நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை அதிலும் கமெண்டுகளை படித்துக்கொண்டே கேட்பது ஒரு சுகம் பழைய நண்பர்களோடு சேர்ந்து பாடலைக் கேட்பது போன்ற ஒரு இன்பம்
நிஜமாகவே மனம் ஏங்கிப்போகிறது..பாட்டின் பின்னணிசை end of 70's கொண்டு செல்கிறது.. இப்படி இழந்த உணர்வுகளை கிளற இசை ராட்சசன் இளையராஜாவால் மட்டுமே முடியும்!!
கேட்க தைரியம் இல்லை,பெரு மூச்சு வருகிறது,80களில் நாம் வாழ்ந்த வாழ்வெல்லாம் நினைவாக விரிகிறது.அந்த இனிய வாழ்வு நம் பிள்ளைகளுக்கு வாய்க்க வில்லை,அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் நினைவில் பாதுகாக்கும் அளவிற்கு பொக்கிஷங்கள் ஒன்றும் இல்லை.70To90இந்த நூற்றாண்டின் பொற்காலம்.
ஏழு பிறவியிலும் கேட்டாலும் திகட்டாத தெவிட்டாத ஒரு அருமையான பாடல் உண்டென்றால் அது இந்த பாடல் மட்டுமே. கங்கை அமரனின் உயிரோட்டமான வரியில் இளையராஜாவின் தெவிட்டாத இசை வெள்ளத்தில் KJ யேசுதாஸ் SP சைலஜா அவர்களின் இனிமையான குரலில் விஜயகாந்தின் அழகும் எதார்த்தமான நடிப்பில் தமிழ்மொழியில் மறக்க முடியாத மகுடம் இந்த பாடல்.இப்பாடல் எங்களை போன்றவர்களை சுமார் 40 வருடங்கள் பின்னோக்கி 70 to 80 காலகட்டத்திற்க்கே அழைத்துச்சென்றுவிடும். அந்த காலத்தில் திருமணம் கோயில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கேட்ட பாடல்.இந்த 2022 வருடத்திலும் திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்..❤❤❤
நான் 1970 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
நீங்கா நினைவுகள் எவ்வளவு ஏங்கினாலும் திரும்பு வராத நாட்கள். வெகு தூரம் கடந்து வந்து விட்டாலும் அந்த நாட்கள் போல வரவே வராது. So many awesome memories so tender and fresh.
ராக்கெட் இல்ல,எஞ்சின் இல்ல,நவீன தொழில்நுட்பமுமில்லை ஆனால் இந்த பாடலை கேட்டால் நேரடியாக 80s,90s காலத்திற்கு சென்று விடலாம்.. இளையராசா இசைக்கு நீயே என்றும் ராஜா .
இங்கே உள்ள கருத்துகளை பார்க்கும் போது 1980 90களில் நினைத்தவுடன் ஏதும் கிடைக்காது ஆனால் வாழ்க்கை எவ்வளவு எதார்த்தமாகவும் கவலைகள் இல்லாமல் வாழ்ந்து இப்போது எல்லாம் இருந்தும் மன அழுத்தத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இது போன்ற பாடல்களே மருந்து
நான் 1975 பிறந்தேன்...இந்த பாடல்களை கேட்கும் போது எனது பள்ளி செல்லும் நினைவுகள் என் மனதிலும் இந்த பாடல் கேட்டு கண் மூடினால் கண்ணீர் வருகிறது..மீண்டும் அந்த உலகம் செல்ல எங்குகிறேன்...
மலையிலே, தேயிலைத் தோட்டத்தில் 1968ல் பிறந்தவன். பிழைப்புக்காக மலையைப் பிரிந்து வந்துவிட்டேன். இப்போது இந்தப் பாடலைக் கேட்கும் போது உயிர் மெதுவாய், மெதுவாய் கரைகிறது. பிறவா நிலை வேண்டும் இறைவா. இனியொரு பிறவி வேண்டிலன்.
