பாடல் : T.N .ராதாகிருஷ்ணன்
பாடியவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
T.N.Radhakrishnan அண்ணாவின் ஜோதி ஸ்வரூபமான அண்ணாமலையானின் தீப பாடல் திருமதி ராஜேஸ்வரியின் குரலில் இன்னிசையாய்.
திகழும் மலை தீபம்
-----------------------------------
ததும்பி வழிகின்ற
தங்கக் குழம்பாக
மிளிரும் மலைதீபமே!
தரணி தனைத்தாங்க
தலைமைப் பிழம்பாக
தழலின் ஒளிவீசுமே!
ஒதுங்கும் ஓடோடும்
உலகின் பெரும்பாவம்
ஒற்றை முறைபாருமே!
ஒடுங்கும் பலதோஷம்
ஒருங்கும் இறைநேசம்
ஒளியின் சிவரூபமே!
கதியும் நீயென்று
காக்கும் தாயென்று
கிரியை வலம்வாருமே!
கடவுள் என்பாரின்
கருணை இதுவென்று
அருணை மலைகாட்டுமே!
துதிக்கும் அடியார்க்கும்
துணைக்குத் தான்நிற்கும்
தூல கிரிதீபமே!
தொலையும் வினையாவும்
தொடங்கும் புதுவாழ்வும்
துலங்கும் ஒளிபாருமே!
--------------------------------------------------------------------
பன்னிரு சீர் விருத்தம்
மா காய்
மா காய்
மா கனி - இரட்டித்தது
T. N. RADHA KRISHNAN
6 сен 2024