#manikarnika #manikarnikaashtakam #kasi #adimasam #amavasai #amavasya #adiamavasai #adishankaracharya #மணிகர்ணிகாஅஷ்டகம்
#ஆடிஅமாவாசை
#மணிகர்ணிகாஷ்டகம்
த்வத்தீரே மணிகர்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்யமுக்திப்ரதௌ³
வாத³ந்தௌ குருத꞉ பரஸ்பரமுபௌ⁴ ஜந்தோ꞉ ப்ரயாணோத்ஸவே .
மத்³ரூபோ மனுஜோ(அ)யமஸ்து ஹரிணா ப்ரோக்த꞉ ஶிவஸ்தத்க்ஷணாத்
தன்மத்⁴யாத்³ப்⁴ருʼகு³லாஞ்ச²னோ க³ருட³க³꞉ பீதாம்ப³ரோ நிர்க³த꞉ .. 1..
ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹானும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணி மரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான்.
இந்த்³ராத்³யாஸ்த்ரித³ஶா꞉ பதந்தி நியதம்ʼ போ⁴க³க்ஷயே யே புன
ர்ஜாயந்தே மனுஜாஸ்ததோ(அ)பி பஶவ꞉ கீடா꞉ பதங்கா³த³ய꞉ .
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா꞉
ஸாயுஜ்யே(அ)பி கிரீடகௌஸ்துப⁴த⁴ரா நாராயணா꞉ ஸ்யுர்னரா꞉ .. 2..
தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!
காஶீ த⁴ன்யதமா விமுக்தநக³ரீ ஸாலங்க்ருʼதா க³ங்க³யா
தத்ரேயம்ʼ மணிகர்ணிகா ஸுக²கரீ முக்திர்ஹி தத்கிங்கரீ .
ஸ்வர்லோகஸ்துலித꞉ ஸஹைவ விபு³தை⁴꞉ காஶ்யா ஸமம்ʼ ப்³ரஹ்மணா
காஶீ க்ஷோணிதலே ஸ்தி²தா கு³ருதரா ஸ்வர்கோ³ லகு⁴த்வம்ʼ க³த꞉ .. 3..
புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிககனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது.
க³ங்கா³தீரமனுத்தமம்ʼ ஹி ஸகலம்ʼ தத்ராபி காஶ்யுத்தமா
தஸ்யாம்ʼ ஸா மணிகர்ணிகோத்தமதமா யேத்ரேஶ்வரோ முக்தித³꞉ .
தே³வாநாமபி து³ர்லப⁴ம்ʼ ஸ்த²லமித³ம்ʼ பாபௌக⁴நாஶக்ஷமம்ʼ
பூர்வோபார்ஜிதபுண்யபுஞ்ஜக³மகம்ʼ புண்யைர்ஜனை꞉ ப்ராப்யதே .. 4..
கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகைஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.
து³꞉கா²ம்போ⁴தி⁴க³தோ ஹி ஜந்துனிவஹஸ்தேஷாம்ʼ கத²ம்ʼ நிஷ்க்ருʼதி꞉
ஜ்ஞாத்வா தத்³வி விரிஞ்சினா விரசிதா வாராணஸீ ஶர்மதா³ .
லோகா꞉ஸ்வர்க³ஸுகா²ஸ்ததோ(அ)பி லக⁴வோ போ⁴கா³ந்தபாதப்ரதா³꞉
காஶீ முக்திபுரீ ஸதா³ ஶிவகரீ த⁴ர்மார்த²மோக்ஷப்ரதா³ .. 5..
உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள் ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோதர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும்.
ஏகோ வேணுத⁴ரோ த⁴ராத⁴ரத⁴ர꞉ ஶ்ரீவத்ஸபூ⁴ஷாத⁴ர꞉
யோ(அ)ப்யேக꞉ கில ஶங்கரோ விஷத⁴ரோ க³ங்கா³த⁴ரோ மாத⁴வ꞉ .
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா꞉
ருத்³ரா வா ஹரயோ ப⁴வந்தி ப³ஹவஸ்தேஷாம்ʼ ப³ஹுத்வம்ʼ கத²ம் .. 6..
புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம்
உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்னே. உனது
பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது.
த்வத்தீரே மரணம்ʼ து மங்க³லகரம்ʼ தே³வைரபி ஶ்லாத்⁴யதே
ஶக்ரஸ்தம்ʼ மனுஜம்ʼ ஸஹஸ்ரநயனைர்த்³ரஷ்டும்ʼ ஸதா³ தத்பர꞉ .
ஆயாந்தம்ʼ ஸவிதா ஸஹஸ்ரகிரணை꞉ ப்ரத்யுக்³த³தோ(அ)பூ⁴த்ஸதா³
புண்யோ(அ)ஸௌ வ்ருʼஷகோ³(அ)த²வா க³ருட³க³꞉ கிம்ʼ மந்தி³ரம்ʼ யாஸ்யதி .. 7..
ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறேன்.
மத்⁴யாஹ்னே மணிகர்ணிகாஸ்னபனஜம்ʼ புண்யம்ʼ ந வக்தும்ʼ க்ஷம꞉
ஸ்வீயைரப்³த⁴ஶதைஶ்சதுர்முக²த⁴ரோ வேதா³ர்த²தீ³க்ஷாகு³ரு꞉ .
யோகா³ப்⁴யாஸப³லேன சந்த்³ரஶிக²ரஸ்தத்புண்யபாரங்க³த꞉
த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம்ʼ நாராயணம்ʼ வா ஶிவம் .. 8..
மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம்
செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத் தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார்.
க்ருʼச்சை²ர்கோடிஶதை꞉ ஸ்வபாபநித⁴னம்ʼ யச்சாஶ்வமேதை⁴꞉ ப²லம்ʼ
தத்ஸர்வே மணிகர்ணிகாஸ்னபனஜே புண்யே ப்ரவிஷ்டம்ʼ ப⁴வேத் .
ஸ்னாத்வா ஸ்தோத்ரமித³ம்ʼ நர꞉ பட²தி சேத்ஸம்ʼஸாரபாதோ²நிதி⁴ம்ʼ
தீர்த்வா பல்வலவத்ப்ரயாதி ஸத³னம்ʼ தேஜோமயம்ʼ ப்³ரஹ்மண꞉ .. 9..
கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர். ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர்.
இதி ஶ்ரீமத்பரமஹம்ʼஸபரிவ்ராஜகாசார்யஸ்ய
ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத꞉ க்ருʼதௌ
மணிகர்ணிகாஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ..
21 окт 2024