Thirumana Thadai Neekum Pathigam - Thirumana Thadai Nneenga Manthiram - Thirumana Thadai Neenga Slokam - Thirumana Thadai Neenga Pariharam
Our Sincere Thanks & Credits to
Thiruvarul Foundation
திருவருள் பவுண்டேஷன்
www.thiruvarul.org
திருமண தடை நீக்கும் பதிகம் - திருமணம் நடக்க பதிகம் - திருமண தடை நீங்க மந்திரம் - திருவேதிகுடி பதிகம் - திருமண தடை நீங்க பரிகாரம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம் திருமுறை
பதிகம் : 78
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
பண் : சாதாரி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : வேதிகுடி
சிறப்பு : திருவிராகம்
பாடியவர் : திருவிடைமருதூர் S.சம்பந்த தேசிகர்
திருச்சிற்றம்பலம்
பாடல் : 1
நீறுவரி ஆடரவொ டாமைமன
என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல்
ஆதியர் இருந்தவிடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை
நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
மாரும்வயல் வேதிகுடியே.
பாடல் : 2
சொற்பிரி விலாதமறை பாடிநட
மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந்
நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமுன்
அயின்றவரி யன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு
பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.
பாடல் : 3
போழுமதி பூணரவு கொன்றைமலர்
துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு
ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி
நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி
யென்பர்திரு வேதிகுடியே.
பாடல் : 4
காடர்கரி காலர்கனல் கையரனல்
மெய்யருடல் செய்யர்செவியிற்
தோடர்தெரி கீளர்சரி கோவணவர்
ஆவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கள்மல
ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை
மேவுதிரு வேதிகுடியே.
பாடல் : 5
சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற
முனிந்துதொழும் மூவர்மகிழத்
தக்கஅருள் பக்கமுற வைத்தஅர
னாரினிது தங்கும்நகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல்
பற்றிவரி வண்டிசைகுலா
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர்
போகநல்கு வேதிகுடியே.
பாடல் : 6
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி
யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ
டகந்திரியும் அண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ்
மிக்கிழிவி லாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரை
செயாதஅவர் வேதிகுடியே.
பாடல் : 7
உன்னிஇரு போதுமடி பேணுமடி
யார்தமிடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி
ருந்ததுணை வன்றனிடமாங்
கன்னியரொ டாடவர்கள் மாமணம்
விரும்பியரு மங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன்
மங்கையரி யற்றுபதி வேதிகுடியே.
பாடல் : 8
உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை
பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது
நல்கியருள் அங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும்
ஆடவரும் மொய்த்தகலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை
யுலாவுதிரு வேதிகுடியே.
பாடல் : 9
பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி
அங்கையனும் நேடஎரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென
நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்கள் ஓசையியல் கேள்வியத
றாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
வீதிநிகழ் வேதிகுடியே.
பாடல் : 10
வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம
னத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென என்றுமுண ராதஅடி
யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள்
தெரிந்தெழு இசைக்கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ்
கின்றதிரு வேதிகுடியே.
பாடல் : 11
கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை
காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி யாதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க
ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது
வேசரதம் ஆணைநமதே.
திருச்சிற்றம்பலம்
#aalayamselveer #thirumanathadaineenga #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong
28 ноя 2019