எனக்கு 63வயதாகப் போகிறது.என் இளவயதில் எங்கள் வீட்டில் மர்பி ரேடியோ இருந்து.இலங்கை வானொலி இரவின் மடியில் சென்னை வானொலியில் ( மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி முடிந்ததும் இரவு 10&11 என நினைக்கிறேன் இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த காலங்களை நினைக்கும் போது இன்றும் ஆனந்தமாக உள்ளது.
ஆமா சார் murphy Radio என்ற வார்த்தையே எதோ புதிய வார்த்தை போல் தோன்றும் இக்கால இளைஞர்களுக்கு. இனிய மலரும் நினைவுகள். இனிய பொற்காலம் அது. மீண்டும் மலருமா அது !!!
S P பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழ் திரைப் படப்பாடல்களின் ஒரு சகாப்தம். மீண்டும் இவர் போல பாட இன்னொருவர் வருவாரா என்று தெரியவில்லை. இந்தப் பாடல்கள் அனைத்தும் என் இளமை காலத்தை திரும்பி பார்க்கவைத்துவிட்டது.
Sweet கடையில் உள்ள எல்லா இனிப்புகளையும் காதில் சாப்பிட்டது போல இருந்தது. ஒவ்வொரு இனிப்பும் (பாடலும்) ஒரு ரகம், எல்லாமும் சுவைமுகம். முதல் முதலில் 50000 இனிப்புகளை கொண்ட ஒரே ஒரு ஸ்வீட் கடை அது SPB SWEETS.
தென்றலுக்கும்... குரலுக்கும்... உருவம் இருக்கிறதா????.. ஆமாம் இருக்கிறது அதுதான் SPB உருவத்தில்..... அலங்கார மணிகளாக.,..வாசனைமலர்களாக... பாடல் தொகுப்புகளை....தொராணமாக... வழங்கிய நண்பர்களுக்கும் நிர்வாகத்திற்க்கும் நெஞ்சார்ந்த... இதயம் கனிந்த... நன்றி 🙏 பதிவுக்கு நன்றி 🙏📽️ இசை வெறியன் சேகர் சென்னை 🎻🎷🪗🥁🎺🎸🎧
இலங்கை வானொலி இல்லையேல் அக்காலசினிமாக்கள் வெற்றிபெற்றிருக்காது இசையமைப்பாளர்கள் பாடகர்கம்கவிஞர்கள்பிரகாத்திருக்கமாட்டார்கள் எளியோரின்ஒரேபொழுதுபோக்குவானோலிமட்டுமே
MGR, சிவாஜி, முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார் கமல் விஜயகுமார் என அனைத்து நடிகர்களுக்கும் ஏற்ற விதமாக பாடுவதில் பாலு அவர்களுக்கு இணையில்லை நல்ல பாடல்களின் தொகுப்பு 🎼💐👌
எனக்கு 60 வயது ஆகிறது. அன்றைய நாட்களில் இப்படிப்பட்ட பாடல்களோ அல்லது செய்திகளையோ வானொலியில் மட்டுமே கேட்க முடியும். ஆனாலும் இன்றும் அன்றைய பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கிறது காரணம் அறம் முதன்மையாக நிலைத்தது. இன்றைய தலைமுறையினர் மிகவும் துரதிஸ்டசாலிகள். தொகுத்து வழங்கியவருக்கு மிக்க நன்றி.
இவரின் பாடலை கேட்கும்போது msv, kumar, kvm போன்ற இசை மேதைகள் போல் பாலு போன்ற பாடகர்களை வேலை வாங்கிட்டு அருமையான பாடல் கள் கொடுத்தார்கள். தற்போது பாடல் களில் என்ன இருக்கு?? சரக்கு இல்லை?? எதோ சப்தம் மட்டும் தான் இருக்கு!! Old is gold!!!
அருமை.அருமை.அருமை.பலா பழத்தை பிரித்தால் எல்லா சுழைகளும் ஒரே சுவையாக இருக்கும் அது போல ஒவ்வொரு பாடலும் ஒரே தேன் சுவை.SPB க்கு நன்றி.தேர்ந்தெடுத்து கொடுத்த உங்களுக்கும் நன்றிகள் பல.
தமிழ் ஆட்களை மட்டும் வாழ்த்துங்கள். வெளிமாநிலத்தில் இருந்து இங்குவந்து நல்ல சம்பாத்தியம் பண்ணிவிடுகிறாா்கள் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம். இதேமாதிரி வெளிமாநிலங்களில் நம் தமிழ் ஆட்களை மதிக்கிறாா்களா? நல்ல கோடிக்கணக்காக சம்பாத்தியம் அங்கே பண்ணவிடுவாா்களா இடம் தருவாா்களா அய்யஅ. நான் எல்லா மாநிலத்திற்க்கும் போய் கேள்வி கேட்டு சண்டையே போட்டு இருக்கிறேன் அய்யா. வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்று இன்னமும் இருக்கிறோம். மற்றமாநிலத்தில் அப்படி இல்லை . தமிழ் நாடு என்றால் ஏளனமாக பாா்க்கிறாா்கள் அய்யா. இனியாவது நாம் திருந்த வேண்டும் அய்யா.மதம், ஜாதிபாா்க்காமல்,அரசியல் பாா்க்காமல் தமிழ் மக்களாய் ஒன்று சோா்வோம் அய்யா. மற்றவா்களை பகைக்கச்சொல்லவில்லை. அவா்களை மாதிரி நாம் ஒற்றுமையாய் இருப்போம் அய்யா.
Actually these songs hit the audience because of music compositions, not for his voice. Whoever sang the same, they are enjoyable. A few opportunists got the chances, but they were not Tamils; Really sad.
எஸ்பிபி, ஜானகி தெலுங்கராக இருந்தாலும் , தமிழைக் கற்று சரியான உச்சரிப்புடன் பாடல்களைப் பாடி தமிழுக்குத்தானே புகழ் சேர்த்தார்கள். தமிழைத்தானே வளர்த்தார்கள். எந்த தமிழன் பிற மொழி கற்று வெளி மாநிலத்தில் புகழ்பெற்றான். அப்துல்கலாம் தவிர