செம்மைக்கான இணைய வழிக் கல்வித் தளம். ஆசான் ம.செந்தமிழன்
தமிழ், எண்ணியல், செம்மைக் கொள்கைகள் ஆகியன பாடங்கள். உடல்நலம், இயற்கையியல், ஐம்பூதக்கொள்கை, முப்பொருள் கொள்கை உள்ளிட்டவை யாவும் செம்மைக்கொள்கை எனும் பாடத்தில் உள்ளன. சிறாருக்குப் புரியும் வகையில் இப்பாடங்களை செம்மை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.
வேளாண்மை, ஆநிரை வளர்ப்பு, கட்டுமானம், வீட்டு மருந்துசெய்முறைகள், நீர்நிறை நுட்பங்கள் உள்ளிட்டவை செம்மை நுட்பம் எனும் பிரிவில் கற்பிக்கப்படும்.
ஊழிக் கல்வி என்பது ஊழி நூலினை அடிப்படையாகக்கொண்டு புவிகொள்கைகள், உயிரினக் கொள்கைகள், வாழ்வியல் கொள்கைகளைக் கற்பித்தல் ஆகும். இப்பாடத்தினை ஆசான் ம.செந்தமிழன் கற்பிக்கவிருக்கிறார்.
அய்யா, அடியேன் 72 வயடை கடந்தவன் . நான் படித்த தமிழ் அக்கால PUC வரை தான். பிறகு பொறியியல் படிப்புக்கு போய்விட்டேன். ஆனால் தமிழின் பாடங்களை இப்பொழுது அனுபவித்து படிக்கிறேன். ஆனால் நான் புரிந்த முரண்பாடுகளை கலய விரும்புகிறேன். இதோ ஓர் உதாரணம்( இதுவும் சமஸ்கிருத வார்த்தை) . காவியம் என்ற சம்ஸ்கிருத வார்த்தை , மருவி காப்பியம் ஆனது. நான் சொல்வது தவறு எவ்வாறு என்று விளக்கவும்.
ஒரு சிக்கலில் சிக்கித்தவிக்கையில் அதனினின்று தெளிவுபெற்று இன்பமாகவாழும் வகைக்கு வழிகாட்டும் வகையாக மிகப்பொருத்தமான காலகட்டங்களில் பொருத்தமான கருத்துக்களை வெளிப்படுத்தி நெறிப்படுத்திவரும் ஆசானுக்கும் இறைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அய்யா நான் இந்த வகுப்பில் சேர விரும்புகிறேன், நான் என்ன செய்ய வேண்டும், பிறகு எனக்கு செய்மை மரப்பு வாழ்க்கை பிடிக்கும், எனவே எதிர்காலத்தில் நான் இந்த வாழ்க்கை முறையில் வர விரும்புகிறேன் எனவே தயவுசெய்து எனக்கு வழிகாட்ட வேண்டும் ❤❤❤
ஒழுங்குகளுக்கு மாறானவற்றை இறைவன் மறுப்பார் என்ற தெளிவு என் வேண்டுதல்கள் பலிக்காதது ஏன்? என்ற தெளிவை தந்துள்ளது 🙏ஆனால் இதற்காக நான் என் வாழ்வில் பாதியை வீணான போராட்டத்தில் கழித்து விட்டேன் இனி என் வாழ்வு இறைவனிடமே😊
செம்மை சமூகம் என்பது எனக்கு மிகவும் பிடித்த கட்டமைப்பு.என்ன காரணத்தால் ஆசான் இந்த முடிவைஎடுத்தார் என்பதை நான் அறியவில்லை. ஆனாலும் ஆசானின் அனைத்து முடிவுகளுக்கும் நான் கட்டு படுகிறேன்.அம்மையப்பர் வழங்கியதாக ஏற்றுக் கொள்கிறேன். அனைத்து நிகழ்வுகளிலும் என்னால் முடிந்த வரை பங்கெடுத்து வருகிறேன். நான் என்றும் ஆசானின் மானவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மனிதன் மூன்று படிநிலைகளை கடந்து செல்கிறான். 1. தனி மனித வாழ்க்கை. 2. குடும்ப வாழ்க்கை. 3. பொது வாழ்க்கை. ஆனால். மனிதன் பொது வாழ்க்கையின் ஊடாகவே இந்த மூன்று படிநிலைகளையும் கடக்கிறான். இந்த மூன்று படிநிலைகளிலும். அவனுக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. ஏனென்றால். மனிதன் மிருகம் அல்ல என்ற காரணத்தினால். மேலும். படைத்தவனின் வழிகாட்டுதலே படைப்புகளின் வாழ்வியல் வழிமுறையாக இருக்கிறது. இதை புறக்கணிப்பவர்கள். அவர்கள் யாராக இருந்தாலும். நஷ்டவாளிகளே.