இதுதான் நமது இசைஞானி இளையராஜா அவர்களது பாடல்கள் என்றென்றைக்கும் இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் பாடல்கள் இவருக்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
அன்றய காதலர்களுக்கு மிதிவண்டி ஒரு வரப்பிரசாதம் தன் முன்னால் அமரவைத்து அரவணைத்து அழகிய காதலோடு அழைதது்ச்செல்லும் அழகே ! தனிதான். அதுவும் அழகான பாடல் வரிகளும் இசையின் இனிமையும் என் தலைவனின் அழகும் குறும்பும் ஆபாசமில்லாத நடன அசைவுகளும் அருமையில் அருமை🌹💛🎻
அந்தக் காலங்களில் வசதிகள் குறைவு சௌக்கியம் சுகம் அதிகம் இன்று வசதிகள் பெருகிவிட்டன பார்க்கும் அனைவரும் சுகமாய் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது தேவைகளைக் குறைத்துக் கொண்டவர்கள் சுகமாக இருக்கிறார்கள் ஆண்டவனுடைய அனு கிரகத்தில் எனக்கு அந்த நிம்மதி கிடைத்திருக்கிறது நமசிவாய
அன்றைய காலகட்டத்தில் இசையின் உருக்கம் இருந்தது ஒசையின் பெருக்கம் இல்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரும் பாடல்களில் ஒசையின் பெருக்கம் மட்டும் தான் இருக்கிறது இசையின் உருக்கம் இல்லை.காதிற்கு இனிய பாடல்களை கேட்டு ரசித்த பாக்கியம் 70s80s90s தலைமுறைக்கு மட்டும் தான் சொந்தம்....
ஒருவரை அரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரின் பழைய நினைவுகளை திரட்டும் நார்கோஸ் அனாலிசிஸ் , ஹிப்னாடிசம் போன்றவை தேவையே இல்லை ... இது போன்ற பாடலை கேட்டாலே நாம் அனைவரும் நம் மனதில் உள்ள அனைத்தையும் ஒருவரிடம் கொட்டிவிடுவோம். ஞானிகளால் மட்டுமே இப்படிப்பட்ட இசையைக் கொடுக்க முடியும்.
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை . .......
சாதாரண உடை, சட்டைப்பையில் அதிகமாய்25 பைசா, கிணற்றில் பல மண் நேரம் நண்பர்களுடன் நீச்சல் இந்த இன்னிசை இந்த உலகம் தான் என்வாழ்வின் பசுமரத்தாணியாய் இனிமையாய் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது, சொர்க்கம் இசைஞானியால் எங்களுக்கு எப்போதோ கிடைத்து விட்டது
All village Teakadaie BENCH eantha SONG Kekkum in 1980s super 👌 Earukkum Atmosphere soothmana Karru NaaN Madurai palangaNatham Arasaradiee pakkam stay with my Father 👍iam ENJOIYING WELL 👍🙏💐💐💐💐🙏 Thank u Raja Sir 👍
எங்கேயோ கடக்கும் போது காதில் விழும் பாடல்..நின்று கேட்பேன்..மீண்டும் கேட்க தோன்றும்...இப்போது உள்ள வசதிகள் கிடையாது.மீண்டும் எப்போதாவது எங்கேயாவது கேட்கும்...ரசிப்பேன்..ராஜாவின் அந்த "பூஞ்சிறகில்"குரல் மயக்கும்.....🎶🎵
சைக்கிளில் தன் கணவன் உடன் செல்லும் போது இருந்த போது இருந்த மகிழ்ச்சி சந்தோஷம் இப்போது இல்லை. அப்போது இந்த பாடலை எங்கோ ஒலிக்கும் போது கேட்டு கொண்டே போனால் அதில். கிடைக்கும் ஆனந்தமே தனி சுகம்.
80தில் எனக்கு 10 வயது. அன்று இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இன்று கேட்கும் போது மனதை ஏதோ செய்கிறது. நிறைய மணிதர்களை இழந்து விட்டேன். இந்த வாழ்க்கையை நேசியுங்கள்.
நான் 1965-ல் பிறந்தேன். என் மனதில் நான் சொல்ல நினைக்கும் அனைத்து கமெண்ட்களையும் இங்கே அனைவரும் கூறியுள்ளீர்கள். அனைவருடைய கருத்துக்களும் என் உள்ளத்துள் உரசி உறவாடுகிறது. தேனினும் இனிய பாடல்..தெவிட்டாத இசை. இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விட வேண்டும் என்பது எனது ஆசை...
