Welcome to Tamil Saritham channel. Listen to many stories, novels and facts in Tamil audio format. To get updates from our channel please subscribe to our channel and support us. Thank you.
மிக நெகிழ்வான கதை. இறுதியில் வெகு அழகாக மாமியாருக்கு ஒரு குத்துடன் கதையை முடித்தார். ஆக தன் மகன் பிரிந்து விடக்கூடாதே என்பதுதான் அந்த மாமியின் விருப்பம் போல. உடையவன் போனால் ஒரு முழம் கட்டை என்று ஒரு சொலவடை உண்டு. எவ்வளவு முன்னேற்றங்கள் என்று சொன்னாலும் இன்னமும் கூட பல விஷயங்களில் மனித மனம் கேவலமாகத்தான் உள்ளது. எனக்கு ஒரு சிறு திருப்தி. நான் என் உடல் காரணமாக திருமணத்தை தவிர்த்தேன். ஆனால் எப்போதுமே திருமணம் என்று செய்து கொண்டால், ஒன்று மாற்று திறனாளி அல்லது விதவை இவர்களை மட்டுமே மணப்பது. எவ்வளவுதான் இருந்தாலும் இந்த பெண்ணே நன்கு கை நிறைய சம்பாதிப்பவளாக இருந்தால் இவர்கள் போக்கு இப்படியா இருக்கும். ச்சே என்ன உயர்ந்த இனம் மனித இனம்....
வலிய உதவி செய்தால் நிச்சயம் நமக்கு அது உபத்ரவத்தை மட்டுமே தரும். அதிலும் இப்படி பல பாத்திரங்கள் என் வாழ்வில் மற்றும் என் குடும்பத்திலும் நான் காண்கிறேன். இறக்கம் காட்டலாம். ஆனால் ஏமாற கூடாது. என் வாழ்விலே நான் இப்படியான ஆசாமிகளை பார்த்திருக்கிறேன். அவரவர் அனுபவம்தானே அவர்களுக்கு கணிப்பின் ஆசானாகிறது. என்னால் இவர்களை மன்னிக்கவே முடியவில்லை. ஆனால் இறுதி முடிவு, ரொம்பவே நெகிழச் செய்து விட்டது. விரிவான அமைதியான மரணத்தைதான் இப்போது நான் மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன் தோழி
அருமை தோழி. எனக்கு என் அப்பாவிடம் கிடைத்த பாசம் ஏனோ அம்மாவிடம் கிடைக்கவே இல்லை. அவரும் ஒரு துறதிஷ்டசாலிதான். பாவம் அவரது இரு வீட்டிலும் சுகம் அன்பு இரண்டுமே பெறவில்லை. வாழ்வின் பெரிய வேடிக்கை எதை ரொம்ப விரும்புகிறோமோ அதை கிடைக்காமல் செய்வதும், எது ரொம்ப சந்தோஷத்தை தருமோ அதை தட்டி பறிப்பதும்தான். என் தந்தையை வெகு விரைவில் இழந்தேன். ஆனால் இறுதிவரை என் அம்மாவை நாம்தான் பார்த்துக்கொண்டேன். அந்த விதத்தில் ரொம்பவே திருப்தி. அதிலும் ஒரு 10 வருடங்கள் ஒரு குழந்தை போலவே ஆகிவிட்டார்கள். ம்ம்..தாய் அன்பு கிடைக்க பெறாமல் போவது பெரும் சாபம் தோழி.
எல்லா உறவுகளுக்கும் ஒரு பொறுப்பும் கட 19:08 மையும் உண்டு. இவற்றை தக்க படி நிறைவேற்றவில்லை என்றால் இவர்கள் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே நல்லது. அப்பா அம்மா இருந்தும் உரிய பாசம் அளிக்கப்படவில்லை என்றால் அந்த குழந்தை அனாதையாக இருப்பதே நல்லது. இப்படியும் சில பெற்றோர்கள்...இப்படியும் சில குழந்தைகள் தங்கள் கூண்டில் இருக்கும் கிலி போல...மனம் ரொம்ப கனத்து போனது. ஆனால் நாம் நினைத்தபடியே கதை முடிவை அறிந்தபோது ஒரு இனம் புரியாத சந்தோஷம்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பரிணாமம். இதை விட நுட்பமாக ஒருவர் தவறை சுறுக்கென தைக்கும்படி சொல்ல முடியாது. ம்ம் இப்படி எனக்கு ஒரு தோழியோ அல்லது சகோதரியோ இருந்திருந்தால் இவ்வளவு வேதனைகளை சுமக்க வேண்டிய இருக்காதோ? ஒன்று தெரியுமா தோழி, நாம் மிக உயர்வாக ஒருவரை பற்றி நம் மனதில் வைத்திருப்போம். ஆனால் நமது கணிப்பு தவறாகும் போது ரொம்ப மனம் வலிக்கும். என்ன செய்வது. வயது ஆக ஆகத்தான் அவர்களை பற்றி உயர்வாக நினைத்தது நம் தவருபென்று தேற்றி கொள்வேன். ஆனால் என் நட்பு வட்டம் எனக்கு பெரிய வரம் தோழி. இப்போதும் நான் விரும்புவது என் அடுத்த பிறவியில் கூட என் நட்புவர்ரம் இப்படியே அமய வேண்டும் என்பதுதான்
