ப்ரவீண் உங்கள் ஊகங்கள் , அறிவியல் அறிவு , கட்டடக்கலை அறிவு இவற்றை ஒவ்வொரு காணொலியிலும் நான் பாராட்டித் கொண்டே இருக்கிறேன். இலிங்கோத் பவர் , திருமய்யம் பற்றிய கருத்துக்கள் மிகமிக அருமை இரண்டாம் உலகப் போர் தொடர்பான செய்தியும் இதுவரை அறியப்படாதது. ஆனால் லிங்கத்தை. ............. என்று சொல்பவர்கள் காம விகாரமும் வக்ர புத்தியும் படைத்தவர்கள் . அவர்களுக்கு எதைப்பார்த்தாலும் அப்படித்தான் தோன்றும் நீங்கள் அதைக் கருத்தில் கொள்ள வேண்டாம்.
தென்னாட்டுடைய சிவனை பற்றிய விளக்கமும் பழங்குடியினர் பற்றிய குறிப்புகள் தகவல்கள் அதற்கு இணையான விளக்கமும் பிரவீண் மோகனை தவிர வேறு யாராலும் புரிய வைக்க முடியாது.மெய் சிலிர்த்தது.அருமை. அருமை. அருமை.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தினார் என்பது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஏன் சிவன் என்ற மனிதன், ராக்கெட் மூலம் பிற கோள்களுக்கு சென்று வந்தவராக இருக்க முடியாது. அதை சிற்பிகள் செதுக்கி இருக்கலாம் இல்லையா? ராக்கெட் மூலம் சிவன் என்ற ஏலியன் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்று, சிவனை ஏலியன் ஆக்க ஏன் இவ்ளோ தூரம் போராடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறுகிற கோஷ்டி, ஒரு பக்கம் கடவுளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் கோஷ்டி, ஒரு பக்கம் நமது கடவுளரை திருடி, புரியாத மொழியில், நமது வரலாற்றையும் கடவுளரையும் திருப்பி, குழப்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் கோஷ்டி. இது பத்தாது என்று, இப்போது நம்ம பிரவீன் மோகன். டேய் தமிழன் களா சிவன் ஒரு ஏலியன் டா.. என்று மற்றொரு குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி கொண்டிருக்கார் என்று தோன்றுகிறது. நான் பிரவீன் மோகன் சன்னலை கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில சன்னலில் அவரை பின் தொடர்ந்து வருகிறேன். நிறைய இதுவரை பார்த்திராத, வரலாற்று புராதன இடங்களை அவரது சன்னலின் மூலம் பார்த்து வந்தேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் கடந்து சில மாதங்களாக, நீங்கள் தமிழர் கடவுளர்களை ஏலியன் களாக மாற்ற முயற்சி எடுத்துவருவது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் இந்த வன்மம் என்று புரியவில்லை. உங்கள் உள் நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. பார்ப்போம். இன்னும் என்ன என்ன சொல்ல போகிறீர்கள் என்று. காலம் பதில் சொல்லட்டும். காத்திருக்கிறேன்.
