நன்றி நண்பரே! உம்மை போன்ற பொதுநலன் சிந்தனையும் அனுபவமும் கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய பதிவை வெளியிட முடியும் அவசியமான முக்கியமான நல்ல பதிவு ஒரு வேண்டுகோள் இன்னும் இதுபோன்ற உங்கள் அனுபவங்களை யும் மற்றவர்களின் அனுபவங்களையும் சிரமம் பாராது தொகுத்து தொடர்ந்து வழங்கினால் சமுகத்திற்க்கு பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நிச்சயமா பல உயிர்களைக்காக்கும். நன்றி தம்பி. நிறைய செய்திகள் போடவும். இளைஞர்களுக்கு விவரம் தெரியாததால் ஆர்வத்தில் அருகில் போய் உயிரிழந்து எல்லோருக்கும் பெரும் வேதனையை தந்து விடுகிறார்கள். நீங்கள் கடலில் சிறிது தூரம் நடந்த பிறகு திடீறென்று பள்ளத்தில் மூழ்கி பின் வெளியே வந்த காட்சி சத்தியமா வயிறு கலங்கி விட்டது. உங்களுக்கு ஒன்றும் ஆகாது னு தெரியும்போதே பகீர் என்கிறதே மாட்டிக்கொண்டவர்களுக்கு எப்படி இருக்கும்? உனக்கு கோடி கோடி புண்ணியம். வாழ்க.❤❤
மீனவ நண்பரே, பொதுமக்களின் உயிருக்காக ஒரு வீடியோ போட்டு பல பேருக்கு விழிப்புணர்வை தந்த உண்மையான ஹீரோவே, வாழ்த்துக்கள். எவ்வளவோ பேர் தேவையில்லாத காணொளிகளை வெளியிடும் பொழுது, ஒரு உருப்படியான மக்களின் உயிருக்கு பயன்படும் வகையில் வெளியிட்ட மீனவ வீரன் வாழ்க
ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு நாட்டின் ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்படும் புள்ளி விவரங்கள் தகவல்கள் ஆகியவற்றை செயல்முறை காட்சிகளுடன் தெளிவாக விளக்கிய மூக்கையூர் மீனவருக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤
என்னைக் கேட்டால் கரையில் கால் நனைத்தோமா அதோடு வந்து விட்டு உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கலாம்! நீங்கள் அதோடு விளையாடினால் அது உனது ஆட்டத்தை முடித்து விடும்!😂
சகோதரரே நாம்ம எவ்ளோ சொன்னாலும் நா செய்யறது தான் செய்வேன் என்று சொல்லும் இனம் நம் இனம்.திருந்த மாட்டார்கள்.உங்கள் விழிப்புணர்வுக்கு கோடான கோடி நன்றிகள்.மக்கள் பார்த்து பயன் பெறட்டும்
எங்க அப்பா மகனே சிங்கம்டா உடன் பிறவா சகோதர, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு, வானொலி அறிக்கையும், ராக்கெட் வரை படமும், உன்னிடம் முதல் அனுபவத்தை பெற்று கொள்ள வேண்டும். மீனவர்கள் கடலின் பிள்ளைகள் , கடல் அன்னை உங்களை என்றும் காக்கட்டும் சிறப்பான காணொளி மகிழ்ச்சி
நன்றி நண்பரே.அவர் சொல்வது அனைத்தும் நீச்சல் தெரிந்தவர்களுக்கு தான்.நீச்சல் தெரியாதவர்கள் முழங்கால் தண்ணீர் அளவோடு திரும்பி விடுவதும் நல்லது நமது இளைய சமுதாயத்திற்கு தான் நீச்சல் தெரியாதே
மூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து பெற்றோர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்
கடல் அலைகளினால் ஏற்படும் ஆபத்துகளை தெளிவாக எடுத்து சொல்லிய சகோதரர்க்கு மிக்க நன்றி... மக்கள் கடற்கரைக்கு சென்றால் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சூப்பர் வீடியோ அண்ணன் மக்களுக்கு கடலை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் ❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.
நன்றாக பொது மக்களுக்கு விளக்கி அலைகளின் நடுவில் நின்று எப்படி கரைக்கு வர வேண்டும் என்பதை செய்தும் காமித்தீர்கள். மிக்க நன்றி. உங்களுடைய இந்த பதிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை பார்த்தா வது மக்கள் விழுப்புணர்ச்சியுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
உண்மை அண்ணா நானும் என் கணவரும் திருச்செந்தூர் கடலில் விளையாடும் போது விழுந்து விட்டோம். மீண்டு எந்திரிக்கவே முடியல பக்கத்துல இருந்தவுக நாங்க விளையாருறோம்னு நினச்சு சிரிச்சாங்க. அப்புறம் என் கணவர் எழுந்து என்னய தூக்குனாங்க. அதுல இருந்து நான் கடலுக்கு போனாலும் கால் நனைத்து விட்டு வந்துருவேன். நாங்க பிழைத்தது மறு பிறவி தான் 😞முருகனுக்கு நன்றி 🙏
எதுக்காக கடல்ல இரங்கனும் இயற்கையை தல்லி நின்று ரசிக்கலாம்.பயனுள்ள தகவல் மக்கள் புரிஞ்சு நடந்தால் நல்லது.பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்.தம்பி நல்லா சொல்ரிங்க நன்றி தம்பி வாழ்க வளமுடன்.
