அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளில் மனைவியை கணவனை விவாகரத்து செய்து வேறு ஒருவரை திருமணம் செய்வது இயல்பு ஆனால் நம்முடைய நாட்டில் விவாகரத்து செய்து வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்தல் என்பது இயலாத காரியம் ஏனெனில் அந்த வழக்கம் நம்மிடம் அதிகம் இல்லை ! சேர்ந்து வாழலாம் ஆனால் ஒன்று சேரக்கூடாது என்று சொன்னால் ? ஒரு மனிதன் தன் ஆசைகளை எத்தனை நாள்தான் அடக்கி கொண்டு வாழ்வது அப்படி இருந்தால் ஒருநாள் அல்லது ஒருநாள் ஆணோ அல்லது பெண்ணோ வழி தவற வாய்ப்புள்ளது எனவே இதுவும் இயலாத காரியம் ! இதற்கு ஒரே தீர்வு இது நிர்பந்தம் தான் அதனால் சேர்வது குற்றமில்லை என்று எடுத்துக்கொள்வது தான் சரியான தீர்வாக இருக்கும். எந்த முஸ்லிமும் காஃபிரை திருமணம் செய்ய மாட்டான் சிலரை தவிர அப்படியென்றால் இந்த குழப்பத்தில் மாட்டிக்கொள்வது ஏற்கனவே திருமணமான மாற்றுமத தம்பதிகள் தான் எனவே இது அவர்கள் எதிர்பாராத நிர்பந்தம் தான். எனவே அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இது நிர்பந்தம் என்று எடுத்து கொள்வது தான் நியாயமானதாக இருக்கும். எனவே அவர்கள் தாம்பத்தியத்தில் சேர்ந்து வாழ்வது நிர்ப்பந்தத்தில் தான் சேரும்.