இவ்வளவு தெள்ளத்தெளிவான ஆதாரங்களைக் கொண்டு சிவலிங்கத்தைப் பற்றி நீங்கள் பேசியிருப்பது மனதிற்கு முழு நிறைவைத் தருகிறது.தொடர்ந்த நானும் உங்களுடன் பயணிக்கிறேன்.வாழ்த்துகள் நண்பரே
சிவன் தமிழகத்திற்கு வரவில்லை ஒட்டுமெத்தமும் முன்பு தமிழக மாக தான் இருந்தது பாரதம் முழுவதும் ஏன் இன்று அயல்நாடு செல்ல கூடிய பல இடம் எம் தமிழ் மன்னர்கள் ஆண்டனர் ஆகையால்தான் தென்னாட்டு என்று இந்தியா கண்டத்திற்கு தெற்கு உள்ளது தெனடுடையா சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவருக்கு மகுடம் வைக்கிறோம் உங்களின் முயற்சி ஈடு இணையற்றது வாழ்த்துக்கள்
@latha 104 ஆம். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் அதிக மாறுபாடுகள் இல்லாமல் இருக்கலாம். காந்தக் குறைந்த புள்ளி திருமயத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மாறியிருக்கலாம்
பிரவீன் மோகன் அவர்களுக்கு இந்தூக்கள் சார்பில் மனம் நிறைந்த நன்றிகள் 🙏🏽 இந்து மதம் எவ்வளவு சிறப்பானது எவ்வளவு அதிசயமானது என்பதை உணர முடிகிறது. இந்து மதத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றிகள் 🙏🏽 Proud of being a Hindu 👍
@@rajadurai8067 சைவம் முதலிய ஆறு மதங்கள் இணைந்தே இந்து மதம் ஆனது. ஆறு குழந்தைகளை சேர்த்தனைத்து பார்வதி ஆறுமுகனை உருவாக்கியதுகூட ஆறு மதங்களை இணைத்து ஒரே மதமாக்கிய இந்து மதத்தின் உருவகம் என்பாரும் உண்டு. பிரிவினையைத் தவிர்த்து இந்துக்கள் ஒன்று பட்டு தீமைகளை எதிர்க்க வேண்டும். 🙏🏽
Praveen mohan என்றாலே ஆச்சரியத்தின் மறு பக்கம். அறிவுக்கு விருந்தை தினம் தினம் நமக்கு இந்த வீடியோ மூலம் சமைத்து தருகிறார். வாழ்த்துக்கள் பல பாராட்டுக்கள் பல. உங்களுக்கு நான் "பத்ம ஶ்ரீ " விருதை வழங்க கடவுளிடம் வேண்டுகிறேன்.
பிரவீன் சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஒரு அற்புதமான வரம் இப்படி ஒரு விளக்கம் உங்களை தவிர வேறு யாராலும் தரமுடியாது குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் விளக்கம் தருகின்றிர்.வாழ்க உங்கள் பணி.
அற்புதமான விளக்கம். சிவனும் வேறொரு கோள்ளிருந்து இங்கு வந்த ஒரு மனிதன் தான். அவர் மக்களுக்கு உதவியதால் தான் கடவுளாக வணங்கப்படுகிறார். அதை போல், யார்ரானாலும் தன்னலமாற்ற உதவியும் சேவையும் செய்கிறார்களோ அவர்களும் கடவுள் தான்
இத்தனை ஆராய்ச்சி செய்து தாங்கள் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.73 வயதுடைய நான் நினைவு தெரிந்த நாள் முதல் சிவன் பித்து பிடித்தவள்.இப்போது குழம்பிவிட்டேன்.
மிக அருமையான விளக்கம் ப்ரவீன் மோகனை தவிர இவ்வளவு விளக்கமாக. கூற இயலாது அவருக்கு கிடைத்த வரம் நமக்கு வரம் அவர் கிடைத்ததுதான் இளைஞ்கர்கள் முன் வந்து மேலும் மேலும்அராய வேண்டும். மங்கள.
இந்த வீடியோ வினோதமாக இல்லை. ஒரு புதிய விடயத்தை படங்களுடன் விளக்கியுள்ள ஆலோசித்துப் பார்க்க மிக அற்புதமான வீடியோவாக அமைந்திருக்கிறது. லிங்க வடிவத்தையும் உறுப்பையும் சம்பந்தப்படுத்தி தடுமாற வைத்த கருத்துக்களுக்கு ஒரு மாறான விளக்கத்தை தந்துள்ள வீடியோ பலரை ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.