சரியான நேரத்தில் மிகவும் அருமையான (wonderful ) and பிரயோஜனமான (useful ) பதிவு தம்பி. News ல 5 doctorக்கு படிக்கிற மாணவர்கள் கடலில் குளிக்கப் போய் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மனசுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. God bless you. Keep posting important informations like this 👍🙏
என்னைக் கேட்டால் கரையில் கால் நனைத்தோமா அதோடு வந்து விட்டு உட்கார்ந்து கடல் காற்றை அனுபவிக்கலாம்! நீங்தற்போது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திய தோழர்கள்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்கள் அதோடு விளையாடிமூக்கையூர் மீனவர் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அனைத்து பெற்றோர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் மென்மேலும் வளர்ந்து நல்வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்னால் அதோடு உனது ஆட்டத்தை முடித்து விடும்சூப்பர் வீடியோ அண்ணன் மக்களுக்கு கடலை பற்றி சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்
அருமை சகோதரா கடலை பற்றி அற்புதமா சொன்னீங்க எச்சரிக்கையாக இருந்தது கடல் ஆபாத்தானது வெளிய இருந்து வேடிக்கை பார்த்துட்டு போயிடனும் அலையில கூட கால் வைக்க கூடாது அதுதான் நமக்கு பாதுகாப்பு
பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம் இப்பக் கூட இது தெரியாம பயிற்சி டாக்டர்கள் ஐந்து பேர் கன்னியாகுமரி கடலில் முழ்கி அலையினால் இறந்து விட்டார்கள்..இது கண்டிப்பாக அருமையான பயனுள்ள வீடியோ...நன்றி நன்றி நன்றி...🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையான பதிவு. ஆழம் தெரியாமல் காலை வைக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் எங்கள் குடும்பத்தினருக்கு பாண்டிச்சேரியில் ஒரு சம்பவம் நடந்தது. கரையிலிருந்து சிறிது தூரம் தள்ளி மேடாக இருந்தது அலையடிக்கும் போது அனைவரும் குதித்தோம். திடீரென நான் மட்டும் கரையை நோக்கிச் செல்லும் இடத்தில் பள்ளத்தில் இருக்கிறேன். நீந்த முயற்சி செய்தும் முடியவில்லை. ஒவ்வொருவராக தண்ணீரில் மாட்டிக் கொண்டோம். நான் நிற்கும் இடத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறம் ஒரு மீட்டர் தொலைவிலேயே மேடு இருந்தது. எனது கணவர் நீருக்கு அடியில் சென்று என்னை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி விட்டார். ஒருவழியாக மேடு ஏறி வந்துவிட்டேன். இதுபோலவே நீருக்கடியில் சென்று ஒவ்வொருவராக காப்பாற்ற முயற்சி செய்தார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நாங்கள் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்றே நினைத்தனர். சிறிது நேரம் கழித்தே நாங்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து ஒருவர் ஓடி வந்துகாப்பாற்றினார். ஐந்து நிமிட போராட்டம். உயிர் போய் உயிர் வந்தது. எங்களுக்கு நல்ல பாடத்தை கடல் கற்றுக் கொடுத்தது.
வெளிநாடுகளில் தொடக்க பள்ளிகளில் அரசாங்கமே நீச்சல் பயிற்சி தாங்க இந்தமாதிரி பயிற்சிகள் நம்ம ஊர்லையும் கட்டாயமாக்கும் நீங்கள் ஒரு யூட்டிபரா இருப்பதால் உங்கள் நிறைய பேர் பார்க்கிறாங்க இத ஒரு பதிவாக போடுவிங்களா தமிழக அரசு பார்க்கனும் நன்றி
தங்களின் பொது மக்களின் நன்மைக்காக விழிப்புணர்ச்சி குறித்த இந்த காணொளி மிகவும் பாராடதிற்கு உரியது. நல் வாழ்த்துக்கள். 👌🙏. மிகவும் சிறந்த மனிதர் நீங்கள்.
உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளது கடலில் குளித்து அனுபவம் இல்லாத ஆட்கள் கால்களை நினைத்துவிட்டு தலையில் கொஞ்சம் நீர் தெளித்து கொண்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பதே சிறந்தது எதற்கு வீரவசனம் பேசி விபரீதத்தை தேடுவானேன். நன்றி சகோ.
Anna intha video romba useful la irukku thayavu seithu makkale neechal therilanna kaddala irankathinga yenna ooyer vilaimathika mudiyathu onnu. Anna appuram kadalla yeppadi neechal adikanumnu makalluku new updation video post pannunga.
மிகவம் பயனுள்ள தகவல்கள். திருச்செந்தூர் கடலின் அமைப்பும் அங்குள்ள மணல் மற்றும் அலைகள் பண்புகளை விளக்கமாக கூறி எப்படி அங்கு பாதுகாப்பாக குளிப்பது பற்றி ஒரு காணொலி போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
நன்றி.... நன்றி.... அருமையான பதிவு... உங்களின் பொறுப்பார்ந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றி சகோதரா. இதனை பார்பவர்கள் பொறுப்புடன் கடலை ரசித்தால் மட்டும் போதும்.