சிற்பிகளைப் போற்றும் அற்புதமான சிறந்த காணொளி. பெருமாள் ஐயா அவரது குருநாதர் திரு. கணபதி ஸ்தபதி அவர்களைக் குறிப்பிடுகையில் எனது மனதில் பழைய நினைவலைகள். சுமார் ஒரு இருபத்தியைந்து ஆண்டுகள் முன்னர், கணிப்பொறி பட்டப்படிப்பு முடித்து சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் நேரம். என் தகப்பனார் சொல்லி, கணபதி ஸ்தபதி அவர்களை, அவர்கள் இல்லத்தில் ஒரு நாள் சந்திக்கச் சென்றேன். அவருக்கு சென்னையில் இல்லாத networkஆ. அதனால், எனது படிப்பிற்கேற்ற ஒரு கணினி வேலைக்கு எங்காவது சிபாரிசு செய்யுங்கள் ஐயா என்று தான் சென்றேன். எனக்குச் சிறு பிராயத்தில் இருந்தே கொஞ்சம் வரைவதில் ஆர்வம் உண்டு. என் தகப்பனார் சொல்லி அனுப்பினார், 'ஐயாவைக் பார்க்கச் செல்கையில், நீ வரைந்தவற்றில் சில படங்களையும் கொண்டு போ' என. அந்தப் படங்களைக் காண்பித்தேன். அப்படி ஒரு பார்வை மேலும் கீழும் என்னைப் பார்த்தார். நமக்கு எதுக்கு இந்த Computerஓ கண்றாவியோ, அத்த தூக்கிப் போட்டுட்ட்டு என்னோட வந்துடு இந்த சிற்பத் துறைக்கு என்றார். இது சத்தியம். அன்றிருந்த குடும்ப சூழல் எனக்கு அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இன்றும் அதை நினைத்து அந்தக் குறை உண்டு. பெருமாள் ஐயா கொடுத்து வைத்தவர்.
நான் ஒரு சிவாச்சாரியார். இறைவன் உலகை படைத்தார். ஆனால் அவருக்கு உருவம் தத்ரூபமாக அமைக்கும் பாக்யம் உள்ளவர்கள் தாங்கள். பூர்வ புண்ணியம் நிறைந்தவர்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் படைப்புகள் காலம் கடந்து நிற்க்கக்கூடியவை. ஒரு வேண்டுகோள். பெரும்பாலான சிற்பங்கள் சிற்பியின் பெயர் தெரியாத நிலையில் உள்ளது. தங்கள் படைப்புகளில் பீடத்தில் பெயர் இருந்தால் சிறப்பு. ஓவியங்களில் காணப்படுவதைப் போன்று.
Avatar live channel இப்படி ஒரு கலையையும் கலைஞர்களையும் அனைவரின் பார்வைக்கும் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.... இந்த கலையும் கலைஞர்களும் நீடூழி வாழ வேண்டும்..!!
Extraordinary work. This is the Real Art which we have to promote and the Government should give recognition to the Masters like him. Great Dedication 👍
Difficult to find people like this who continue the legacy of stone carving without machines which has been a part of our culture for ages..... I hope the art does not vanish....
கன்யாகுமரி திருவள்ளுவர் சிலையை படைத்த குருநாதர் சிற்ப குரு பத்மபூஷன் உயர்திரு கணபதி ஸ்தபதி அவர்களின் ஆஸ்தான சிற்பி உயர்திரு பெருமாள் ஸ்தபதி அவர்களுக்கு வணக்கம். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு இது. பெருமாள் அண்ணன் இயல்பாகவே கலை உணர்வு கொண்டவர்கள். திரு கணபதி ஸ்தபதி அவர்களிடம் கூடவே இருந்தவர்கள். கணபதிஸ்தபதி அவர்களின் உணர்வுகளையும் எண்ணத்தையும் தன் மனதிற்குள்ளே உள்வாங்கி திறன்பட அப்படியே ஓர் அழகு சிலைவடிவமாக வெளிக்காட்டக் கூடிய மிகப்பெரிய கலைஞர் திரு பெருமாள் ஸ்தபதி அவர்கள் "அயன் படைப்பு மாறுமே" "மாறாதே மயன் படைப்பு" - சங்க கால சிற்பச் சித்தன் மாமுனி மயன். அதாவது பிரம்மன் படைத்தது நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிக்கும் சிற்பியான மயன் படைத்த படைப்புகள் என்னாலும் மாறாமல் அப்படியே நிலைத்து நிற்கும் அதுபோல பெருமாள் அண்ணன் செய்த கலைகள் யாவும் காலத்தால் நிலைத்து நிற்கும். 🙏 ------ இவன் திரு கணபதி ஸ்தபதி அவர்களின் ஆஸ்தான சாரதி மயத் தமிழ் பிரியன் சுப்பையா தேவகோட்டை
சமுதாயம் வாழ கலைஞர்கள் வாழவேண்டும், கலையும் வளரவேண்டும். கலைஞர்கள் வளம்பெற்று வாழ்ந்தால் கலாசாரம் வளரும் மேன்மைபெரும். பயனாக நாடும் புகழ் பெரும். சில்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
After seeing this video, it gives a great feeling sir. Appreciate your dedication to continue our traditional way of carving till date. Hats off to you sir.
