இந்திய அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கும் சட்டப் பாதுகாப்பையும் சிறப்பு உரிமைகளையும் முழுமையாக அடைந்து கொள்ளும் வியூகத்தில் பயிற்சிபெற்ற சட்ட வல்லுநர்கள் முஸ்லிம் சமூகத்தின் காட்டாயத் தேவையாக இருக்கிறது.
இஸ்லாமிய கல்வி மரபின் வழியில் ஷரீஅத்திலும் சர்வதேச சட்டத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்கும் தொலைநோக்கு இலக்குடன் தான் புதுச்சேரியில் பைத்துல் ஹிக்மா வளாகத்தை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் உருவாக்கி வருகிறோம்.
அதன் முக்கிய முன்னெடுப்பாக இந்த ஆண்டு இரண்டு இளம் வழக்கறிஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச சட்டம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் ஆலிம் படம் பெற்ற வழக்கறிஞர்கள்.
இவர்களுக்கான இரண்டு ஆண்டுகள் சர்வதேச சட்டக்கல்வி படிப்பில் முதலாமாண்டு பைத்துல் ஹிக்மாவிலும் இரண்டாமாண்டு லண்டனிலும் படிப்பார்கள் இதற்கான கல்வி கட்டணம் முழுவதையும் சமூக அக்கறையுள்ளவர்களின் ஆதரவுடன் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சி பைத்துல் ஹிக்மாவில் 29-9-2024 அன்று நடைபெற்றது.
ஷரீஅத்துடன் சர்வதேச சட்ட நிபுணத்துவம் என்ற உயர்வான இலக்கை உள்ளத்தில் சுமந்து பயிற்சி பெற்று வரும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்கல்லூரியின் 140 இளம் ஆலிம்கள்,அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
இரண்டு பேரில் துவங்கப்பட்டுள்ள இந்த பெரும்முயற்சி இனிவரும் ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரிக்க அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.
நெருக்கடிகளுக்கான தீர்வுகளை நோக்கிய இந்த உழைப்புக்கு ஆதரவு அளியுங்கள்.
#baithulhikma #baithulhikmatrust #cmn #cmnsaleem #cmnsaleemspeech
11 окт 2024