நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழியில் இருந்து உயர்வர உயர்நலம் என்று தொடங்கும் பாடல் தொடங்கி ஐந்து பாடல்களுக்கான விளக்கமும் நம்மாழ்வார் பற்றிய விரிவான விளக்கம் இந்த காணொளியில் வழங்கப்பட்டுள்ளது இதனுடைய தொடர்ச்சி பகுதி 2 காணொளியில் கண்டு மகிழலாம்
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும் - மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர்மிகுநரை இலனே
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது இது உது எது வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே
#tamilnadu #tamilliterature #tnpsc #tnpscgroup4tamil #tamilliteraturetamil #civilservices #tntet #tnpsctamil #civilservices #tntet tamil #upscexam #tnpscgroup2 #worldtamilnews #worldtamil #தமிழ் #தமிழ்நாடு #தமிழர்வரலாறு #தமிழ்பயான் #தமிழ்status #தமிழ்விளக்கம் #தமிழர்கள் #உலகம் #உலக #இலக்கியம் #பக்தி #பக்தி_கதைகள் #பக்திடிவி #பக்திவரலாறு #வைணவம் #பெருமாள் #நம்பிக்கை #நம்மாழ்வார் #ஆழ்வார்கள் #ஆழ்வார்க்கடியான்நம்பி #ஆழ்வார் #கோயில் #வழிபாடு
23 июн 2022