மஹாலக்ஷ்மி தாயே தான் உங்களுக்கு அருளீருக்கா. படிச்சவன்னு சொல்லீட்டு இருக்குரவன்லாம் இந்த மாதிரி உயர்ந்த நம்ம கலைகளையும் இறை உணர்வையும் பெரிய அளவுல அளிச்ச வெள்ளைக்காரன் சிலபஸ் ல எதையோ படிச்சுட்டு ஏதோ வேலைக்கு பொயிட்டு பரபரப்பான வாழ்க்கைய வாழ்ராங்க. நீங்க படிப்பவிட்டுட்டு இந்த கலையில் பணியாற்றுவது இறை அருள் தான். உங்கள மாறி இன்னும் நிறைய கலைஞர்கள் தான் நமக்குத் தேவை. உங்கள் சேவைக்கு நன்றி ஐயா. 🙏🏼 ஒரு சிலைக்குப் பின்னாடி மெய் சிலிர்க்க வைக்கும் இவ்வளவு உணர்வும் கலையும் உழைப்பும் இருந்தால் இதைப்போல் ஆயிரக்கணக்கான சிலைகளோடு செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான கோவில்கள் பின்னால் எவ்வளவு பக்தி, கலை, உழைப்பு இருக்கும்? அவற்றை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும், உயிரினும் மேலாக. 🙏🏼🙏🏼🙏🏼 இந்த பதிவிற்கு நன்றி. 🙏🏼
உடலோடும் உணர்வோடும் உள்ளத்தோடும் உளியோடும் சுத்தியோடும் புத்தியோடும் பக்த்தியோடும் செதுக்கப்படும் சிற்பங்கள் மிக அற்புதம் சிற்பிகளின் கை விரல்களுக்கும் கால் பாதங்களுக்கும் நன்றி
Great work sir..No words ! For Kalaingar did with Poombhugar and valluvar kotam. For MGR did with Tamilthai ..Excellent sir definite they need more encouragement and awards. Keep up your good work sir !
🙏நமஸ்காரம் ,மிகவும் சிறப்பாக உள்ளது,உங்களுள் கடவுள் இருப்பதால்தான் அருமை யாக உயிர் கொடுத்து ச்செய்யமுடிகிறது.தங்களுடைய போன்நம்பரை கொடுத்திருந்தால் இப்புவுலகில் உள்ள அணைவரும் உங்களை அணுக,தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நமஸ்காரம்
இவர்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். வள்ளுவர் கோட்டம் கல் தேர் கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 1972 ல் பூம்புகார் கலை கூடமும் கலைஞர் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது.
ஐயா நான் மதுரை தினமும் தமுக்கம் மைதானத்தை கடந்து தான் செல்வேன். தமிழ் அன்னை சிலை காண்பதற்காக மட்டும் அந்த வழியாக செல்வேன். இப்படி ஓரு தெய்வீக சிற்ப்பத்தை வழங்கியதற்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
Thank you very much for this video. What a marvellous performance. Bravo. Eraivan manithannukke uyir koduthan, manithan kadavulukku uyir koduthan so both are gods.🙏
Unbelievable............ Absolutely beautiful...... I know how they working hard...... Because I am doing wind shield suiting as carving for Air craft.......... 🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyya vanakkam excellent work really thank you very much for this vedio .Uli sedukkum bodu varum nadaththai kettukonde irukkalam . Oru Murai darmasthala sendra bodu kettiirukkiren . Anda naadam kaduvulin Mel eerkum 40 years back . People say there is no rebirth for sculptors. Thank you very much for showing this and your dedication is very very great . God bless you all.
No words to say. Government should encourage them and support their family. Such an art must be kept alive. Government should take steps and doo the needful.