லிங்கம் பற்றிய புரிதல் அருமையாது, தங்களின் விளக்கம் பிரம்மிப்பாக இருந்தது ஏலியன்கள் பற்றிய நம்முன்னோர்களின் சிற்பங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது நன்றிகள் பல 🙏
நாங்க திருமயத்துக்கு போயிருந்தோம் ஆனால் மலையில் இருக்கிற கோயிலை நாங்க பாக்கல ஆனால் அற்புதமா அதை சுற்றி காட்டினீர்கள் பிரமாதம் நல்ல கருத்துரைகள் சொன்னீங்க பிரவீன் சார் மீண்டும் நல்ல கோயிலை காட்டுங்கள் உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்க.கோயில் நிறைய இருக்கு வாழ்க வளமுடன்
வணக்கம் தம்பி.திருமயம் கோட்டை எங்கள் மாவட்டத்தில் தான் உள்ளது.கோயிலுக்கு சென்றிருக்கிறேன்.ஆனால் இந்த ரகசிய அறை லிங்கம் இருப்பதை யாரும் கூறியது இல்லை.ஆனால் ஆயிரம்ஆண்டுகளுக்கும் முன்னர் உள்ள கோயில்.குடைவரை பெருமாள்,சிவன் கோயில் உள்ளது. நன்றி.
Good morning 😊 அருமை, அற்புதமான விளக்கம் 👏👏💐💐 லிங்கம், ஒரு spacecraft... சிவபெருமான்,எல்லா சித்தர்களுக்கும் தலைமை சித்தர் என்பர், அப்போ சித்தர்களும் alien களாக வேற்று கிரகங்களில் இருந்து வந்து நம்மை கடைதேற்ற வந்தவர்களோ? 🤔🤔🤔🤔 வாழ்த்துக்கள் 💐👏
Thank u so much Praveen, i am really wondering in ur every video. U r not only a good Archaeologist, But,Very Good Teacher too. Explaining this just like that (Soldier and Tribal relation examples),it is Proving U again
Always perfect your teaching method........👍.........கோவில்களின் சிறப்புகளும்,அறிவியல் சார்ந்த உண்மைகளும் உங்கள் சேனல் மூலம் மக்களுக்கு தெரிவது........பெருமைக்குரிய விஷயம்👌👏🖕👍😍😍😍😍😍
வணக்கம் தோழரே உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது நான் உங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்ப்பதுண்டு திருமயம் பற்றிய பதிவு அருமை அருமை அருமை உங்களுடைய அந்த பேச்சுதிறன் சொல்லும் விதம் தான் பிரமாதம் வெறும் வீடியோ மட்டும் இருந்தால் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் புரிந்திருக்க வாய்ப்புகுறைவு ஆனால் நீங்கள் கூறும் விளக்கம் சிந்திக்க வைக்கிறது நேரிலேயே நாங்கள் சென்று பார்ப்பதுபோல் அனுபவம் வருது உங்களுடைய ஆராய்ச்சி தொடரட்டும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் நன்றி.
Amazing Praveen 👍. தமிழின் முதல் சங்கத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக சிவன் மற்றும் முருகன் இருந்ததாகவும் அந்த சங்கம் கடல் கொண்ட குமரி கண்டத்தில் தென்னாடு எனும் நாட்டில் இருந்ததாகவும் கருத்துக்கள் உள்ளன
உண்மை தான் ஐயா தமிழ் சங்கம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால்! அதை உறுதி செய்ய எவ்விதமான சான்றுகள் இல்லை ஐயா. சிலர் தமிழையும் இந்து மதத்தையும் கேவலப்படுத்தி கொண்டு திரிகின்றனர்.
பிரவீன்மோகன் அவர்களே நன்றி, 1983-ம் வருட ஜூ.வி.பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை, அதில் வெளிநாட்டு ஆய்வாளர் ஒருவரின் பேட்டி உள்ளது. அவர் பெயர் எரிக் வேன் டானிக்கன் என்பது. அவரது கட்டுரை பாருங்கள். உங்களின் இந்த பதிவுடன் 100% சரியாக உள்ளது. ஆய்வை தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்.
