றும் டிஎன்டிவி இங்கிலீஷ் மீடியா TNTV Tamil Oodagam RU-vid and TNTV English Media RU-vid channels.
வளர்மெய்யறிவான் எனும் தமிழ்ப் பெயர் கொண்ட விசுவா விசுவநாத் எனும் இவர், டிஎன்டிவி பன்னாட்டு செய்தி இணையம் (TNTV International News Network) எனும் செய்தி நிறுவனத்தின் நிறுவனர்.
பத்திரிகை, காட்சி ஊடகங்களைத் தொடங்கிக் கொடுப்பது, செய்தியாளர் பயிற்சி, செய்தி ஆய்வு உள்ளிட்ட செய்தித் துறை தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்கிறது.
காலைக் கதிர், ஜெயா டிவி, புதிய தலைமுறை டிவி, சன் டிவி உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் செய்தியாளர், தலைமைச் செய்தியாளர், மூத்த ஆசிரியர் எனப் பொறுப்பு வகித்தவர் விசுவநாத்.
நன்கொடை அனுப்ப :
T.M Viswanaath Account Number: 77770107070225 Fedaral bank ( Jupiter) IFSC Code: FDRL0007777 SWIFT code - FDRLINBBIBD UPI handle: 8012271745@jupiteraxis
Google Pay, Phone Pe, PayTM Number +91 80122 71745
அய்யா,கிபி 2,3-ஆம் நூற்றாண்டுகளில் கன்னடம் என்னும் மொழி உருவாகவில்லையல்லவா ? .அப்படியானால், அவர்கள் திரிந்த தமிழ் பேசிய தமிழராகத்தானே இருக்க வேண்டும். ?.அவர்களை பின்னின்று இயக்கியது பிராமணீயமாக இருக்க வேண்டுமல்லவா? .
யார் இந்த பார்ப்பான்-20 +++++++++++++++++++++ சங்க காலம் தொட்டு தமிழ் மரபு என்பது சமணம் சார்ந்தே வந்திருக்கிறது. இடைக்காலத்தில் பார்ப்பனியம் சில கேடுகெட்ட வேலைகளை பார்த்து சைவம் வைணவம் என்று உருவாக்கி தமிழ் மரபை துண்டிக்க செய்தார்கள். ஒரு அறிவு மரபு துண்டிக்கப்பட்ட இனம் அடிமைப்பட்டு இருக்கும் என்று நாம் அறிவோம். ஒரு இனத்தின் அடையாளம் மூன்று கூறில் இருக்கிறது இயல், மொழி, நாடகம் (குடி பண்பாடு). மெய்யியல் போய்விட்டால் மற்ற இரண்டும் தத்தளிக்கும், ஊடுருவதற்கும் சுலபமாகிவிடும். போர் கொண்டு ஒரு இனத்தை ஆள்வது ஒரு விதம் உளவியல் ரீதியாக ஒரு மக்களை தன்வசம் படுத்துவது ஒரு விதம். தமிழ் மரபு அக்காலத்தில் அறிவியலில் மிக உயரத்தில் இருந்தன அதெல்லாம் கற்று தான் பார்ப்பான் நம்ம கையை விட்டே நம் கண்ணை குத்தினான். இந்த பரிதாப நிலையில்தான் நமக்கு ஒரு தமிழ் மரபு புரட்சியாளர் பிறந்தார் அக்டோபர் ஐந்தாம் தேதியில். மீண்டும் தமிழ் சமண மரபை தன் சொந்த கொடியால் நிமிர்த்தினார். ஒரு நாடை மீண்டும் கட்டமைக்கிறது போல் ஒரு கொடியை உருவாக்கி சுத்த சன்மார்க்க சங்கம் என்று நிறுவினார். ஒரு நாட்டின் முதுகெலும்பு அதின் அரசியலமைப்பில் தென்படும் அதேதான் வள்ளலார் அந்தணர் தன் மெய்யியல் கொள்கையால் படைத்தார் தமிழ் தேசியத்திற்காக. அவரின் சாசனம் ஆதி தாந்திரீக சமண இயலுடன் எந்த விதத்திலும் முரண் படவில்லை. சமண தீர்த்தங்கரர்கள் 24 அல்ல அதுக்கு மேல் இருந்தார்கள் ஐயனார்களும் திருதங்கரர்கள் தான். தமிழ் குலதெய்வம் என்று சொல்லப்படும் ஐயனார் தளங்கள் தீர்த்தங்கரர் பள்ளிக்கே (ஆனால் இதை மறைத்தும் மறக்கச்செய்ததும் பார்ப்பனியம்). இப்போது ஐயனார் தளம் பழங்குடியியளுக்கு சென்று விட்டது. எந்த அருளியலும் உயிரோட்டத்துடன் இல்லை என்றால் அது பிற்போக்குத்தனதுக்கும் அபகரிப்புக்கும் ஆளாகும். வள்ளலார் சாமி இக்காலத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட ஐயனார் தீர்த்தங்கரர். தமிழ் தேசியத்தை விரும்புவோர் முதலாக சன்மார்க்கக் கொடியை ஐயனார் தளத்தில் நிறுத்த வேண்டும். அப்புறம் சமண கற்படுக்கைகளில் நிமிர்த்த வேண்டும். தமிழ் சமண சமய மறுமலர்ச்சி உண்டாக வேண்டும். சுத்த சன்மார்க்க சங்க கொடி போல் தமிழன் தலையும் நிமிர வேண்டும்....
