அப்பா சிவ பெருமானே உங்க 🙏🙏🙏🙏ஆசிர்வாதம் எல்லாம் மக்களுக்கு அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழனும் அப்பா 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
தற்போது சிவபெருமானின் பாடலை கேட்டேன் .எல்லையில்லா மகிழ்ச்சியையும்,அளவில்லா புத்துணர்வையும் அடைந்தேன்.ஈசனின் அருள்,கருணை,அவரின் அபரிமிதமான திருவிளையாடல்கள் ஒவ்வொன்றாக ,அலை,அலையாக தோன்றிட கண்களில் இருந்து என்னையறியாமல் ஆனந்த கண்ணீர் வரவே இருகரம் குவித்து வேண்டுகிறேன்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. ஆதலால் இவ்வுலகில் நடந்து கொண்டு இருக்கும் அதர்மங்களை அழித்து (குறிப்பாக இந்துக்களை,இந்து தர்மத்தை,நாட்டின் கண்கள் என்று அழைக்கப்படும் பெண்களை(மகளிருக்கு ஏற்படும் துன்பங்கள்,துயரங்கள்,இன்னல்கள்,இழிவுகளை)ஏன் முடிவிற்கு கொண்டு வரமால் உள்ளீர்கள் ஐயனே!எங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவீர்களா! அன்னையும்,பிதாவும் ஆன சிவனும் சக்தியுமான நீங்கள் (இருவருமே)எங்களின் தெய்வங்கள்.!யாரிடம் முறையிடுவது?தத்தளிக்கும் கடலில் கலங்கரை விளக்கமாக எங்கள் கண்களுக்கு தெரியும் ஒரே தீபஒளி நீங்கள் தான்.மனம் சஞ்சலம் அடையும் பேதொல்லாம் தங்களின் சிவபுராணங்களை கேட்டு ஆனந்தம் அடைகிறேன். எங்கள் வேண்டுதலை செவி சாய்த்து,அருள்புரியுங்கள்.ஓம் நமச்சிவாய!ஓம்சிவாய நம!திருச்சிற்றம்பலம்!🤔👍🙏🏻
கண்டிப்பாக நம் தந்தை ஒவ்வொன்றாக களை ௭டுப்பார்.ஒவ்வொ௫ தனிநபரின் ஒழுக்கமும் சமுதாயத்தின் ஒழுக்கமாகும். சுயநலத்தில் இ௫ந்து தான் பொதுநலம் தோன்றும். நம் ௮னைவரது வேண்டுதலையும் நம் ௮ப்பா நிறைவேற்றுவார். தங்கள் குடும்ப ௨றுப்பினர்கள் ௮னைவ௫ம் நலமுடன் வாழ சிவனை வேண்டுகிறேன். நமசிவாயம்🙏🙏🙏
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் - 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
Ennai mathri kulanthai illaathavanga evalo per irupanga avangalkukagayum vendi kolgeran enna mathri yaarum kasata pada kudathu ayyenea om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
🎉 சிவபுராணம் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்.அதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. கூட சேர்ந்து பாடும் போது கண்களில் தானாக கண்ணீர் வருகிறது.குரல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி.
என்னை படைத்த இறைவனை சதாசிவ சம்போ மகாதேவா உலகத்தில் உள்ள எல்லா உயிரகளிடத்திலும் அன்புகொண்டு அமுது படைக்கும் அய்யனே பராசக்தி அர்தனாதிஸ்வரராக கட்சி தந்து ஆசி வழங்கும் பரமேஸ்வர எல்லோரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாழ வேண்டும்
அற்புதமான சிவபுராணம் வரிகள் ...ரமணி அய்யாவின் குறல் வலத்தில் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...என் அப்பன் ஈசனுடைய மகிமையே மகிமை ..ஒம் நமச்சிவாய🙏🙏
சிந்தை மகிழ சிவபுராணம் கேட்ட வண்ணம் சித்தர் வாழும் சிவகிரியை சுற்றிவந்தது போல்இருந்தது நாவல் ஊற்று கருப்பன் கோவில் மற்ற காட்சிகள் காண கிடைக்கா வரப்பிரசாதம் அருமை இனிமை பெருமை கவிஞர் தில்லை
Om Namashivaya!There are 6Vazhgas,5Velgas and 8Pottris..in the First Chapter of SIVAPURANAM,totally 658.Hymns in the Divine Book of Thiruvasagam.More over,in the 32nd line of SIVAPURANAM.."kandu indtru Veedutren",at the age of 32Manikkavavasagar Attained the Lotus feet of the Almighty ,Sivan.
🎉தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவபுராணம் பாடல் மனம் நிறைவாக உள்ள்து.திரும்ப திரும்ப கேட்க மனம் விரும்புகிறது. ஓம் நமசிவாய போற்றி..
நமஹ சிவாய. திரு ரமணியின் உச்சரிப்பு, விஜய் இசை மற்றும் ஒளிப்பதிவு எல்லாமும் அற்புதம். நீங்கள் எல்லோரும் இம்மையில் வாழ்வாங்கு வாழ்ந்து, மறுமையில் பிறவில்லா பேற்றை பெற வேண்டுகிறேன்.