Bro ... just opposit this kottai only my mami's house situated ... so during every school vacation i used to go with my uncle's children from pallatur to their house ..,( peroid 1960 to 1970) ... durong every visit we usef to go this fort once ... vl sit under a big rock with a pointed tip ... climbing a straight ladder(that time an iron steep straight ladder was there) to see this shiva in cave.. looking through beerangi ... tank ... thrilling experience we had that time ...thanks to you giving chance to recollect those days ...
1960 i studied in pallattur ach but i dont know thirumayam l very happy to see this vedeo lname pallattur l siva came again varuvar l that iknow gave mango fruit to karaikkal ammai also ganapathy l waiting for mango l
அந்த காலத்து அரசர்களின் அறிவியலும் திறமையும் நிறைய நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை தெரிந்துகொண்டால் ரொம்பவும் நமக்கு உதவியாக இருக்கும் விளக்கமும் சொன்னதற்கு ரொம்ப நன்றி
நண்பரே வணக்கம் 🙏நான் இதுபோன்ற ஆராய்ச்சிகளில் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.சாப்பிடுகிறோம்,தூங்குகிறோம் நாட்கள் சென்றதும் கட்டாயம் இறந்து விடுகிறோம்.இது என்ன விந்தை.இந்தப் பிரஞபத்தின் ரகசியம் என்ன என்று தெரியாமலேயே உலக வாழ்க்கையை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவிட்டு கட்டாயம் இறந்து விடுகிறோம். ஏதாவது உண்மைகளைத் தெரிந்து கொண்டு இறக்கலாமே.
சிவ லோகத்தில் இருந்து சிவ பெருமான் வந்தது உண்மையா இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு இன்றளவும் வந்துட்டு போறதா நம்பவும் படுது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் பூசாரி கிட்ட நா ஒரு நாள் ரொம்ப ஆயாசமா (Relaxing mood) பேசிகிட்டு இருந்த அப்போ அவர் சொன்ன விஷயம் இதோ சிவ பெருமான் தினமும் இந்த கோவிலுக்கு வந்து போறாறு ஆனா மதியம் 12 மணிக்கு கிளம்பி சிவ லோகம் போயிடுவாரு மறுநாள் காலை ல தான் வருவாரு அதனால நீ காலைல யே தரிசனம் பன்னிடு சொன்னாரு அவர் சொன்னது பொய்யா இருக்க வாய்ப்பு இல்ல ஏன்னா அவங்க பொய் சொல்ல அவசியம் இல்ல
திருவண்ணாமலையில் ஒரு குகை இருக்கிறது .அதற்குள் ஒரு கோயில் இருக்கிறது .மிகப் பழைமையான கோயில் அது .இன்றும் அந்த கோயிலுக்கு வந்து சித்தர்கள் வழிபட்டுச் செல்வதாக கேள்வி பட்டேன் .
மிகவும் பயனுள்ள தகவல்கள் புதிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக புரியும் வகையில் கூறியுள்ளீர்கள் நானும் இப்போதெல்லாம் ஆராய்ச்சி மனதுடன் தேடுகிறேன் மோகன் நன்றிகள் பல தோழரே
சிவன் லிங்கத்தை கதவு போல் திறந்து வெளிவந்தவர் என்றால் அதற்கு இவ்வளவு பெரிய கோவில்களும், ஏகப்பட்ட பாடல்களும் எப்படி வந்திருக்கும்? லிங்கோத்பவரில் விஷ்ணு, பிரம்மா என்ன செய்கிறார்கள்?
என்ன ஒரு ஆழமான கருத்துக்களுடன்கூடிய உங்களின் ஆராச்சிப் பணியில் நீங்கள் கண்டறிந்த தகவல்களை நாங்களும் கண்டறிந்து உங்களுடன் பயணிப்பது மனதிற்கு இனம்புரியாத ஒரு இன்பமாக உள்ளது. நீங்கள் கூறுவது அனைத்தும் அற்புதமாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
திருமயம் = நிறை செல்வம் திருமையம் = பெருமைகள் மிகுந்த மையப்புள்ளி எப்படியானாலும் இறைவனே வந்து இறங்கியதால் அருட்செல்வம் நிறைந்த இடம் / இறைவன் தானே தேர்ந்தெடுத்து வந்து நின்ற இடம் . தமிழனாக தலைவணங்கி சிவனை போற்றுவோம் , நமசிவாய வாழ்க.