யார் இந்த பார்ப்பான்-23 +++++++++++++++++++++ அகிம்சை (ஆ-இம்-செய்) அல்லது இன்னா செய்யாமை சமண அக வாழ்வியலின் மிக முக்கியமான கோட்பாடாகும். இந்த அக கொள்கையின் இன்னொன்று தான் நோன்பு. இது எல்லாம் சமண மெய்யியல் உலகத்துக்கு வழங்கிய மாபெரும் கொடையாகும். உலகம் சமணத்தை பின்பற்றினாலே அமைதி மிக இலகுவாக வந்துவிடும். ஆபிரகாமிய சமயங்கள் சுமேரியா நாகரிகத்திலிருந்து உருவாகி வந்தவை என்று நாம் அவர்கள் நோன்பு கோட்பாட்டின் வழியாகவே அறியலாம். நோன்பு என்பது ஒரு புற போக்கை அக வழியில் செலுத்துவது. இது பலவகையில் அமைக்கலாம், உணவை விட்டு விடுதல், பேச்சை நிறுத்துவதல், பாலியல் உறவை தவிர்த்தல், சுகத்தை கடத்தல், உறக்கத்தை ஊழ்கம் விழிப்பில் நிறுத்தல் என்ற பல பல வகை எடுத்து அக வாழ்க்கையை செம்மைப்படுத்துவது. புற வன்முறை போக்கை அகிம்சை வழியில் உள்வாங்குவது சமண நோன்பு இயல் சொல்லிக் கொடுக்கும் ஒன்றே. இந்தியா சுதந்திரப் போராட்டம் மிக சிறப்பாக சமண கொள்கையை கையாண்டதை நாம் எல்லோரும் அறிவோம். ஆயுதம் இன்றி ரத்தமின்றி ஒரு ஆளுமை பெற்றது என்றால் அது உலக வரலாற்றில் இந்தியா என்றே சொல்லலாம். இந்தியா பண்பாடு தமிழ் சமண வாழ்வியல் மூலம் கொண்டதாகும். உலகம் இன்றும் காந்திய சமண போராட்டத்தை உள்வாங்க இயலாம இருக்கிறது ஏனென்றால் அந்த முதிர்ச்சி இன்னும் வரவில்லை. யூதம் கிறிஸ்துவம் இஸ்லாம் மூன்றுக்கும் நோன்பு கோட்பாடு இருந்தாலும் அகிம்சை முதிர்ச்சியை அவர்கள் இன்னும் தொடவில்லை. சமண இந்தியா தொட்டதை அவர்கள் கற்று வராமல் இன்றும் குழந்தைத்தனமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள். வன்முறை எப்போதும் தீர்வு தராது என்று அவர்கள் அறிந்தும் அறியாமையில் வாழ்கிறார்கள். புறப் போக்கு (புறம்போக்கு) உலகம் அழிவுக்கு தான் செல்லும். அக மையப்படுத்தாத வாழ்வு நீடிக்காமலே மரித்து விடும். புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடல் சமண வாழ்வியல் இல்லாமல் சாத்தியப்படாது. இந்த உலகத்துக்கு தேவை ஒரு முன்மாதிரியான இனம் அதுவும் சமண இனம் தமிழர்களே இதை நிறைவேற்றுவார்கள். ஈழ போராட்டம் நமக்கு ஒரு கெட்ட பெயரை கொடுத்து தவறான சைவ பார்ப்பனிய வன்முறை வழியில் சென்று விட்டோம் ஆகையால் சமண அகிம்சை நோன்பு கொள்கையை வைத்து தான் இனி நாம் தமிழ் தேசியத்தை பெற வேண்டும் உலகத்துக்கே வழிகாட்டியாக....