தங்களின் கருத்துக்களை நல்ல முறையில் கொண்டு சென்று இப்போது வேறு வழிக்கு திசை திருப்பியிருக்கிறீர்கள். ஆனாலும் ஒரு நல்ல சமுதாயம் என்பது பலரின் கனவாகும். கடைசிக்கும் கடைசியாக ஒரு நல்ல சமுதாயம் என்பது இறைவனின் வழி நடத்துதல் தான் என்பது தெளிவு.
ஆசானிடம் ஒரு வேண்டல் , பூப்புனித நீராட்டு விழா தமிழர்கள் ஆகிய நாம் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வா அல்லது சாதாரன மான ஒரு நிகழ்வா இதைப்பற்றி தொல்காப்பியத்தில் பாடல் இருக்கின்றனவா? சீர்காளி அருகில் நடந்த திருமணம் இதுவரை கண்டதில்லை கேட்டதும் இல்லை ., திருமணம் என்ற புரிதல் எமக்கு யாரும் கற்றுத்தரவே இல்லை முதல் முறையாக தாங்கள் நிகழ்திய திருமணத்தில் புரிந்து கொண்டேன் .நேரில் வரவலில்ை காணொலியில் கண்டும் கேட்டதும் மிக நன்றாக இருந்தது .அது போல் பூப்புனித நீராட்டு சம்பந்தமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் இதற்கான செவி வெளியிடுவீர்களா?!!
தமிழ் நாட்டு பெண்கள் மெய்யறிவு பெற்றால்தான் தமிழ் வாழும். கௌரவத்திற்கு போலியாக வாழத் தொடங்கிவிட்டார்கள். எல்லாரும் தேங்காய் திருவும் போது நாம செரட்டையாவது திருவ வேண்டும் என்று நடிப்பு வாழ்கைக்கு சினிமா பார்த்து வாழும் தலைமுறை உருவாகிவிட்டது . ஊடுருவி பார்த்தா எல்லோரும் சிரட்டைய திருவெறாங்க .. இதனால எல்லோரும் Loan வாங்கி car, Loan வாங்கி படிப்பு . Loan வாங்கி கல்லியாணம் அடுத்தவனிடம் இருப்பது சிறப்பு என்ற பெருந்தன்மை என்ற அறியாமையில் விழுந்துவிட்டார்கள் ..
