#சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிட முடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
சடையில் கங்கை உடையவனும், எரியாகிய படையை உடையவனும், இறைவனின் இடப்பாகத்தில், அநாதியே என்னை ஆளாக உடையவனும், இடபக்கொடி உடையவனும் எனது தலைவனாவான். அறவடிவான காளை அவனது கொடியாயிற்று. தருமத்தின் தலைவன் சிவன்.
17 сен 2024