எனக்கு இப்போ வயது 62. எனக்கும் எல்லோர் போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதிலும் என் வயதுடைய ஷோபாவின் மறைவு என்னை பாதித்ததுடன், இப்போ இந்த காட்சியை காணும் போது எனக்குள் மறைந்துள்ள சோகம் வெளி வருகின்றது. நன்றிகள் கோடி இலங்கை சர்வதேச ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன த்திற்கு 🙏
சினிமாவுல பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டு பாதிக்கப்பட்டு தன்னை தானே மாய்த்துக் கொண்ட பல இளம் நடிகைகளில் இவரும் ஒருவர். பாதிப்பு தந்தவனுக்கோ பல விருதுகளும் புகழும் கிடைத்தது.
K.j.யேசுதாஸ் போன்ற பாடகர் பிறக்காமல் இருந்திருந்தால் தமிழ் மெலடி பாடலுக்கும் ,சோக பாடலுக்கும் நம் நெஞ்சை வருடும் பாடல்களுக்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அவரை பிறபித்த கடவுளுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். இவர் கூட பயணித்த இசை கலஞ்சர்களுக்கும் கடவுளிடம் நன்றி கூறி பிராதிகிரென்.
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
1979ல் வெளிவந்த "அகல் விளக்கு" திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக இசைஞானி இளையராஜாவின் இனிமையான மெட்டிற்கு தோதாக என்றென்றும் நிலைத்து நிற்கும் விதமாக கங்கை அமரனின் தேன் வரிகளை அழகு தமிழில் பாடி அசத்தியுள்ளார்கள் ஜேசுதாஸும் ஷைலஜாவும். "நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்... ம்ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் வண்ணம் ஆஹா ஆனந்தம்... ம்ம்ம்" தனிமையில், கண்களை மூடிக் கொண்டு இப்பாடலை கேட்கும் போது நம்மையுமறியாமல் இளமைப் பருவத்திற்கு இட்டுச் செல்லும். அந்நாளில், என்ன தான் அவசர வேலையிருந்தாலும் வானொலியில் இப்பாடலை கேட்க நேர்ந்தால் எல்லாம் மறந்து வட்டு முழுமையாக கேட்ட பின் தான் அங்கிருந்து கால்கள் நகரும். சங்கீதத்தின் ஈர்ப்பு சக்தி. இதர வசதிகள் இல்லாத அக்காலத்தில் எப்படா இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்குமென்ற எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமா? காலங்கள் மாறின... மானிடக் கோலங்கள் மாறின... எனினும் இப்பாடலின் மீதுள்ள மோகம் மட்டும் தீர வில்லை. காலத்தால் அழியாத இப்பாடலை உருவாக்கியவர்கள் அனைவருக்கும் என் நன்றி!
இளையராஜாவின பாடல்கள் அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல. எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இவரின் பாடல்களைக் கேட்டால் மட்டும் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
நான், 1978பிறந்த்ன் நான் பள்ளி செல்லும் போது இப்பாடலை கேட்பேன் அப்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது கேட்கும் போது என் மனதில் பழைய நினைவுகள் வருகின்றன
உலகின் முதல் தாலாட்டு தாயின் மடிதான்....💙 அதைப் போன்று தான் இசை ஞானியின் தாலாட்டும்...💗 என்ன தவம் செய்தேனோ....🎵 இசைத்தமிழ் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கின்ற காலங்களில் பிறந்ததற்கு....💓💓💓🎵🎵🎵 என்னாலும் நன்றி... எட்டுத்திசைக்கும் நன்றி... நாம் பிறந்த பொன் மன்னுக்கும் நன்றி!
எந்த ஒரு வியாதிக்கும் அருமருந்து! அமுது படைக்கும் அழியாத வரம் தரும் அழகான பாடல் அரிதான இசைக்கோர்வை! இதயம் பிழிந்து தேன் எடுத்தாற்போல் எண்ணம் எல்லாம் வழியும் !எங்கள் காலம் உம்மோடே கழியும் இசை தேவனே உனக்கு மட்டும் என்ன இவ்வளவு அக்கறை இசையால் பிரபஞ்சத்தின் காதை இதமாய் வருடுகிறாய நன்றி!
Hummingல் பல வித்தகைகள் தெரிந்த ஒரே நபர் இளையராஜா...எல்லா பாடலிலும் ஒரு உயிரோட்டம் இருக்கு.எள்ளளவும் குறையாத இனிமை ராஜா அவர்களின் பாடலில் எப்போதும் ததும்பததும்ப இருக்கும்.