#kavithai_pithan #kalaignar100 #kalaignarbirthday #mkstalin #kalaignar 22-06-2023 அன்று திராவிடப் பள்ளி அலுவலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பெற்றுக்கொண்டு ஏற்ப்புரை பேசினார் கவிஞர் கவிதை பித்தன் அவர்கள்
அண்ணாவின் அருமைத் தம்பி ********************************* கலைஞர் நூறு என்கிற மாமழையில் சிறு துளி இது. பெரியார் எனும் பேரறிஞர் எனும் திராவிடக் கடலில் முழுகி முத்தெடுத்த கலைஞர் எனும் முத்தமிழ் வித்தகர் பெரியார் எனும் மார்க்சும் அண்ணா எனும் எங்கல்சும் வகுத்தும் தொகுத்தும் தந்த திராவிட மாடல் கொண்டு சீர்மிகு தமிழ்நாட்டை சிகரத்தில் ஏற்றி வைத்து ஆட்சி நீட்சிக்கு ஒரு ஸ்டாலினையும் விட்டுச் சென்ற தமிழ்நாட்டு லெனின் அண்ணா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பிய பன்முகப் பேராற்றல் பெரியார் போல் வீசும் கடும் புயலாய் அண்ணா போல் வருடும் இன்பத் தென்றலாய் புத்தரின் போதனைகளை சித்தரின் சிந்தனைகளை சீர்திருத்த சிலையாய் செதுக்கி வைத்தவர் பெரியார் போட்ட கோடெல்லாம் ரோடு போட்டவர் அண்ணாவின் அழகுத் தமிழை செம்மொழியாய் வளர்த்துத் தந்தவர் பெரியார் பாசறையின் பகுத்தறிவுப் போர் முறையை சமத்துவமென்றும் சமூகநீதியென்றும் அறிவு ஆயுதமாக்கி சனாதனக் கோட்டையைத் தகர்த்தவர் வில்லாய் வளைந்து கிடந்த தமிழ் சமூகத்தை செங்கோலாய் நிமிர்த்திய பேனாவின் பிதாமகன் சாதிக்கொரு சங்கம் வைத்தோரை தமிழ் சாதியாக்கி தலை நிமிர்த்தியவர் தாழக் கிடந்தோரை தோழ் கொடுத்து தூக்கி விட்ட பாச மலர் நாற்றமெடுத்துக் கிடந்த சமுதாய சாக்கடையை நறுமணம் கமழ வைத்த வாச மலர் ஒழிந்து ஒழிந்து ஒளியும் ஒலியும் மாற்றான் வீட்டில் கறுப்பு வைள்ளையில் பார்த்து நின்றவரை சொந்த வீட்டில் நிமிர்ந்து அமர்ந்து வண்ணத்தில் பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்தவர் ஒன்றே முக்காலடியில் உலகளந்த உத்தம சித்தர் வான் புகழ் வள்ளுவருக்கு முக்கடல் சங்கமத்தில் வானுயர் சிலை வைத்தவர் பள்ளியின் வாசல் திறந்து வைத்தவர் கல்வித் தந்தை பெருந்தலைவர் வாசல்வரை கொண்டு இறக்கி விட்டவர் கலைஞர் எனும் கல்வி வள்ளல் (இலவச சைக்கிள், இலவச பஸ்பாஸ்) சுட்டெரிக்கும் நெருப்புச் சாலையில் நடந்த வெறுங்கால்களை செருப்பணிந்து சிரிக்க வைத்தார் சீருடை தந்து மனம் சிலிர்க்க வைத்தார் விலையில்லா புத்தகம் தந்து மலையளவு மகிழ்ச்சி தந்தார் சத்துணவில் முட்டை போட்டு முட்டையிட்ட பெட்டைக் கோழியை பிறவிப்பயன் பெற வைத்தார். வசனமென்னும் வாள் வீச்சால் கலையுலகில் கலகமூட்டி மதம் எனும் மதயானையை மயக்கி வியக்க வைத்தார் மூளை வீங்கிகளையும் மூக்கில் வியர்க்க வைத்தார் பார் போற்றும் பேரறிவாளரை துர் வார்த்தைகளை துப்பி ஊர் சுற்றித் திரியும் பொய் வாய்கள் உண்மை உணர வேண்டும் ஆல் போல் அறிவுடனும் பால் போல் மனதுடனும் அவர் போல் மானிடர் யாருளர்?!!!!!. படைப்பும் பகிர்வும் இரா.கோபாலன்.
