இந்த மாதிரி சில்லரை தனமான காரியங்களுக்கு இயேசு கிறிஸ்துவை சொல்வது சரியல்ல. அவருக்கு இது வேலை இல்லை.... ஏண்டா இப்படி வசனத்தை வீணாக்குகிறீர்கள். சிலைகளை வெறுப்பவர் சிலையை தேடிக் கொடுப்பாரா? ....
சிவனுக்கு உருவம் கிடையாது.ஒளியே அவர்.மனிதன் உருவகப்படுத்தி தான் சிலையாக.கண்டு வணங்க வேண்டும் என்பதற்காக சிலையாக்கினான் மனிதன் இங்கு தான் தவறு ஏற்படுகிறது.இறைவன் உருவம் இல்லாதவர்.கண்டு விசுவசிப்பதைவிட காணாமல் விசுவசிப்பவன் மேல்.அதனால் தான் இஸ்லாம் சிலை வணக்கத்தை ஒதுக்குகிறது.இப்போது நினைத்து பாரு ங்கள் சண்டை இல்லாமல் வணங்கி உலகத்தை அமைதிப்படுத்த முடியும்.அதனால் நானே உலகின் ஒளி உண்மையும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன் என்றார்.கடவுளை கண்டதாக கிறிஸ்தவம் கூறவில்லை.கடவுளை கண்டதாக எந்த மதம் கூறினாலும் அது பொய்யாக தான் கருத முடியும்.
சிவனோ இயேசுவோ அல்லாஹ்வோ உண்மையா இரு உத்தமமாய் இரு பொய் சொல்லாமல் இரு அடுத்தவருக்கு உதவி செய் தவறு செய்திருந்தால் மனம் திரும்பு பாவம் செய்யாதே இதை உணர்வது கடவுளுக்கு செய்த மிகப்பெரிய புண்ணியம்
26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். ஆதியாகமம் 1:26 27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:27 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:28 7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 எல்லாவற்றையும் வார்த்தை மூலமாக படைத்த தேவன்(அல்லாஹ்) மனிதனை மட்டும் ஏன் தமது சொந்த கைகளினால் உருவாக்க வேண்டும். மேலும் அவருடைய மூச்சுக்காற்றை (சுவாசத்தை) நமக்கு கொடுத்திருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் மனிதனை போல கர்த்தர் வெளிப்பட்டிருக்கிறார், ஏன் அவரால் மனிதனுக்குள் வெளிப்பட முடியாதா? தேவன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் உள்ளவரா? ஏன் அவரால் சில காரியங்களை செய்ய முடியாதா? இவை அனைத்தும் தவறு என்றால், வேதம் திருத்தபட்டிருக்கிறது என்றால் சரியான திருத்தப்படாத வேதத்தை எங்களுக்கு காட்டவும் இல்லை என்றால் வேதத்தின் மூலப்பிரதி இருக்கிறதே அதை நீங்கள் ஒரு படையை திரட்டிக்கொண்டு மீண்டும் அதை மொழிப்பெயர்ப்பு செய்யுங்கள். ஏன் நீங்கள் பாவம் வேதக்கரார்களிடம் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். இதைச் செய்ய முயற்சி செய்யுங்கள். கர்த்தர் தாமே உங்களுக்கு சமாதானத்தை தருவாரக. ஆமென் ஆமென்