இயேசு நல்லவர், இயேசு பரிசுத்தர், இயேசு மீட்பர், இயேசுவே ஆண்டவர், இயேசுவே இரட்சகர், இயேசுவே நமது பாவங்களை சுமந்தவர், இயேசுவே நம் அனைவரின் பாவங்களுக்கு பரிகாரம் செய்தவர், இயேசுவே நமக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்து, உயிர்த்து எழுந்தவர், அவர் ஒருவரே பரலோகம் சென்றிருக்கிறவர், இயேசு கிறிஸ்துவே வரப்போகிற நீதிபதி! ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வின் கணக்கை இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைக்க வேண்டும், அவர் நம்மை நியாயம் தீர்க்கும் அந்த விசாரணை நாளில், இயேசு கிறிஸ்துவின் முன்பாக நின்று கணக்கு கொடுக்க வேண்டும்; அப்போது நமக்கு ஒருவரும் உதவமாட்டார்கள், எவரும் நமக்காக பரிந்துபேச முடியாது, அது ஏற்றுக்கொள்ளப்படாது! எனவே, இப்போதே அவரிடம் நாம் ஒவ்வொருவரும் மனம் திரும்ப வேண்டும்; அவரைத்தான் வணங்க வேண்டும்; அவரைத்தான் பின்பற்ற வேண்டும்! சிலைகளை வணங்கக் கூடாது; அதற்குமுன் பணியவோ, மண்டியிடவோ கூடாது! இயேசு கிறிஸ்து ஒருவரே நம்மை பரலோகத்தில் ஏற்றுக்கொள்கிறவர், அதுவும், அவரை மட்டும் வணங்கினால்தான் அவரது வீடாகிய சொர்க்கம் சேர முடியும்! என்னிடம் வாருங்கள் என்று சொன்னவர் இயேசு கிறிஸ்து மட்டுமே! எனவே, இயேசு கிறிஸ்துவை நம்புங்கள், அவரைப் பின்பற்றுங்கள், அவரது விருப்பத்தை நிறைவேற்றுங்கள், அவரிடம் பாவ மன்னிப்பு பெற்று, அவரை மட்டும் வாழ்வில் பின்பற்றுங்கள், அவரைப் போற்றுங்கள்! மற்றபடி நீங்கள் யாரைப் போற்றினாலும் அதெல்லாம் வீண், வீண், வீண்! மனம் திரும்பி, இயேசு கிறிஸ்துவை பின்பறுங்கள்! தப்பிப் பிழைத்து, பரலோக பாக்கியம் பெறுங்கள்!