நிச்சயம் நீங்கள் கலைஞர் விருது பெற தகுதியானவர் தான் நீங்கள் என்பதை ஒப்புக்குக் கொள்ளும் தகுதி நற்றமிழ் அறிந்தவர்களுக்கு நிச்சயம இருக்கும் ! ஏனென்றால் கவிதைப்பித்தன் என்ற கவிஞரை ஓரளவு என் போன்றவர்கள் சில கவிதைத் சிதறல்களை சில பத்திரிக்கைகளில் படித்ததுண்டு ! ஆனால் உங்கள் உயரம் தகுதி எல்லாம் இப்போது தான் நீங்கள் பேசும் போது தான் தெரிகிறது ! உண்மையிலே மெய் சிலிர்த்துக் கேட்டேன் ! அருமை, அற்புதம் ! நீங்கள் செருக்கோடவே சொல்லிக்கொள்ளலாம் , நான்(நீங்கள்) கலைஞர் விருது பெற தகுதியானவன் என்று ! மிகவும் நாகரீகமாக செ.கு.தமிழரசன் விவாகரத்துடன் நீங்கள் தொடர்பு படுத்தி கலைஞர் அவர்கள் பேசியதை நயமாக நீங்கள் சொல்லி, தாங்கள் ஒரு வண்ணம் மட்டும் கொண்டவன் அல்ல என்பதை நிரூபித்து விட்டது உங்கள் பேச்சு!🎉வாழ்க நீங்கள் இறுதி வரை நோய் இல்லாத உடலோடு !
அய்யா கவிதை பித்தன் அவர்களுக்கு வணக்கம் 🙏 தலைவர் கலைஞர் அவர்களுடனான தங்களின் அனுபவத்தையும் தங்களின் கவிதைகள் சிலவற்றையும் பேசிய விதம் தங்களின் அன்பு நேர்மை உறுதி கொள்கை கொண்ட நெஞ்சுரம் கண்டு வியப்பதோடு மட்டும் அல்லாமல் திராவிட இயக்கங்கள் மீது மேலும் தளர்ந்திடாத பிடிப்பை எனக்கு அளிக்கிறது . மேலும் தங்களின் கவிதைகளை படிக்க ஆவலுறுகிறேன் . நன்றி 🙏 வணக்கம் 🙏
அய்யா கவிதைபித்தன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி . அருமையான பதிவு சமகால கவிதாசரண் வாழ்க வாழ்கவே
திராவிடம்,சமூகநீதி,இனஉணர்வு,மொழிப்பற்று,பகுத்தறிவு,கவியரங்கம் ,பட்டிமன்றம் இந்த வார்த்தைகளை திராவிடர் கழகம், திராவிடமுன்னேற்றக்கழகம்தவிர வேறெந்த இயக்கங்களிலும் நான் கண்டதில்லை கேட்டதில்லை. ❤❤இப்படிப்பட்ட இயக்கங்கள் இல்லையென்றால் நாம் தமிழகர்கள் என்ற உணர்வே இல்லாமல் போயிருக்கும்.
பிரம்மன் தலையில் பிறந்ததாக சொல்லப்படுகின்ற இனத்தில் பிறந்த நான் கடந்த நாற்பது வருடங்களாக இயக்கதில் ஈடுபாடு காட்டி வருகின்றேன் கவிதைப்பித்தன் என்ற கவிஞரின் கவிதைகளையும் அந்தக் கவிஞரையும் இந்த காணோளியில் தான் கண்டேன் முதன்முறையாக நன்றி திராவிடம் 100 மற்றும் திராவிடப்பள்ளி.
அருமை அருமை, அய்யா, கலைஞரைப் பற்றிய வரிகள் வைர வரிகள். கலைஞரின் இறுதி நிகழ்வை கேட்கும் போது என் கண்கள் பணித்தன, மனது மிகவும் துன்பப்பட்டது. அய்யா தொடரட்டும் உங்கள் பணி.
கவிதையாரின் நினைவலைகள் அற்புதம். பொதுவாக புதுக்கோட்டை தி மு க தளகர்த்தகர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாக அறிந்தவர் புரிந்தவர். மாநிலத்தளகர்தர்களையும் அறிந்தவர். அவருக்கான இடம் அரசியலில் சரியாக கிடைக்கவில்லை என்பது மனதை வருடிக்கொண்டே இருக்கிறது
ஐயா கவிதை பித்தனின் உரையை இன்றுதான் கேட்கிறேன்.மனம் இளகிவிட்டது.அருமை.இயக்கத்தில் இவரை போன்ற லட்ச்சியவாதிகளை இன்றைய சூழலில் உன்னதமாக பயன்படுத்தி கொள்வது மிக அவசியம்.
Award for the best Dravidian from Dravidian family. Congratulations. Also my humble request to honour pillars/guardians of social justice who are working tirelessly..