இந்தக் கதையில் சொன்னதை எவ்வளவு பின்பற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. சூழ்நிலை தான் முடிவு செய்யும் என்று நினைக்கிறேன். நட்பு வட்டம் மிக மிக முக்கியம், அது உங்களுக்கு நல்லபடியாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி
@@TamilSaritham சூடாமணினவர்கள் சொன்ன கதாபாத்திரம் போல இருந்தால் ஒருவேளை சாத்தியமாகலாம். ஆனால் என் மனதில் உள்ளதை சொல்கிறேன். என்னால் எப்படி நல்லதை மறக்க முடியாதோ அப்படினொருவர் செய்த தீமையும் மறக்க முடியவில்லை. அதற்காக பழி வாங்குவது என்று போகாவிட்டாலும் அவர்களை கானும்போதெல்லாம் முதலில் அவர்கள் செய்த கெடுதல்தான் நினைவுக்கு வரும். எல்லாவற்றையும் விட அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல அவர்கள் இழையும் போது பற்றிக்கொண்டு வரும்
பல முறை பலர் வாய்மொழியாக கேட்டும், நானே படித்தும் இருக்கேன். ஆனாலும் அலுக்காத கதை. அதிலும் உன் குரலில் கேட்க இன்னும் சுவை சற்று கூடுதல். வெகு சமீபமாக என்ன கதை தந்திருக்கிறாய் சொல்ல முடியுமா? என் தந்தை அகால மரணம் அடைந்தபோது என் வயது 13. என் அம்மாவின் வயது 45. நான் வெகு தீர்மானமாக எவரும் என் தாயை மடி செய்கிறேன் என்று அலங்கோலம் செய்ய வேண்டாம் என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன். இந்த சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் இந்த விஷயங்களை கண்டுபிடித்தான் மட்டும் என் கையில் கிடைத்தால் உயிரோடு கொளுத்துவேன்
பாராட்டுக்கு நன்றிகள் தோழரே. சமீபமாக வழிகள் பல, வானவில்லும் நீல ரிப்பனும் சூடாமணி அவர்களுடையது. ஜெயகாந்தன் அவர்களுடைய ஆளுகை சிறுகதையை தான் பதிவிட்டேன். அவ்வளவு வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு செயல், அந்த வயதிலேயே செய்தது மிகவும் வியப்பாக உள்ளது. பகுத்தறிவும், முற்போக்கு சிந்தனையும் அதிகம் உள்ளவர் நீங்கள்.
@@TamilSaritham இவரது கதைகள் நான் படிக்க வாய்ப்பு கிடைத்தது மிக தாமதமாத்தான். அப்போது இவரது உடல் நிலை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தெரிய வந்த போது ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். வெளி உலகை அவ்வளவாக கானாதபோதே இவ்வளவு துல்லியமாக கணக்கிட முடியுமா என்று பிரமித்ததுண்டு
ஒன்று இன்னும் எனக்கு புரியவில்லை. அது ஏன் ஒரு ஆணின் நட்பை பெரிதுபடுத்தாத யாரும் ஒரு பெண் என்றவுடன் இப்படி மாறுகிறார்கள்? தன் பெண் மனம் செய்து கொள்ளவில்லையே என்று மருகும் தந்தை ஏன் இப்போது சந்தோஷப்பட கூடாது? ஏன் ஆண் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? ச்சே ஒன்று நிச்சயம். ஒரு பெண்ணைப் பற்றி ஒருவன் எடை போடுவது கொண்டே ஒரு ஆணின் தரத்தை எளிதாக அறியுடியும் போல... மிக அருமையான கதை
@@TamilSaritham என்னை நினைவில் வைத்திருக்கிறீர்களா! எதோ ஒரு தார்மீக பலத்தை உணர்கிறேன் தோழி. எல்லாவித பிரச்சனைகளுடன் சுகமாக இருக்கிறேன். உங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை. தினம் 3 கதைகளாவது கேட்பேன். என்ன செய்வது பதில் type செய்வதற்குள் வலி உயிர் போகிறது. அதனால்தான் ஒரு like மட்டும் போட்டு விடுவதோடு நின்று விடுகிறேன். இந்த பிறவியில் என் உபாதைகளை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் போல. விரைவான மரணத்தை வெகு ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்
நிச்சயம் நினைவில் உள்ளீர்கள், என்றுமே நினைவு வைத்திருப்பேன். என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ளலாமா. வலி குறைய வேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன் உங்களுக்காக.