யார் இந்த பார்ப்பன் -5 ++++++++++++++++++++ சமணம் என்ற சொல் அம்மாவை உள்வாங்கிய நிலையான அமணம்(அம்மா-ணம்) மூலமாக வந்தது. ஆதித்தாய் என்ற பராசக்தி வழிபாடு தான் தமிழருடைய ஆரம்ப வழிபாடாகும். மாதவிடாய் கருமப் பெண் தரும தாயாக பரிணாமம் எடுப்பதே தமிழர் தாந்திரீக அருளியலாகும். மெய்யான கன்னித்தாய் ஏழு படிநிலையில் நல்ல ஆண்களை பெற்றெடுப்பாள் இவர்கள் ஆண்டவராகவும் சாமிகளாகவும் இருப்பார்கள். சாவுக்கு உட்படாத மரணத்தை வென்ற ஆண்களே வீடுபேறுக்கு உகந்த பெருவாழ்வை வாழ கூடும். இவர்கள் வழியே உலகம் மீட்கப்படும் தன் சுழற்ந்து (சுழியம் 0) வரும் மாயையிலிருந்து. ஆதிசங்கரன் என்ற பிராமணன் சொல்லும் மாயை இதுடன் வேறுபட்டது. இந்த வெற்றி (செய்) வாழ்க்கை தான் பிராகிருத மொழியில் ஜெய் -ஜெயம்- ஜைனம்(Jain) ஆனது. இந்த மார்க்கத்தை மாவீரர் தோற்றினார் என்பது பிழையான புரிதல். இந்த அருளியல் ஆதி பகவன் என்ற ஆதிநாதன்(முதல் ஆண்மகன்) மூலமாக வந்தவை சப்த கன்னி கருத்தியல் வழியாக. தமிழ் சமணர்கள்(ஆசீவகர்) ஆதிநாதன் வழியில் வந்தவர்கள் உழவுத் தொழிலை பிரதானமாக பார்ப்பவர். உழவுக்கு அடுத்தது வணிகம். தமிழ் குடி செட்டியார்கள்(சாத்தன்) வணிகக் குலமாக உருவெடுத்தார்கள். இதே போல வடநாட்டில் மார்வாடிகள் உருவாகினார்கள் அடிப்படையில் சமண வாழ்வியலை வைத்து. பணத்தை மிகத் திறமையாக கையாளுகிற முறைமைகளை இவர்களுக்கு நன்கு தெரியும். இதுவே யூதர்கள் கற்று தன் வசம் உலகத்தை வஞ்சித்து வருகிறார்கள். தமிழ் வணிக அறம் சமணம் கற்பித்தது இதை நாம் சிலப்பதிகாரத்தில் காணலாம். ஆனால் தமிழக சமணர்கள் வணிகம் வரையறைக்கும் முன்பே சமணர்களாக வாழ்ந்து வருகிரார்கள் என்று பார்க்கலாம். இவர்களுக்கும் மார்வாடிகளுக்கும் (சேட்) சம்பந்தமில்லை ஆனாலும் நாம் பிராமணிய சூழ்ச்சியால் ஒன்று என்று நம்புகிறோம். பனியா மார்வாடிகள் தமிழ் செட்டியார்களுடனும் தொடர்பு படுத்துவதில்லை ஆனாலும் இவர்கள் இருவரும் ஒரே சமண வணிக குடிகள் இருப்பினும் செட்டியார்கள் இப்போது சைவர்களாக மதம் மாற்றப்பட்டார்கள் பிராமணிய சதியால். எப்படி இருப்பினும் சமண முருகனை(அருகன்) இறுக்கமாக பிடித்திருக்கிறார்கள் செட்டியார்கள் ஆனால் தமிழ் உழவு குடி சமணர்கள் முற்றிலும் வடநாட்டு ஜைன கருத்தியலுக்கு மாறி விட்டார்கள். தமிழ் ஆதிச்சமணர்கள் இதையெல்லாம் மேல் ஆய்வு செய்து தன் ஆரம்ப வாழ்வியலுக்கு திரும்ப வேண்டும் தமிழர்களை மீண்டும் அவர்கள் ஆதிமெய்யியலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.....
நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில் வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக வந்தேறிகளின் பொய்க்கதைகளை நமது தருக்க அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது தொன்மையான மெய்யியல் கூறுகளை வந்தேறிச் சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது இருட்டடிப்புச் செய்தன. இத்தகு கையறு நிலையில் மெய்யியல் தருக்க முறைகளும் மறைந்தன. இத்தகையதோர் அறிவு மயக்க நிலையில் வைதீகத்தோடு தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டு போக முடியாத பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இப்படி இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப் பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப் புறம்பாக ஒருபோதும் நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே நமது பண்பு நேர்மையினை வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். மெய்யியலை ஆதரிப்போர் இறைவன் பெயரால் நல்லன செய்க என்பதும், நமது இறை மறுப்பாளர்கள் கடவுள் பெயரால் அல்லன செய்யற்க என்பதும் ஒரே கருத்தின் மறுதலை வடிவமே. இதிலிருந்தே நாம் மெய்யியலில் எந்த நிலையினை ஏற்றுக் கொண்டாலும் ஒரே சால்பினராக இருக்கிறோம் என்பது தெளிவாக விளங்கும். இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
சமயம்,ஜாதி ஒழித்து, நம் புகழ், நம் சொத்து ராமலிங்க அடிகளார் கொடுத்த அந்த நெறி நம் சொத்து என்று உணர்ந்து, கயவர்களை புலிகள் போல அடித்து துரத்தும் நேரம் வெகு அருகில்.
தமிழர் மெய்யியல் "வள்ளுவர் கூறும் மெய்யியல்" நூலில் விரிவாக்கப்பட்டுள்ளது. இக்கருத்துகள் 11 காணொலிகளாக (youtube) ஏற்றப்பட்டுள்ளன (kuraluraai1) - என்ற தலைப்பில் காணலாம். முயற்சிக்கு நல்வாழ்த்துகள்.