The best of music is right here at your fingertips! Song : Nadhiyoram Movie : ANNAI ORU AALAYAM Artist : S.P.Balasubramanium , P.Susheela Music : Illayaraja
இளையராஜா எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத ஒரு டைம் மிஷின் அதில் ஏறி நம் பள்ளி காலத்துக்கு செல்லலாம் கல்லூரி காலத்துக்கு செல்லலாம் நம்முடைய இனிமையான பொழுதுகள் எல்லாவற்றிற்கும் செல்லலாம் இப்பொழுது எனக்கு வயது 59
8 வயதில் 1979 ல் ஒட்டன்சத்திரம் தியேட்டரில் அம்மா தம்பி யுடன் பார்த்த நினைவு கண்முன்னே வந்து சோகத்தை ஏற்படுத்துகிறது.இது கஷ்ட காலத்திலும் இனிமையான நாட்கள்.இப்பொழுது என் அம்மா உயிருடன் இல்லை.தம்பி தொடர்பில் இல்லை.அந்த நாட்கள் வராதா என ஏங்கும் உங்களின் ஓருவன்
ஆம் நானும் இப்படத்தை ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா தியேட்டரில் 1979-ம் ஆண்டு KR மேல்நிலைப்பள்ளி படித்த காலத்தில் பார்த்து ரசித்த நாட்களை உங்களுடன் இணைந்து அசைபோடுகிறேன். நன்றி
1980 ஆம் ஆண்டில் நான் கீழ் அரசம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நான் ஆறாம் வகுப்பு படிக்கிற போது கத்தாழம்பட்டு கிராமத்தில் உள்ள டூரிங் கொட்டகையில் பார்த்து ரசித்தபடம்.அதுதான் நான் பார்த்த முதல் திரைப்படமும் அதுதான்.நன்றி . வேலூர் ஏழுமலை.
என் கல்லூரி காலத்தில் 1980 First year B.A Lit(English) (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி) தஞ்சாவூர் தியேட்டரில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். காலம் பல கடந்துவிட்டது, மலரும் நினைவுகள்.என் பழைய ஞாபகங்கள் வசந்த காலம் இன்று பார்க்கும்போது அந்த நாட்கள் வராதா என ஏங்கும் உங்களின் ஓருவன். இனிமையான நினைவுகள். கண்களில் கண்ணீர் அந்த நாட்கள் வராதா ?? எதையோ இழந்துவிட்ட உணர்வு தோன்றுகிறது . என் கண்களில் இன்று கண்ணீர்........ அனைத்தையும் தொலைத்துவிட்டு நான்கு சுவர்களுக்குள் காலம் இன்று.... Today எனது வயது 61+ living in Sharjah.
அதிகாலை கிராமத்து சூழ்நிலையில் MGR ஆட்சியில் இலவசமாக கொடுத்த பல்பொடியில் பல் துலக்கி கண்மாயில் குளித்து காலில் செருப்பு இல்லாமல் கையில் சிலேடுடன் பள்ளிக்கு செல்லும் வழியில் இலங்கை வானொலியில் யார் வீட்டிலாவது ஒலிக்கும் இந்த பாடல். காலம் பல கடந்துவிட்டது, மலரும் நினைவுகள்
முதன் முதலில் கோடியக்கரை காட்டில் இந்த படத்தின் முதல் காட்சி எடுத்திருப்பார்கள் நான் 9வகுப்பு படித்து கொண்டிருந்தேன் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
அன்னை ஓர் ஆலயம். என் ஒன்பதாவது வயதில் இத்திரைப்படம் வெளிவந்தது. நான் பூண்டி கல்லூரியில் படிக்கும் காலத்தில் தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் இனிமையாக இருக்கிறது இரா.ஜெயராமன் மண்டலக்கோட்டை
@@arumugam8109கூட்டம் என்றால் பயங்கர கூட்டம் ! மதியம் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் அங்கேயே நின்று மாலை காட்சிக்கு டிக்கெட்டை வாங்கி இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தேன்
1982. ம் ஆண்டு பாளையங்கோட்டை சாந்தி தியேட்டரில் நான் என் ஏழு வயதில் பார்த்த முதல் படம்.படம் முடிந்ததும் திரைக்குப் பின்னால் சென்று அந்த யானைக் குட்டியைத தேடிய நினைவுஙள். இன்றும் பசுமையாய் என் இதயத்தில்......
