இறைவன் தனக்காக கட்டிக்கொண்ட கோயில் ஆவுடையார் கோயில். தனக்காக இசையமைத்து பாடி கொண்டது ரமணி அவர்களின் வழியாக. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
தினமும் இந்த உருகிடும் திருவாசக போற்றி திரு அகவலை கேளுங்கள்! இதுவே சிவனருளை அடைய மிகச்சிறந்த எளிய வழிமுறை! நம்பிக்கையுடன் கேளுங்கள்! நல்லதே நடக்கும்! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி!
ஓம் நமசிவாய மிக அருமையான இசையுடன் கூடிய அற்புதமாக பதிவு செய்த அய்யாவுக்கு நன்றி!! எங்களுக்கு அறிமுகப்படுத்திய கவனகர் ஐயாவுக்கு நன்றி!! திருச்சிற்றம்பலம்
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும் 50 சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் சமய வாதிகள் தம்தம் தங்களே அமைவது ஆக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து உலோகா யதமெனும் ஒண்டிறப் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதில் பெருமாயை எனைப்பல சூழவும் தப்பாமே தாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகு அது போலத் 60 தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் கொடிறும் பேதையும் கொண்டது விடாதென படியே ஆகி நல் இடைஅறா அன்பின் பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் கசிவது பெருகிக் கடல் என மறுகி அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் பிறிவினை அறியா நிழல் அது போல முன் பின்னாகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் கண்களி கூர நுண் துளி அரும்ப சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் தாயே ஆகி வளர்த்தனை போற்றி மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதரவல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி 90