நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி கக்கோர் இளங்கோ ஆண்பாலும் தேனும் அரும்பை முதல் முக்கனியும் தேன்பாலும் தெய்வ தமிழுக்கு அளித்திட்ட கம்பர் இத்தனை இறைக்கொடை என் தமிழுக்கு மட்டுமே. அந்நியன் என் தமிழை புகழ்ந்தாலும் அவனையும் என் தமிழ் வாழவைக்கும்.
தமிழ் பேராசிரியருக்கு ஒரு வேண்டுகோள், கூகிள் தமிழ் மிகவும் தரமில்லாத தாக இருக்கிறது. இதன் பின்னனியில் இருப்பது. யார்? ஏன் கூகிள் அரைகுறையான தமிழில் சொற்களைத் தருகிறது? இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளதா? ஆங்கிலத்தில் தவறாக தட்டெழுத்தை பதித்தாலும் கூகிள் திருத்தித் தருகிறது. ஆனால் தமிழில் சரியாக எழுதினாலும் அது தவறாக பதிவிடுகிறது. இதன் பின்னனியில் உள்ள சதியை ஆய்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சரவணன் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் சொன்ன பின்பு தான் வடமொழி சொல் என்று தெரிந்து கொண்டேன். மணிகண்டன் பெயர் விளக்கம் அருமை... நன்றி ஐயா 🙏 தமிழ் வாழ்க 💪
ஐயா நம் மொழியை உயர்த்த மற்ற மொழியை திரிக்க கூடாது மண்ணாங்கட்டி என்பதும் கேவலம் அல்ல பிரித்வி என்றால் மண் அவ்ளோதான் பிரித்விராஜ் என்றால் மண்ணை ஆள்பவன் என்று பொருள் பிரித்விலிங்கம் என்று இருக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் ராமேஸ்வர மூலவர் அதன் பொருள் மண்ணால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஆகும்
தமிழாசிரியர் அவர்களுக்கு பணிவான வணக்கம். தாங்கள் நூறாண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணியாற்ற இறைவன் அருளட்டும். நான் தற்போது குறிப்பிடுவதை குறையாகக் கொள்ளாமல் கோரிக்கையாக கொள்ளுங்கள். ழ கரத்தை தங்களைப் போன்றோரும் ள கரம் ல கரம் போன்று உச்சரிக்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் ஐயா.
"ஶ ர ஹ ண ப வ" என்ற ஆறெழுத்து மந்திரத்தில் இருந்து வந்ததுதான் சரவணன் என்ற பெயர். பீஜமந்திரங்கள் எந்த மொழிக்கும் சொந்தமல்ல. சொல்லப்போனால் அது மொழியே அல்ல அது ஒலி மட்டுமே.
ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் தோன்றிய பெயரே சரவணன் என்பதாகும். இப் பெயரின் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரவு + அணம் = அரவணம் (1) >>> சரவணம் (2) >>> சரவணன் (3) (1) அரவு என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு. அணத்தல் என்றால் பொருந்துதல், தலையெடுத்தல் / மேலோங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து அரவணம் என்றாகும். இதன் பொருள் கீழே:: அரவணம் = ஒலிகள் பொருந்தி மேலோங்குவது = கல்வி. (2) அரவணம் என்னும் தமிழ்ச் சொல்லின் முதலில் வரும் அகர உயிர்மேல் சகரமெய் ஏறி சரவணம் என்று ஆகும். இவ்வாறு ஆவதன் பெயர் சம்மோனைப் போலி ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக வேறு சில சான்றுகளையும் கீழே காணலாம். இப்பி >>> சிப்பி, அருகு >>> சருகு, அட்டை >>> சட்டை (3) சரவணம் ஆகிய கல்வியில் சிறந்தவன் என்ற பொருளில் உண்டானதே சரவணன் என்ற பெயராகும். சரவணம் (கல்வி) >>> சரவணன் (கல்வியில் சிறந்தவன்) கல்வி / கேள்வியைக் குறிக்கும் சரவணம் என்ற தமிழ்ப் பெயரில் இருந்தே கேள்வியையும் கேள்விக்குரிய உறுப்பான காதினையும் குறிக்கும் தமிக்ருதப் பெயர்கள் கீழ்க்காணும் விதிகளின்படி உருவானது. சரவணம் >>> ச்~ரவண (வி.15,16,6) வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி சகரம் ச~கரமாக மாறியது வி.16 - செகுமோனை விதி - இதன்படி சகர முதலில் இருந்து உயிர் நீங்கியது. வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி மகர விகுதி கெட்டது. பி.கு: சரவணன் என்றால் கல்வியில் சிறந்தவன் என்பது பொருளென்று மேலே கண்டோம். ஆனால் இப் பெயர் முருகனுக்கு ஏன் ஏற்பட்டது?. சிவன், திருமால் என்று பல கடவுளர் இருக்க, ஏன் முருகனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?. இக் கேள்விக்கான விடையையும் இங்கே காணலாம். நான்முகனே அறியாத ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை அறிந்தவன் முருகன். தந்தையாகிய சிவபெருமானுக்கே இந்த மந்திரத்தின் பொருளை உணர்த்தித் தகப்பன்சாமி என்ற பெயரைப் பெற்றவன். இவ்வாறு கல்வி கேள்வியில் சிறந்தவனாக இருந்ததால்தான் முருகனுக்குச் சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். நாணல்காட்டில் இருந்த ஒரு குளத்தில் பிறந்ததால்தான் சரவணன் என்ற பெயர் என்பதெல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பொருத்தமற்ற கட்டுக்கதை
அது ஒரு சமஸ்கிருத பெயர்..... சர என்றால் நாணல் வணன் என்றால் வனம்.... தமிழ்மொழியில் எழுதும்போது "ண" வரும்போது அதன் இணையெழுத்து "ன" வரும்.... சமஸ்கிருதத்தில் ஷர்வனன் என்று வருகிறது.... இப்போது பிரித்து படித்துப்பாருங்கள்..... (என்னுடைய பெயரும் தமிழ்தான் என நினைத்தேன்😂. பிறகு தான் தெரிந்தது சரவணன் என்பது சமஸ்கிருதப்பெயர் என்று)
@@rajag9860 ராஜா, ராசா எல்லாமே ஒன்றுதான்... அரசன், மன்னன் என்பதுதான் சரியாக இருக்கும்... எடுத்துக்காட்டாக, ராஜாதிராஜன் என்பதற்கும் மன்னாதிமன்னன் என்பதற்கும் தான் மொழியின் ஆளுமை இருக்கிறது...
