வாசுகி அம்மா உங்கள் சொற்பொழிவுகள் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை போன்று உள்ளது, உங்களுது கருத்துக்கள்,நீண்ட நெடிய குறைவில்லாத, தொய்வில்லாத வாழ்கை பயணம்,அனுபவ முதிர்ச்சி, ஆணித்தரமான சத்திய வார்த்தைகள் இவை அனைத்தையும் பார்க்கும் பொது அந்த தெய்வ அருள் பரிபூர்ணமக உங்களிடம் உள்ளது அம்மா, மனதார சொல்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் தாயே.
எங்கள் தெய்வப் பிறவி வாசுகி அம்மா அவர்களே நீங்கள் நீங்கள் எங்களுக்கு தெள்ளத்தெளிவாக சாபங்களின் வகைகளையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் புரியும்படியாக எல்லோரும் பயனடையும் விதமாகவும் புரிய வைப்பதற்கு மிகவும் நன்றி நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று நீடூடி வாழ்க🎉🎉
அம்மா உங்களுக்குத்தான் எங்கள்மீதான ஓர் கனிவான அன்பு ஓர் தாயின் அரவணைப்பு மிக்க நன்றிங்க மற்றும் மகிழ்ச்சி அம்மா 🙏💐🙏 உங்கள் கைபிடித்து நல் சிந்தனையோடு நாங்கள் ஓர் தெய்வத்துடன் பயணிக்கின்றோம்.சாபங்கள் மற்றும் சாபவிமோசனம் பற்றி அறிய தகவல்கள் உங்களைத் தவிர யாராலும் தரமுடியாத பதிவு. சாபங்களுக்கும்பாவங்களுக்கும் இனி இடமில்லை அம்மா.நாங்கள் உங்க ள் வசம் இருக்கும் வரை.உங்கள் குடும்பம் செழிக்க உங்கள் ஆரோக்கியம் வளர உங்கள் ஆசியுடன் கடவுளின் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
அம்மா ஆண்டவன் நீண்ட ஆயுளையும் அரோக்கியத்தையும் அருள வேண்டுகிறோம் .இக் காலத்திற்கு ஆன்மிக பரிகாரங்களை எளிமையாக அனைவரும் சேரும் படி பதிவு கொடுத்தமைக்கு நன்றிகள் பல.தங்கள் பாதம் தொட்டு வணங்கிறோம் அம்மா🙏🙏🙏
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். தூங்கும்போது இரண்டு பக்கமும் தலைமாட்டில் உப்பு கலந்த நீரை கண்ணாடி டம்ளரில் வைத்து தூங்குகிறோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். என்னவோ ஒரு சோம்பல் எல்லாம் நீங்கி சுறுசுறுப்பு கிடைத்திருக்கிறது. மனதில் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. பல நாள் நடக்காத விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படுகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.
Amma naan eduvarai sandhosham endral enna endru theriyamal thirumanam naal Mudhal vazhndhu vargiren en ore oru kuzhandhaikaga amma naan ungalidam pesavendum edhu perasaiya endru enakku theriyadhu amma naan ungalai parthal en kashtam theorem endru mega Periyar nambikkai amma karunaikatungal amma Nangal nanga sisters petravargal sagodharar evargalai ezhandhu manavaliyil Ulloa amma amma amma amma amma amma amma amma
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
எனக்கு மாமனார் சொத்து கிடையாது.. என் கணவரின் உழைப்பில் சகோதரிகளுக்கு நகையும் போட்டு சீர் செனத்தியும் செய்து விட்டார்.. இருந்தாலும் எங்களை குறை சொல்கிறார்கள்.. அப்படினா அவர்கள் இடும் சாபம் அவர்களுக்கே பலிக்குமா
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.