Тёмный
No video :(

கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம் | பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர | கணவன் மனைவி ஒற்றுமை மந்திரம் 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 177 тыс.
50% 1

கணவன் மனைவி ஒற்றுமை பரிகாரம் | பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர | கணவன் மனைவி ஒற்றுமை மந்திரம்:
1. நவகிரக சுக்கிரன் வழிபாடு:
வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய்தீபம் ஏற்றி வழிபட கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். நவகிரக சன்னதி அருகே விளக்கு ஏற்றும் பகுதியில் நவகிரக சுக்கிரனை மனதார வேண்டி ஒரு அகல்விளக்கில், இரண்டு பஞ்சு திரி போட்டு, இரண்டு கற்கண்டுகள் போட்டு அதில் நல்லெண்ணெய் / நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும் எளிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் விரைவில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பிரச்சனைகள் தீர வழிபிறக்கும்.
2. நாகராஜா வழிபாடு:
இரண்டு நாகங்கள் பிணைந்து இருக்கும் நிலையில் இருக்கும் நாகராஜர் சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள். பிரிந்து வாழும் கணவன் - மனைவி யாராவது ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் உங்கள் வாழ்க்கை துணை , கருத்து வேறுபாடுகள் மறைந்து மீண்டும் இணைந்து வாழ வருவார்.
இப்பரிகாரத்தை தொடர்ந்து 5 வாரம், 7 வாரம், 9 வாரம், 11 வாரம் என செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைக்கும். 11 வாரம் செய்வது மிக சிறப்பு.
3. அர்த்தநாரிஸ்வர மந்திரம் :
ஓம் ஹும் ஜும் ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா
இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை முறை, தினமும் காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி விட்டு அல்லது மாலை விளக்கேற்றி விட்டு 6 to 7 மணிக்கு ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும், ஒற்றுமையும் உண்டாகும். மாதவிலக்கு சமயங்களில் 5 நாட்கள் தவிர்த்து இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்க வேண்டும்
4. சித்தர் மந்திரம்:
சித்தர்கள் உருவாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த இம்மந்திரத்தை, ஈர்ப்பில்லாமல் அல்லது பிரிந்திருக்கும் தங்களின் கணவரை நினைத்து மட்டுமே ஜெபிக்க வேண்டும்.
மந்திரம் : ஓம் ஐம் நம:
மிகவும் ஆற்றல் மிக்க இம்மந்திரத்தை பெண்கள் விடியற்காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு பிரம்மமுகூர்த்த நேரமான காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக தங்களின் இஷ்ட தெய்வத்தையும், உங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு சித்தரையோ வணங்கி இந்த மந்திரத்தை, கிழக்கு நோக்கி அமர்ந்து உங்கள் கணவரின் முகத்தை மனதில் நினைத்தவாறு 48 நாட்கள் தினமும் 108 முறை அல்லது 1008 முறை உச்சாடனம் செய்து வர வேண்டும், உங்கள் மீது ஈர்ப்பில்லாமல் இருக்கும் கணவரோ அல்லது உங்களை பிரிந்து சென்ற கணவரோ மீண்டும் உங்களிடம் திரும்பி ஒற்றுமையுடன் அன்னோன்யமாக இருப்பார்.
5. அசோக மரத்து இலை பரிகாரம்:
விதியால் பிரிந்த அன்பு நிறைந்த தம்பதியர், நேசிப்போர்,காதலிப்போர் ஒன்று சேர செவ்வாய் கிழமையில் ஒரு அசோக மரத்து இலை எடுத்து குழாய் நீரில் நன்றாக கழுவி, மனம் ஒன்றி பிரிந்தோர் ஒன்று சேர ஆஞ்சநேயரிடம் வேண்டுதல் வைத்து, சிகப்பு சந்தனத்தால்(அனைத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), அசோக மரத்து குச்சி கொண்டு சிறியதாக 'சீதாராம்' என இலையை சுற்றிலும் ஒன்பது முறை எழுதி, நடுவில் தம்பதியர் இருவர் பெயரையும் எழுதி, பூஜை அறையில் வைக்கவும்.
இவ்வாறாக ஒன்பது செவ்வாய்கிழமைகள் புதிய இலையில் எழுதவும். நேரம், திசை போன்றவை பார்க்க அவசியமில்லை. எழுதிய ஒன்பது இலைகளையும், ஒன்பதாம் செவ்வாய் அன்று, நுனியை ஒன்று சேர சிகப்பு நூலால் கட்டி, ஆஞ்சநேயர் சன்னதி சென்று ஏதேனும் ஓர் கால் படாத இடத்தில் வைத்து விட்டு, ஆஞ்சநேயரை தியானித்து விட்டு வரவும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த முறை, விரைவில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும். இருவரில் யார் ஒருவர் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.
6. கொண்டைக் கடலை பரிகாரம்:
கணவனை பிரிந்து வாழும் மனைவி தன் கணவன் பயன்படுத்திய ஏதேனும் ஒரு துணியை எடுத்துக் கொண்டு அதில் 27 கொண்டைக் கடலையை(வெள்ளை or கருப்பு) வைத்து முடிய வேண்டும் [கணவரின் துணி கிடைக்காதவர்கள் ஒரு மஞ்சள் துணியில் முடியலாம் ] அதனை தான் தூங்க பயன்படுத்தும் தலையணைக்கு கீழ் வைத்து தொடர்ந்து 27 நாட்களுக்கு உறங்க வேண்டும், அந்த முடிச்சை வைத்து உறங்கி 27 நாட்கள் முடிந்த மறுநாள் காலையில் அதனை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே என்று108 முறை சொல்ல வேண்டும், பின்பு அதனை அருகில் உள்ள ஆறு, குளம், கடலில் போட்டுவிட வேண்டும் இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் பிரிந்து சென்ற கணவர் மீண்டும் உங்களிடம் திரும்பி வந்துவிடுவார்.
மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கிவர வேண்டும் தொடர்ந்து 90 நாட்களுக்கு வணங்கி வர பிரிந்து சென்ற மனைவி எந்த மறுப்பும் இல்லாமல் வெறுப்பு விலகி நீங்கள் அழைக்காமலேயே வந்து உங்களுடன் சேர்ந்து வாழ்வார்
7. கேதார கௌரீ விரதம்:
கணவன்-மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்க வேண்டும்? - கேதார கௌரீ விரதம்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் இது.
#aalayamselveer

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
Далее
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 2,7 млн