#alangulam #tenkasi #kuruvankottai
குருவன்கோட்டை ஸ்ரீ.மாரியம்மன் கோவிலில் ஆயிரகணக்கான பக்தர்கள் பால்குடம்- தீச்சட்டி நேர்த்தி கடன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு; ஆண்டுதோறும் வைகாசி மாதம் கடையில் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கொடைவிழா வைகாசி 27ம் தேதி ஜூன் மாதம் 11ம் தேதி ம் தேதி சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை இரவு இன்னிசைக் கச்சேரியும் 12ம் தேதி இரவு 2502 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நான்காவது நாள் நிகழ்வாக இன்று 14ம் தேதி செவ்வாய் கிழமை காலை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். இதை தொடர்ந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
உள்ளுர் வெளியூர் பக்தர்கள் ஆயிரகணக்கானோர் பால்குடம் எடுத்தும் தீச்சட்டியை கையில் ஏந்தியும் நேர்த்தி கடனை செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு பஞ்சாமிர்த பூஜையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாரியம்மன் கோவில் கோவில் கொடை விழாவையொட்டி குருவன்கோட்டை ஊர் முழுவதும் அலங்கார விளக்குகள் பக்திப்பாடல்கள் முழங்க விழாக்கோலம் பூண்டு உள்ளது. மாரியம்மன் கோவில் சென்னை வாழ் குருவன்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் பக்தர்கள் உள்பட ஏராளமானோர் குருவன்கோட்டைக்கு கோவில் விழாவில் பங்கேற்ற வருகை தந்துள்ளனர். விழாவின் ஏற்பாடுகளையும் பக்தர்களுக்கான வசதிகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
19 сен 2024