மிகவும் அருமை ஐயா.🙏👍 நான் பள்ளி படிக்கும் பொழுது எனது தமிழ் அம்மா , உங்களை போல் மிகவும் அற்புதமாக பாடம் நடத்துவார்கள்.தலைப்பை பார்த்ததும் தமிழ் எண்கள் அப்படியே மனதிற்குள் வந்தது. 👍🙏
ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள். தங்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், நீங்காத சொற்திறத்தையும், கொடுக்க இறையை வேண்டிக்கொள்கிறேன். கேட்பார் பிணிக்க தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என வள்ளுவர் சொல்வது போல இருக்கிறது தங்களின் கற்பித்தல் அணுகுமுறை. மெய்யியல் கல்வி சேனலின் சிரம் தாழ்ந்த நன்றிகள். மென்மேலும் நீங்கள் வளர எம் வாழ்த்துகள்.
அருமை ஐயா! கடலை - க -1 உருண்டை - உ -2 எங்ஙனம் - ங-3 ( பாதி ங) சுவைத்து - சு -4 ருசித்து - ரு - 5 சாப்பிட்டேன் - சா - 6 என்று - எ - 7 அவள் - அ - 8 கூறினாள் - கூ - 9 0 ( சுழியம் +1 )- க० - 10 இவ்வாறு நான் என் மாணவர்களுக்கு கற்பித்தேன்.
ஐயா வணக்கம்.உங்கள் தமிழ்ச்சேவைக்குப் பாராட்டுகள்.பொது இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை எப்படிச் சரியாக எழுதுவது என்பதையும் எடுத்துக் கூறுகிறீர்கள்.உங்களின் இச்செயல்பாடு மாணவர்களுக்கு மட்டுமன்றிப் பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.விளம்பரப் பலகைகளில் உள்ள பிழைகளை நீங்கள் சுட்டிக் காட்டியபின் சம்பந்தப் பட்டவர்கள் அவற்றைத் திருத்தம் செய்து கொள்வதையும் காண முடிகிறது.மகிழ்ச்சி.பாராட்டுகள்.தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.வகுப்பறையில் நீங்கள் எண்களுக்குரிய தமிழ் வடிவங்களக் கரும்பலகையில் எழுதும் பொழுது 9 என்னும் எண்ணுக்குரிய தமிழ் வடிவம் தவறாக இருப்பதைக் கண்டேன்.தயவு செய்து அதைச் சரிபார்க்கவும்.நன்றி.
ஐயா உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள் என் தமிழின் விளக்கத்தை கூறும் தங்களை ஒரு புலமை பெற்றவராக கருதுகிறேன் உங்கள் மூலமாக தமிழில் தெரியாமல் இருக்கும் பல விழயங்களையும் சிறப்புகளையும் கற்றுக்கொல்கிறேன் உங்களைப் போன்று ஆசிரியர்கள் நடத்தினாள் நம் தமிழ் மொழியின் சிறப்பு உலகத்தில் என்றும் நிலைத்து இருக்கும்.
பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படித்தை TNPSC தேர்வு பல புத்தகங்களை படித்தாலும் புரியாததை மீண்டும் எங்களை பள்ளிக் கே அழைத்து சென்று போட்டி தேர்வுக்கு தயார்படுத்துகீறீரகள் ஐயா நன்றி
ஐயா காலைவணக்கம் நீங்கல் கற்றதை கற்றுத்தருகிரிர்கள் அந்தமாணவர்களுக்கு நீங்கள் தான் குரு ஆசிரியர்எண்றால்நீங்கல்தான் நல்லாஆசிரியர் விருது உங்களுக்கு வழங்கவேண்டும் நன்றி ஐயா வணக்கம்
ஐயா வணக்கம் உங்களின் தமிழில் கற்பித்தலுக்கும் கற்பிக்கும் ஆர்வத்திற்கும் மிகவும் நன்றி உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் வாழ்க உங்கள் சேவை வளர்க்க உங்கள் புகழ் 🙏
தமிழய்யா அவர்களுக்கு நன்றி. நம் தாய்மொழியாம் தமிழை இளைய சமுதாயம் பிழையில்லாமல் கற்க பயிற்சி தரும் தங்கள் பணிக்காக இருகரம் கூப்பி வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்
216 எழுத்துதான் 21600 ஒரு நாள் மூச்சாக மனிதனுக்கு அமைந்துள்ளது. நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவு நிறைந்தவர்கள் என்பது புரியும். தமிழில் இல்லாதது எதுவுமே இல்லை. சுழன்றும் ஏர் பின்னது உலகம், அணுவை பிளந்து ஏழு கடலை நுழைத்து போன்ற அறிவியல் உண்மைகளும் அடக்கம். நமக்கு புரிய அறிவு, பொறுமை வேண்டும்.
ஐயா. நானும் ஒரு ஆசிரியை தான் உங்கள் காணொளிகளை இப்பொழுது தான் பார்க்கிறேன் அற்புதம்! உலக தமிழ் மாநாடு பாடல் அருமை ஐயா! நானும் மனனம் செய்து கொண்டேன். தமிழ் எண்கள் பாடலையும் மனனம் செய்து கொண்டேன் அருமை 👌👌வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
ஐயா ஒரு சின்ன திருத்தம் அரசன் கடவுள் ஆக முடியாது ஆபத்தில் உதவினால் அது மனிதநேயம் கடவுள் மனிதர்கள் மூலம் பேசி உதவ செய்கிறார் கடவுள் என்பவர் மனிதனுக்கு அப்பாற் பட்டவர்
நீங்க சொல்றது சரி தான்...இருந்தாலும் எண்களை தமிழில் சொல்லிருக்கலாம் ....one,two,three,... இப்படி சொல்லாமல் ஒன்று,இரண்டு,மூன்று,...என இப்படி சொல்லிக்கலாம்.....
@@johndurai9460 விக்கிப்பீடியா வில் பாருங்க 1 முதல் 9வரை அரேபியா 0 கண்டுசொன்னவர்கள் இந்தியர்கள் ஆனால் அவனும் இதை நம்பமுடியாத அதாவது முழு ஆதாரம் இல்லா தகவல் என்று பதிந்திருக்கிரான்