ம. செந்தமிழன் அண்ணா - உங்களின் பல வீடியோ தொகுப்புகளை கேட்டுள்ளேன். மிக சரியான புரிதல் எனக்குள் கிடைத்தது. இன்னும் ஆழ தேடிப் பார்த்தேன், எனக்குள் எழும் கருத்து செறிவின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. உளம் அளவில், உங்களுக்கு நன்றி சொல்வேன். நான் சிதம்பரம் இராமலிங்கம் அவரின் கொள்கைகளை சற்று புரிந்து அதன்படி நடக்க தொடங்கும் மாணவன். அவரின் கருத்தும் உங்களின் கருத்தும் மிக நேர்த்தியாக பொருந்தியதை கண்டு மெய்சிலிர்ப்பேன். அந்த வரிசையில், ஊர் திரும்புவது என்பது எளிமையான வாழ்க்கை வாழலாம் என்ற புரிதலின் முடிவு 'வாழ்கிறோம்' என்றதில் இல்லை, என்று நான் உணர்ந்து, என்னுள் தேடி கிடைத்த பதில் - சிவம் நோக்கி நகருதல். அதையே நீங்களும் சென்னை நிகிழ்ச்சியில் முடிவாக உரைத்தீர். மனம் மகிழ்ந்தது. எனக்குள் மேலும் 2 கேள்விகள் புறப்பட்டன, அதில் ஒன்று இந்த உரையாடல் ஆன சமூக வாழ்க்கையை துறப்பது. இதன் மூலம் கிடைக்கும் விடுதலையால், நீங்கள் இன்னும் நிறைய ஆகபெரிய செயல்கள் செய்யலாம் என்றே எண்ணிஇருந்தேன். அதனால், எங்களைபோன்றோர்க்கு அறிவில் ஊட்டம் கிடைக்கும். அதுவும் இன்று அறிவித்தீர். மற்றொன்று, மன்னிக்கவும் - சிவம் நோக்கி நகர, இயற்க்கை மீதும், எல்லா உயிர் மீதும் அன்பு பாராட்டும் நீங்கள் - ஏன் புலால் உணவை ஏற்கிறீர்கள். இச்சையால் ஓர் உயிரை கொன்று, அன்பு செய்வது ஏற்புடையதன்றே. அண்ணா, என்னை மன்னிக்கவும். இருந்தாலும், என் அறிவுக்கு ஊட்டம் தந்தவர், மேலும் உங்கள் தம்பி என்ற உரிமையில் கேட்கிறேன். 🙏
பலவருடங்களாக அவர் பேசுவதை கேட்டு வருகிறான். அவர் பேச்சுக்கள் மக்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கக்கூடியவை. அக சிறந்த அறிவாளி தொடர்ந்து அவர் பேச வேண்டும். நானும் வள்ளலாரை பின் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேல் புலால் உண்ணுவதில்லை. உங்களுக்கு எழுந்த கேள்விதான் எனக்கும். இவ்வளவு புரிதலுள்ள செந்தமிழன் ஏன் நாம் நம் உடம்பை வளர்ப்பதற்கு ஒரு உயிரைக் கொல்லுவது பாவம் என்று உணரவில்லை என்று நினைப்பேன். சிவம் அவருக்கு விரைவில் உணர்த்துவார்.
அண்ணனுடைய உரையில் "உணர்தல்" "உணர்த்துதல் "இரண்டு சொல்லுக்கும் விளக்கம் கொடுத்திருப்பார் அதை புரிந்து கொண்டால் உங்களுடைய புலால் மறுப்பு கேள்விக்கு பதில் கிடைக்கும்
@@sureshjayaraman3115 நான் சொல்வது உனக்கு புரியவில்லை. நான் சொல்வதை புரிந்துகொள்ளும் அளவுக்கு உனக்கு அனுபவம் கிடையாது என்று நினைக்கிறேன். I am teaching senthamilan to understand this. Do u understand?
@@sureshjayaraman3115May be u miss understood his teaching. Please send me his video and I will explain what he is saying. If u kill 5 sense animal for u r hunger is a sin. Period
கடந்த 10 நாட்களுக்கு முன் ராவணா யூடியூப் சேனலில் ஆசானின் பேட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன் ஏனோ தெரியவில்லை அப்போதிருந்தே ஆசானை மெல்ல மெல்ல பின்பற்றத் தொடங்கினேன் இப்போது முழுமையாக அவருடைய காணொளிகளையும் பேச்சுகளையும் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் எல்லாம் அம்மையப்பரின் அருளால் இந்த பிரபஞ்சம் எனக்கு காட்டிய ஒரு சக்தி ஆசான் அவர்கள்