@@TamilSaritham என் பெயர் கணேசன். வயது 60. 13வயது முதல் மோசமான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவன். அதே ஆண்டு என் தந்தையும் இழந்தேன். கொடிய வறுமை, என் நோய்க்கு சிகிச்சை துவங்கவே 14வருடங்கள் ஆனது. இந்த சென்னை வந்து உரிய மருத்துவம் துவங்கிய பின்தான் பிறப்பில் என் இடது பக்க மூளை மிக பலவீனமாக உள்ளது என்றும், உரிய மருந்துகளின் துணையுடன் வலிப்பு வராமல் கட்டுப்படுத்தி வாழ முடியும். ஆனால் அறவே தீர்க்க முடியாது என்றும் அறிந்து கொண்டேன். 2016ல மோசமான எலும்பு புற்றுநோய் தாக்கியது. சுமார் 3வருட நரக வேதனைக்கு பின் தற்காலிகமாக மீண்டேன். எப்போது தீராத நோய் இருப்பதை அறிந்த அப்போதே திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் முடிவு செய்தேன். சுகமோ, துக்கமோ என் ஒருவனோடு போகட்டும் என்று வாழ்கிறேன். உண்மையில் இறப்பை மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன். கடந்த ஜனவரி 2ல அம்மா காலமானார்கள். அவ்வளவுதான்
பலரின் வாழ்க்கை ஏன் எதற்கு என்று தெரியாமலே இப்படி துன்பத்தை மட்டுமே தருகிறது. மிகுந்த வருத்தமாக உள்ளது. உங்களுக்கு மேலும் துன்பம் வராமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். உங்களின் கருத்து நிறைய கதைகள் பதிவேற்ற வேண்டும் என்று ஊக்கத்தை கொடுக்கிறது, இன்னும் சில நாட்களில் தொடர்ந்து கதைகள் பதிவிட முயற்சி செய்கிறேன்.
என்ன படித்து என்ன. உலகில் அன்று முதல் இன்று வரை இரண்டு ஜாதிகள்தான். ஏழை, பணக்காரன். இருப்பவன் இல்லாதவன். முதலாளி தொழிலாளி. ம்ம் இருப்பதில் பிற ஜீவராசிகள் விட மட்டமான படைப்பு மனிதன்தான்
என் அப்பாவுக்கும் இப்படித்தான் இருந்திருக்குமோ?? என் தந்தையை 13 வயதிலும் தாயைநிந்த வருட ஜனவரி '24லும் இழந்தவன்.பிந்த கதை என் மனதை ரொம்பவே கணக்க வைத்து உள்ளது
Fantastic story! Many by mere infactuation assume as love. With economic status, caste, etc all get dilutedand when it comes to practical life things take a big turn. Jayagandhan is such avisitionary. One of his signature stories!
யதார்த்தம் கற்பனையை விட பயங்கரமானது தோழி. இந்த கதாசிரியை சூடாமணி அவர்கள் பற்றி ஒன்று தெரியுமா? இவர்கள் சில உடல் நல குறைவால் வெளியுலக தொடர்பை ரொம்ப இல்லாதவர்கள். ஆனால் இவரது கதைகளில் அவர் இப்படி என்று சிறிதும் யூகிக்க முடியாது. மிக நன்றாக அதே சமயம் மனம் கனத்தும் போனது. ஏனெனில் என் அம்மாவின் வாழ்வும் இப்படித்தான். வாழ்க்கை பெரும்பாலானவர்கள் மீது ரொம்பவே குரூரமாக உள்ளது இல்லையா?
ஆம். வெளியுலக தொடர்பு அதிகம் இல்லாதவர் எப்படி மனித உணர்வுகளை இப்படி சொல்ல முடியும் அன்று ஒவ்வொரு கதையும் வியக்க வைக்கும். பலரின் வாழ்க்கை ஏன் என்று தெரியாமலே துன்பத்தை மட்டுமே பார்த்து முடிந்து விடுகிறது.
வணக்கம் தோழி. என் பெயர் கணேசன். 59 வயது இளைஞன். வெகு சிறு வயதில் தந்தையும், வெகு சமீபத்தில் தாயும் இழந்தவன். மிக சிறு வயது முதலே புத்தகம் படிப்பதில் ஈடுபாடு கொண்டவன். இப்போதுள்ள தனிமை மற்றும் மோசமான உடல் நிலை காரணமாக புத்தகத்தை தூக்க முடியாததால் அதிஷ்டவசமாக உங்கள் வலைத்தளத்தை கண்டேன். பல கதைகள் நான் படித்தவை என்றாலும், உங்கள் குரல், உச்சரிப்பு மற்றும் ஏற்ற இறக்கங்கள், இவை மிக கதை கேட்பதை சுவாரஸ்யமாக ஆக்கியது. உங்கள் சேவை தொடரட்டும்
ஜெயகாந்தனின் பல கதைகள் நான் படித்தவன். இந்த கதையை படித்த போது KB அவர்களின் நூல் வேலி திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது. நான் ரொம்ப நல்லவன். ஏனெனில் நான். தப்பு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, நான்னுட்பட அனைவர் நிலையும் இதுதான்