குற்றம் செய்தவனுடைய மனதின் பிரதிபலிப்பு, தான் காணும் மனித முகங்களிலெல்லாம் கண்ணாடி போல பிரதிபலித்தது என்ற ஒரு வார்த்தை மிகவும் அற்புதமாக உள்ளது தோழர் பவா அவர்களே!
கதைய படிக்கும் போது ஒன்னும் தோணலை... ஆனால் உங்கள் குரலில் ..அந்த தோணி அற்புதம்..மனித உணர்வுகளை தட்டி எழுப்பியது...இசை மடுமல்ல நல்ல கதை கேட்பதும் சாந்தப்படுத்தும்.
அற்புதம் பவா சார்..உங்களுடைய முழு ஆளுமையும் திறனும் நுட்பங்களும் 100சதவிகிதம் கதை சொல்வதில் இருக்கிறது.. சினிமா வேண்டாம் என்பதில்லை எங்களுக்கு இத்தகைய நெகிழ்வான தருணங்கள் வேண்டும்
பாவா செல்லத்துரை அண்ணா மீண்டும் என் என் கிராமத்து மளிகைக் கடைக்காரர் செல்லத்துரை நாடாரை 25 கழித்து ஞாபகப்படுத்தி விட்டது பேரிங் ரமேஷ் தேவனூர் புதூர் திருப்பூர் Dt
நடிகர் விஜய்சேதுபதி யின் குரல் உங்கள் குரலை ஒத்திருக்கிறது. நான் இரண்டு நாட்களாகதான் நீங்கள் கதைகளை கேட்டேன். உங்கள் ரசிகையாகவே மாறிவிட்டேன். இப்போது. நன்றி பவா அவர்களே
சொற்கள் தான், வெறும் சொற்கள் ஆனாலும் கண்கள் கலங்கி நானே ஒரு குற்றவாளியாகக் சமூகத்தின் முன்பு தலை குனிகிறேன். இவ்வளவு வலிமையாக ஒரு நிகழ்வைப் பதிவுசெய்ய இயலுமா? அதை, குரலின் வழி இவ்வளவு காத்திரமாக நெஞ்சிலறைந்து சொல்லிவிட முடியுமா? இந்த நாள் முழுவதும் இந்த பாரத்தைச் சுமந்துகொண்டுதான் திரியவேண்டுமா?
சந்தேகமின்றி நல்லகதைதான், இன்னும் உசத்தியாக அதன் முடிப்பைச் செய்யச் சாத்தியங்கள் அதற்குள் இருப்பதைப் படைப்பாளர் உணர்ந்தாரா தெரியவில்லை. இருவருக்கும் வாழ்த்துகள்.
முன்பு ஊருக்கு சிலர் பவா செல்லதுரை ஐயா போல மாலை நேரத்தில் கதை கூறுவர் என் தாத்தா பல நிகழ்வுகள் பற்றி கூறுவார்கள் வியப்பாக இருந்தது உங்களைப் போல் மீண்டும் ஊர்களில் கதைகள் மூலம் மனநிறைவு பெற படித்தவர்கள் உருவாக வேண்டும்
Sir , please tell from writer perspective, so that you can tell more about writer angle . You became hero and narrate which is not good ; your audience we miss a lot of context . When you become hero then you are bounded with in story .