நீண்டதூர ரயில்களில் ஐநூறு கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். இல்லையென்றால் துப்புரவு பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடும். பயணிகளும் அவர்களுடைய உணர்வுகளை மதிக்காமல் அசுத்தம் செய்துவிட்டு வந்துவிடுகின்றனர். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .
தென்னிந்திய ஆன்மீக குறிப்பகளுக்கும் வடஇந்திய ஆன்மீக குறிப்புகளுக்கும் சில முரண்பாடுகள் இருக்கிறது. சிவன் பார்வதியை தவிர வேறு எந்த கடவுளுக்கும் வாரிசுகள் இல்லை ஆனால் அங்கு கிருஷ்ணனின் மகன் ஆஞ்சநேயரின் மகன் என்று காட்டுகிறார்கள். எப்படியிருந்தாலும் துவாரகையின் அழகு அருமை.
என்னதான் பாலம் கட்டினாலும் படகு சவாரியும் தலைக்கு மேலே பறக்கும் சீகல் பறவைகளின் காட்சி தரும் சுகத்தை பாலம் தராது. அதனால் பாலம் கட்டினாலும் படகு போக்குவரத்தும் தொடரவேண்டும். கையில் உள்ள உணவுப்பொருளை பறவை லாவகமாக எடுத்துச்செல்லும் காட்சி அருமை. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஆமாம் அண்ணா உண்மை தான் மக்கள் படகு சவாரி செய்ய மட்டுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள் 😊 ஆனால் அந்த ஊர் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளுக்கும் விரைவான பயணத்திற்கும் இந்த பாலம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை 😊😊