#திருச்சிற்றம்பலம்
#சுந்தரர்தேவாரம்
#ஏழாம் திருமுறை
அருள்தரு #கொடியிடை நாயகி # #மாசிலாமணீஸ்வரர் #வைகாசிபிரம்மோற்சவம் 2024
#கூடிய இலயம் சதி பிழையாமை, கொடி இடை உமை அவள் காண,
ஆடிய அழகா! அருமறைப் பொருளே! “அங்கணா! எங்கு உற்றாய்?” என்று
தேடிய வானோர் சேர் திரு முல்லை-வாயிலாய்! திருப் புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே!
கொடிபோலும் இடையினை உடைய உமையவள் கண்டு மகிழுமாறு, கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, 'இறைவனே, நீ எங்குள்ளாய்?' என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக்காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பாடிய அடியேன், துன்பத்தை நீ நீக்கியருளாய் என்று பாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
22.5.2024 காலை நடைப்பெற்ற ஶ்ரீ ஆனந்த நடராச மூர்த்தி உற்சவம் நிகழ்வின் படக்காட்சி.
சிவகாமி அம்மை திருக்கோயில் வாயிலில் பெருமானை வரவேற்று அழைத்துச் செல்கிறார் . எம்பெருமானார் , உமையாள் கண்ணாரக் காண சதி பிழையாமல் திருநடனம் புரிந்து , உமையாளோடு சபைக்கு எழுந்தருளினார்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
12 сен 2024