இன்றைய காலகட்டத்தில் நம் மக்களுக்கு தமிழில் எழுதுவதற்கே தெரியாத நிலை உள்ளது. இதனை நல்வழிபடுத்த உங்களது இந்த காணொளி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. நாம் தமிழர்.
தெளிவான விளக்கம். மிக்க நன்றி. கருப்பு கறுப்பு பற்றி என்னுடைய சந்தேகம் தீர்ந்தது. சிவப்பு, சிகப்பு, இயக்குனர், இயக்குநர் விளக்கம் அருமை. நல்ல தமிழ் உச்சரிப்பு தெளிவான தமிழ் நடை. வாழ்த்துகள், பாராட்டுகள்.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கறுப்பு நிலா ....இதில் தவறு காணும் தகுதி எனக்கு இல்லை. இவரின் கையாளுமை தவறானது என்பது எப்படி சரியாகும்? உங்களின் தவறாளுமை சரியானதுதான் என்பதில் எனக்கு சமரசம் இல்லை..எப்படி என் பதில்?
@@Tamilnathi __சங்கத் தலைமை நக்கீரன் சொன்னாலும் குற்றம் குற்றமே!! ஆனாலும் தமிழ் புலமை குடிகொண்ட தங்களிடம் நான் ஒடுக்கம். வைரமுத்து தலையிட்டு பதில் வழங்க வைக்கிறேன். ஆனாலும் என் அதீதப் பேராசை: தொல்தமிழ் தொல்காப்பியரும், வலைதளத் தமிழ் வைரமுத்துவும் இருவருமே தமிழில் தோற்கக் கூடாது. சரியல்ல. .....தீர்ப்புரை தோற்கலாம்...தவறல்ல. "மோடியைத் தேடி"__தொண்டு நிறுவனம்.
அய்யா ! மீப்பெரும் புலமையுடன் தமிழ் படியா சாதாரணன் குறை கண்டு விட்டதாக ஒரு குற்ற உணர்வும், குறை அறிவும் எனக்குள் வெளிப் பட்டமைக்கு வெளிப் படையாகவே வெட்கப் படுகிறேன். பின் வரும் சூழ்நிலகளில் ஏதேனும் ஒன்று பிழையாகிப் போனால் சரியாகி விடாதா ? _என்பதும் கட என் ஆசையே ... .பச்சையப்பன் கல்லூரியில்_ பதின்மப் பருவத்தில் _பயின்று வரும் வேளையில் _கறுப்பு நிலா எழுதியவன் நிகழ்காலக் கவிஞன். சங்கக் கவிஞனும் பதின்மப் பருவத்தை_ கடக்காத நிலையில் புனைந்திருந்தால்..... குறையானது கொஞ்சு தமிழ் கருவாக்கம் பிஞ்சு வயதின்பால் எஞ்சியது ஆகிவிடும் அல்லவா? சர்ச்சை எதற்கு ? அர்ப்பணிப்பு அன்னை தமிழுக்கு... "மோடியைத்தேடி__ தொண்டு நிறுவனம்.
அமங்கலமான சொற்களை தமிழர்கள் எப்போதுமே மங்கலமாகவே அழைப்பார்கள் அதனால் கருப்பு ஆடு என்பதை வெள்ளாடு என்கின்றனர் அதிக விஷமுள்ள பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதைப் போல
கறுப்பு நிறம் என்பது தவறு என்றால் நான்காம் வகுப்பு பாடத்தில் கறுப்பு கோட்டு என்று இடம்பெற்றுள்ளது. இது தவறா? பொருட்கள் என்பது சரியா? பொருள்கள் என்பது சரியா?தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
தமிழ் இயல், இசை நாடகம் ஆகிய மூன்று தமிழ் உள்ளது. பேசுவதற்கு ஒரு தமிழ், எழுதுவதற்கு ஒரு தமிழ், நாடகத்திற்கு ஒரு தமிழ் உண்டு. பேச்சு தமிழை எழுதும் தமிழில் பயன்படுத்தக் கூடாது. எழுதும் தமிழை பேசும் போது பயன்படுத்த தேவை இல்லை.
Very good explanation for using the right letters in a word. Even many educated persons have much confusion in writing the words with correct letters. Congratulations.
கருப்பு எனில் பஞ்சம் என்று பொருள் கூறும் அகரமுதலிகளில் வேர்ச்சொல் எதுவென்று குறிப்பிட்டுள்ளாதா என்று தெளிவுபடுத்துதல் நன்று. தெலுங்கு மொழியில் "கருவு" எனில் அது பஞ்சம் என்று பொருள்படும். எனவே வேர்ச்சொல் எதுவென்று கண்டால் தெளிவாகலாம்.
ஜோசப் ஐயா.உங்கள் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது.உங்கள் பதிவில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. நன்று.வேறுபாடுகளை விளக்கியிருப்பது.என பதிவிட வேண்டும்.அலெக்ஸாண்டர் ஐயா.
இரண்டுமே வடசொல்.தமிழில் எழுதும் போது சேனாதிபதி என்றே எழுதவேண்டும். சேனை என்றால் படை என்று பொருள் அதிபதி என்றால் தலைவர் என்று பொருள் சேனாதிபதி என்பதற்கு படைத்தலைவர் என்பதே சரியான தமிழ்ச்சொல் ஆகும்