நான் 1995-ல் எங்கள் ஊர் மணிகண்டம் பஞ்சாயத்து TV -யில நான், என் தம்பி, அண்ணன் சேர்ந்து பார்த்தோம் சனிக்கிழமை இரவு 10. மணிக்கு தான் திரைப்படம் வரும் அந்தப்பழைய நினைவுகள் ஒரு இனம் புரியாத சுகம் அருமை❤❤❤
இதற்கு இலங்கை வானொலிக்குத்தான் நன்றி சொல்லனும் எவ்வளவுதான் புதிய யுக்த்திகள் வந்தாலும் இப்போ தும் மனசு தேடுது இலங்கை வானொலியை மறக்க முடியாத நினைவுகள் 10வயதில்கேட்டப்பாட்டுஇப்போதும்புதுசாகேட்கிறமாதிரிஇருக்கு❤❤❤❤🎉🎉🎉
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிறு வயதில் ஒரு முறை டிவியில் இந்த படத்தை பார்க்க பக்கத்து வீட்டுக்கு போனபோது,அந்த வீட்டுக்காரர் என்னை வெளியே துரத்திவிட்டார்.பிறகு தியேட்டரில் அந்த படத்தை பார்த்துவிட்டேன்.இப்போதும் இந்த பாடலை எங்கு கேட்டாலும்,எனக்கு அந்த பழைய நினைவுதான் வருகிறது.
எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் பிடித்தமானது. தனிமையில் இருக்கும் போது அடிக்கடி முணுமுணுக்கும் பாடல். SPB and சைலஜா அவர்களின் சங்கீதமாய் செவிகளில் ரீங்காரம் இடுகிறது. இப்பாடல் போல் இப்போது வருவதில்லையே என்று மனம் ஏங்குவதில் தவறில்லையே.
இன்னா சார்...பாடல கேட்கும்போதே அந்த கால பருவ நினைவு மனதில் நினைக்க தோனுகிறது....வயது அப்போ அப்படி இருக்கும்......அத ஏன் கேட்கிறீங்க.....பட் ஒன்னுங்க நம்ம ஞானி...இசை ஞானி....இசை எப்படி அமைத்து உள்ளார்...பாருங்க....இப்பகூட ஒன்னுமில்ல....வாங்க வந்து கேட்டுப்பாருங்கள்....14.06.2024Time 11.00night
கௌரி மனோ கரி ராகத்தில் அமைந்த இந்த பாடலை இப்பொழ்தும் கேட்டேன்.கேட்ட நேரம்10.07.2024புதன் மாலை 06 மணி.by க. மா.பாலசுப்ரமணியன், கோ ழிகுண் டான் தெரு,கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம்
🌹வெண்ணிற மேகம் ! வா ன் தொட்டிலை விட்டு ! ஓடு வதென்ன ?மலையை மூடு வதென்ன ?முகிழ்தானோ ?துகில்தானோ ?சந்தனகாடி ருக்கு ?தேன் சிந்துற கூடி யிருக்கு ?தேன் வேண்டு மா ? நான் வேண்டுமா ? நீ யென்னை கைகளில் அள் ள ?நானந்த ! ஆனந்தம் எ ன் சொல்ல ?🎤🎸🍧😝😘
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நதியோரம் ம்ம்ம்ம்…… நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல…. நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்….. ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்…. நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… நான் அந்த ஆனந்தம் என் சொல்ல நதியோரம் ம்ம்ம்ம்… பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலை விட்டு ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன பெண் : முகில்தானோ துகில்தானோ முகில்தானோ துகில்தானோ பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு தேன் வேண்டுமா நான் வேண்டுமா நீ எனைக் கைகளில் அள்ள நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்… நதியோரம் ம்ம்…. ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம் துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே பனி தூங்கும் பசும்புல்லே ஆண் : மின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம் கார்காலத்தில் ஊர்கோலத்தில் காதலன் காதலி செல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல பெண் : நதியோரம் ம்ம்ம்ம்… நதியோரம் ம்ம்…. ஆண் : நீயும் ஒரு நாணல் என்று நூலிடை என்னிடம் சொல்ல… பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல ஆண் மற்றும் பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
Very beautiful picture song. I saw the picture with my friend Rajendren at Mayavaram when studiyed +2 in 1980 at my age of 18. I realy last my that days. Mullaichelvan.