லிங்கத்தின் பற்றி விளக்கம் மிகவும் அருமை நீங்கள் பேசும் விளக்கம் உங்கள் தமிழ் அழகு உங்கள் ஆராய்ச்சி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி உங்கள் ஆராய்ச்சி அனைத்தும் பிரமிக்க வைக்கிறது அண்ணா சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் இறைவன் அருள் உங்களுக்கு என்றும்
சிவனை பற்றிய விவரங்களை சித்தர் பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தெள்ள தெளிந்தார் க்கு ஜீவனே சிவம் ஆகும் என்கிறார் திருமூலர்.. சிவன் என்பது நம்முடைய உயிரின் மையம் ஆன உயிர் சக்தியை குறிக்கும் இதனை உணர்த்தவே சித்தர்கள் சிவனை லிங்கம் ஆக உருவம் தந்து வடிவமைத்தனர். பல சித்தர் பாடல்களில் சிவனை பற்றிய குறிப்புகள் உள்ளன.
Hi Praveen Mohan. I don't know who is Sivan. But he is everything for so many people including me. He can't be alien. He is with us in a invisible form.
ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தினார் என்பது உண்மை என்று நீங்கள் ஏற்றுக்கொண்டால், ஏன் சிவன் என்ற மனிதன், ராக்கெட் மூலம் பிற கோள்களுக்கு சென்று வந்தவராக இருக்க முடியாது. அதை சிற்பிகள் செதுக்கி இருக்கலாம் இல்லையா? ராக்கெட் மூலம் சிவன் என்ற ஏலியன் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்று, சிவனை ஏலியன் ஆக்க ஏன் இவ்ளோ தூரம் போராடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு பக்கம் கடவுள் இல்லை என்று கூறுகிற கோஷ்டி, ஒரு பக்கம் கடவுளை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் கோஷ்டி, ஒரு பக்கம் நமது கடவுளரை திருடி, புரியாத மொழியில், நமது வரலாற்றையும் கடவுளரையும் திருப்பி, குழப்பி, வாழ்ந்து கொண்டிருக்கும் கோஷ்டி. இது பத்தாது என்று, இப்போது நம்ம பிரவீன் மோகன். டேய் தமிழன் களா சிவன் ஒரு ஏலியன் டா.. என்று மற்றொரு குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி கொண்டிருக்கார் என்று தோன்றுகிறது. நான் பிரவீன் மோகன் சன்னலை கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில சன்னலில் அவரை பின் தொடர்ந்து வருகிறேன். நிறைய இதுவரை பார்த்திராத, வரலாற்று புராதன இடங்களை அவரது சன்னலின் மூலம் பார்த்து வந்தேன். அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் கடந்து சில மாதங்களாக, நீங்கள் தமிழர் கடவுளர்களை ஏலியன் களாக மாற்ற முயற்சி எடுத்துவருவது அப்பட்டமாக தெரிகிறது. ஏன் இந்த வன்மம் என்று புரியவில்லை. உங்கள் உள் நோக்கம் என்ன என்றும் தெரியவில்லை. பார்ப்போம். இன்னும் என்ன என்ன சொல்ல போகிறீர்கள் என்று. காலம் பதில் சொல்லட்டும். காத்திருக்கிறேன்.
🔥சிவன் தமிழ் கடவுள் அவர் பாடல் எழுதியுள்ளார் உலகத்துக்கு எல்லாம் கலையும் அறியசெய்தவர் அவர்தமிழன்.சிவன்கடவுளை🔥திருடி எங்களுடையாதுகூறினான் ஆரியர்கள். 🔥 தமிழர்கள்🔥 இந்துக்கள் இல்லை