First I Thanks to Father our God and son Jesus Christ our Lord thanks 🎉🎉🎉🙏🙏🙏 thank you Dear brother very very nice Excellent Subjects brother Blessings of God brother 👌🙏🌹🌹🌹
சாலமோன் : சாலமோனின் மறுபெயர் : யெதிதியா தேவன் நாத்தானை அனுப்பி பெயர் வைத்தார். கர்த்தர் நிமித்தம் நாத்தான் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். பெயர் அர்த்தம் : 1. சமாதானம். 2. தேவன் அதிகமாக நேசித்தார். 3. கர்த்தருக்கு பிரியமானவன். இசுரயேலின் மூன்றாம் ராஜா, 40 வருட அரசாட்சி செய்தார். நீதிமொழிகள் 3,000 - பாட்டுக்கள் 1,005 எழுதினார். கேதுரு முதல் ஈசோப் வரை எல்லாவற்றை குறித்தும் எழுதியுள்ளார். எரும்பு - சேமிப்பு நமக்கு பாடம் அதிகாரியில்லை, தலைவரில்லை, தனக்கு வேண்டியதை தானே சேமிக்க வேண்டும். சாலமோனின் ஜெபம் : ஞானமும், உணர்வுள்ள இருதயமும் கேட்டார். ஜனங்கள் அவரின் முகதரிசனத்தை தேடினார்கள். ஆரம்ப வாழ்க்கை : அற்பமான ஆரம்பம், வேதத்தில் அவரின் அரசாட்சியில் இருந்து தான் பதிவு இருக்கிறது. அவர் ஜெபம் : சாலமோன் ராஜாவாகும் பொழுது அவரை சுற்றி இருந்த சூழ்நிலைகள் அவருக்கு சாதகமாக இல்லை. அவருடைய ஜெபத்திற்கு காரணம் அவருடைய தனிமை, ஆதரவற்ற நிலை, நிற்கதியான நிலை, யாருடைய துணையும் இல்லை. சாலமோனுக்கு நெருக்கடியான நிலைமை, அவருடைய பிறப்பு, பத்சேபாலின் திருமணம், தகப்பன் குறித்து கேலி கிண்டல்கள் பல. ...நானோ போக்குவரவு அறியாத சிறு பிள்ளை என்று ஜெபித்தார். தாவீதின் பிள்ளைகள் : எப்ரோனில் 1. அம்னோன் - தங்கையுடன் இச்சையில் விழுந்தார். 2. கீலேயாப் - நோய்வாய் பட்டு இறந்திருக்க வேண்டும். 3. அப்சலோம் - ராஜாவாக ஆசை பட்டார். 4. அதோனியா - ராஜாவாக ஆசை பட்டார். 5. சாலமோன் - ராஜாவாக எந்த ஆசையுமில்லை. அதனால் தான் தேவன் தேர்ந்தெடுத்தார். இஸ்ரயேலர் - உன் இருதயத்தை நீ அறியும் படி 40 வருஷம் வனாந்தரத்தில் நடத்தி வந்தேன். அதுபோல ஏழாம் கால சபையின் குணம் : தன்னைக் குறித்து அளவுக்கு அதிகமாக எண்ணுவது. வெளி 3 : 17 சாலமோன் 12 கோத்திரத்திற்கு ராஜா என்பது தேவனுடைய திட்டம். ஆனால் பல உபத்திரவம், தடைகளை மீறி தான் ராஜாவானார். நமக்கும் சபை வாய்ப்பை கொடுப்பது தேவத்திட்டம். ஆனால் தடைகள், உபத்திரவம், பாடுகளை தாண்டி தான் ராஜாவாக ஜெயங்கொள்ள முடியும். அனுபவத்தை கற்றுக் கொண்ட பிறகு தான். வேலை - ஆலயம் கட்டுவது : கர்த்தருக்கு கட்டும் அரண்மனை என்று தாவீது கூறினார். ஆனால் சாலமோனோ, ஆலயம் கட்டுவதற்கு - 7 வருட காலம் அரண்மனை கட்டுவதற்கு - 13 வருடம் அதிக முக்கியத்துவம் கர்த்தருடைய ஆலயத்தை விட அரண்மனைக்கு தான் கொடுத்தார். சோதனை : கேளாத ஐஸ்வர்யத்தை கொடுத்து அதில் சோதனையை வைத்தார். தாவீதின் ஜெபம் தன் மகனைக் குறித்து ... "ஞானமும் உணர்வுள்ள இருதயமும் தாரும்" . மிகப் பெரிய சோதனை : நமக்கு எது தேவன் கொடுத்தாலும் பின்னாடி சோதனை இருக்கும். தாவீதோ பழையதை மறக்கவில்லை. நான் ஆடுகளின் பின்னே போகும்பொழுது கர்த்தர் என்னை ராஜாவாக்கினார். நான் நீசனும், அற்பமும் என்றார். தாவீதிற்கு இருந்த நன்றி உணர்வு - நான் எம்மாத்திரம், முன்னிலமையை மறக்கவில்லை. ஆனால் சாலமோன் தவறிவிட்டார். பூரணமாய் பின்பற்றாதது தான் அதற்கு காரணம். நாமும் கடமைக்காக புது சிருஷ்டி வாழ்க்கை மனப்பூர்வமாய் செய்கிறோமா ? ராஜாவுக்கு ஏற்றபடி நடப்பது : கட்டளை : 1. அநேக குதிரையை சம்பாதிக்காதே. 2. அநேக ஸ்திரீகளை படைக்காதே. 3. வெள்ளி, பொன் பெருகப்பண்ணாதே, மீறுதல் : 1. புடவை, குதிரை ஒப்பந்த விலைகிரயம் எகிப்தில் இருந்து வரவழைத்தார். 2. மோவாபியர், அம்மோன், பார்வோன் குமாரத்தி, ஏதோமியர், சீதோனியர், ஏத்தியர், அநேக அந்நிய ஜாதி ஸ்திரீகளில் ஆசை வைத்தார். 3. வெள்ளி கல் போல சேர்த்து, கேதுரு மரம் காட்டத்தி மரம் போல சேர்த்தார். எச்சரிப்பு : 2 விசை அந்நிய தேவர்களை பின்பற்ற வேண்டாம் என்று தேவன் எச்சரித்தார். ஆனால் சாலமோன் தன் இருதயத்தை கர்த்தரை விட்டு திருப்பி,.... ஒரு காரியத்தின் துவக்கத்தை பார்க்கிலும் அதன் முடிவு நல்லது என்று எழுதினார் ஆனால் அவரே அதை செய்யவில்லை. நம் தனிப்பட்ட வாழ்க்கை - நம் புது சிருஷ்டியின் வாழ்க்கை துவக்கம் முடிவு எப்படி உள்ளது ? ஆமென்!!!