இந்த மாதிரி மட்டைஓலை பாளை குரும்பை எல்லாம் எடுக்காமல் அப்படியே ரோட்டாவேட்டர் ஓட்டினால் கண்டிப்பாக டிராக்டர் கியர்பாக்ஸ் சீக்கிரம் பழுதாகிவிடும் நண்பா. ரோட்டா வேட்டரும் சீக்கிரம் பழுதாகிவிடும்..நாங்கள் 47hpவண்டி வைத்து இருக்கிறேnம். ஆனால் இப்படி ஓட்டமாட்டோம். மட்டைஓலை பாளை எல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிய பிறகுதான் ஓட்ட வேண்டும்.இவ்வாறு ஓட்டினால் அதில் விரும் வாடகை வண்டிக்கும் ரோட்டா வேட்டருக்கும் செலவு செய்ய சரியாக போய்விடும். அதும் தவிர இவ்வாறு ஓட்டானால் அதிக வைப்ரேசன் வரும். ரொம்ப நேரம் டிராக்டரில் உட்கார்ந்து ஓட்ட முடியாது.. டாப் லிங்க் ஐ சென்ஸிங் ஹோலில் போடவேண்டாம். அப்படி போட்டால் ரோட்டா வேட்டரில் ஏற்படும் வைப்ரேசன் டாப் லிங்க் வழியாக டிராக்டரில் உள்ள ஹைட்ராலிக் டெப்த் ஸ்பிரிங்கை சேதப்படுத்தி உடைத்துவிடும். அதனால் கலப்பை மாட்டி ஓட்டும்போது டெப்த் சென்ஸிங் சரியாக வேலை செய்யாது. மட்டைஓலை பாளை குரும்பை எல்லாம், எடுக்காமல் ஓட்ட மல்ச்சர் இயந்திரம் பயன்படுத்த வேண்டும். ரோட்டாவேட்டர் அல்ல நண்பா. ரோட்டா வேட்டர் ஓட்டும்போது டாப் லிங்கை சென்ஸிங் ஹோலில் இணைக்காமல் தனியாக ஒரு பெட் போட்டு அதில் மாட்ட வேண்டும் நண்பா.