உண்மையில் உங்கள் அப்பா ஓர் அனுபவசாலி.. வாழ்க்கையின் பாடுகளை நேரில் கண்டு தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு முன்னேறியவர்.. அவருடைய பதில்களில் நான் என்னும் அகம்பாவம் சிறிதும் இல்லை.. உழைப்பு மட்டுமே நம் எல்லாத் துயரங்களுக்கும் மருந்து என்பதே அவர் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம்.. 'எனக்குப் பிடித்த நடிகர் என்று யாரும் இல்லை', 'மன இறுக்கம் குறைய வேண்டும் என்றால் நாளைய பணிகளை இன்றே திட்டமிட வேண்டும் ', ' யார் மீதும் நான் பெரிய அன்பு கொள்வதில்லை ' என்னும் அப்பாவின் பதில்கள் அபாரமானவை.. சுய உழைப்புத் தரும் வாழ்க்கைப் பாடம் இது.. மெத்தப் படித்த மேதாவிகள் கூட, அழுது புலம்பும் காலம் இது. அத்தகைய மனிதர்கள் அப்பாவிடம் இந்த வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.. தம்பி சத்தியராஜுக்கும், இந்த வலையொலியைப் பின் தொடரும் நண்பர்களுக்கும் ஒரு செய்தி : கொஞ்சிக் கொஞ்சிப் பேசினால் தான் அன்பு என்பது இல்லை. அப்பா தன் மகனை வறுத்தெடுக்கும் இந்தக் கடினமான சொற்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆழமான அன்பின் கசிவை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது தானே! தம்பி நீங்கள் கொடுத்து வைத்தவர்.. அம்மா காணொலியில் தப்பித் தவறி வந்து விட்டார்கள். அவருக்கு இதற்குள் எல்லாம் வர விருப்பம் இல்லை. வந்த ஒருசில நொடிகளிலும் ஏதோ வேலையாகவே இருந்தார். அவரைப் பார்த்ததில் நெஞ்சம் நெகிழ்ந்தது.. பிறகு தான் புரிந்தது. இத்தகைய ஓர் அப்பாவும் இப்படி ஒரு மகனும் உருவாக, முகம் மறைத்து அகத்தால் வாழும் இந்த அம்மா தான் மூலாதாரச் சக்தி என்று.. மூவரையும் நெஞ்சின் ஆழத்தில் இருந்து வணங்குகிறேன்..❤
தம்பி உணக்கு கிடைத்த அப்பா உன்னுடன் வாழும் தெய்வம். நீ கோடி தவமிருந்திருக்க வேண்டும். உன்குல சாமி அப்பாவ அவர் நீண்ட வாழ்வு வாழவேண்டும் அதுநாள் வரை போற்றி வணங்கிடு. ❤❤❤
அழகான கேள்விகளுக்கு அன்பாகவும் அறிவாகவும் பதில் அளித்த அப்பா பேச்சு மிக அழகு தம்பி ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் அப்பா கவலை படாதீர்கள் அப்பா மகன் உறவு என்றென்றும் வாழ்க ❤❤❤❤❤
தம்பிக்கு ஒரு அறிவுறை அப்பாவுக்கு விவசாய வேலை பாருங்க தயவுகூர்ந்து கேட்டுகொள்கிறேன்.தம்பி தோளுக்கு மேலே வளர்ந்த பிறகு அப்பா அம்மாவுக்கு உதவி பன்னுங்க.விவசாயம் தோட்டவேலை யை வீடியோ போடுங்க.நீங்க வேலை பார்க்கிற பார்க்க அக்கா காத்திருக்கிறேன்.நாளைக்கு வயலில் வேலைசெய்யனும்.
Azhagana tamil varthai (free ya vidu and strees ku alternative ah ) aletcheima yeduthukanum waita thalaile thooki vaikamal parthukanum Vera level answer
அந்த காலம் என்று சொல்லுகிற அளவிற்கு அப்படி என்ன வயதாகி விட்டது அப்பாவுக்கு, 54 வயது எல்லாம் ஒரு வயதா?இருந்தாலும் அப்பா எவ்வளவுதான் திட்டினாலும் நல்ல விதமாக எடுத்துகொண்டு சிரித்துகொண்டே இருப்பது ❤😂😅
50 வருடத்துக்கு முன்ன நம் தமிழ் நாடு என்ன வளர்ச்சி அடைந்து இருந்தது நினைக்கிறீங்க..அப்போலாம் உடல் உழைப்பு தான் முழுக்க..எந்த நவீன இயந்திரமும் நம்பி இல்லை...மின்சார விளக்கு கூட இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு அதான் அப்படி சொல்லி இருக்கிறார்
What he expressing is all true from his bottom of heart is correct. Ur father is great always a good human I'm proud to say that good hearted man great great father so u be loyal to ur father help ur father in work also brother.show mom also every mother father sisters bothers bonding is always god gifted.😅
இந்த அப்படிதான் நாட்டுக்கு தேவை அடுத்து வளர்க்கப்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் ஆனால் மன அழுத்தம் அப்பா சொன்னது போல் பணம் வேண்டும் அதற்கு ஏதாவது நமக்கு எது முடியுமோ அந்த வேலை செய்தால் போதுமானது யாரும் கவலைப்பட வேண்டாம். உழைப்பு உயர்வை தரும் என்பது அப்பாவை பார்த்து தெரிந்து கொண்டேன் தைரியம் மிக அதிகமாக இருக்கிறது அப்பாவிற்கு சந்தோஷம் எனக்கு தெரிந்தது உங்கள் மேல் கொள்ளை பிரியம் வைத்து இருக்கிறார் தம்பி நீங்கள் மேன்மேலும் சிறப்பாக வளர வேண்டும் என்று விரும்புகிறார் வேறு ஒன்றும் இல்லை It is greetappa உங்களுக்கு கிடைத்த வரம் என் அப்பா இறந்து 3வருடம் ஆகிறது. உங்கள் அப்பாவை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக உணர்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