இல்லை.இவர் ஒரு ரஷ்யபுரட்சி யாளர்.இவர் ஸ்டாலின் என்றப் புனைப்பெயருடன் பலப் புரட்சி கட்டுரைகளை வெளியிட்டார் இதனை தமிழ்ப்படுத்தி சுடாலின் என்றனர் இதுவே சுடலை(மாடன்)யானது
ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் தோன்றிய பெயரே சரவணன் என்பதாகும். இப் பெயரின் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரவு + அணம் = அரவணம் (1) >>> சரவணம் (2) >>> சரவணன் (3) (1) அரவு என்ற சொல்லுக்கு ஒலி என்ற பொருளுண்டு. அணத்தல் என்றால் பொருந்துதல், தலையெடுத்தல் / மேலோங்குதல் என்ற பொருட்கள் உண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து அரவணம் என்றாகும். இதன் பொருள் கீழே:: அரவணம் = ஒலிகள் பொருந்தி மேலோங்குவது = கல்வி. (2) அரவணம் என்னும் தமிழ்ச் சொல்லின் முதலில் வரும் அகர உயிர்மேல் சகரமெய் ஏறி சரவணம் என்று ஆகும். இவ்வாறு ஆவதன் பெயர் சம்மோனைப் போலி ஆகும். இதற்கு எடுத்துக்காட்டாக வேறு சில சான்றுகளையும் கீழே காணலாம். இப்பி >>> சிப்பி, அருகு >>> சருகு, அட்டை >>> சட்டை (3) சரவணம் ஆகிய கல்வியில் சிறந்தவன் என்ற பொருளில் உண்டானதே சரவணன் என்ற பெயராகும். சரவணம் (கல்வி) >>> சரவணன் (கல்வியில் சிறந்தவன்) கல்வி / கேள்வியைக் குறிக்கும் சரவணம் என்ற தமிழ்ப் பெயரில் இருந்தே கேள்வியையும் கேள்விக்குரிய உறுப்பான காதினையும் குறிக்கும் தமிக்ருதப் பெயர்கள் கீழ்க்காணும் விதிகளின்படி உருவானது. சரவணம் >>> ச்~ரவண (வி.15,16,6) வி.15 - கிரந்தமாற்று விதி - இதன்படி சகரம் ச~கரமாக மாறியது வி.16 - செகுமோனை விதி - இதன்படி சகர முதலில் இருந்து உயிர் நீங்கியது. வி.6 - விகுதிகெடல் விதி - இதன்படி மகர விகுதி கெட்டது. பி.கு: சரவணன் என்றால் கல்வியில் சிறந்தவன் என்பது பொருளென்று மேலே கண்டோம். ஆனால் இப் பெயர் முருகனுக்கு ஏன் ஏற்பட்டது?. சிவன், திருமால் என்று பல கடவுளர் இருக்க, ஏன் முருகனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?. இக் கேள்விக்கான விடையையும் இங்கே காணலாம். நான்முகனே அறியாத ஓம் என்னும் மந்திரத்தின் பொருளை அறிந்தவன் முருகன். தந்தையாகிய சிவபெருமானுக்கே இந்த மந்திரத்தின் பொருளை உணர்த்தித் தகப்பன்சாமி என்ற பெயரைப் பெற்றவன். இவ்வாறு கல்வி கேள்வியில் சிறந்தவனாக இருந்ததால்தான் முருகனுக்குச் சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். நாணல்காட்டில் இருந்த ஒரு குளத்தில் பிறந்ததால்தான் சரவணன் என்ற பெயர் என்பதெல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பொருத்தமற்ற கட்டுக்கதை