சின்னப் பிள்ளைகளுக்கு இப்படிக் கதை சொன்னால் நன்றாக அவர்கள் மனதில் பதியும். இறந்த மகனின் பிரேதத்தையும் பண்ணையாரின் பிரேதத்தையும் போஸ்ட் மார்ட்டம் செய்திருந்தால் ஊர்மக்களுக்கு உண்மை தெரிந்திருக்கும்.எல்லோருக்கும் ஆவி என்ற பேய் பிடித்திருந்ததால் யாருக்கும் போஸ்ட் மார்ட்டம் செய்ய சொல்லவில்லை.இயற்கை மரணம் என்று நம்பி விட்டுவிட்டார்கள்.அதற்குக் காரணம் பண்ணையார் செய்த சித்து வேலையும் மகன் அந்தப் பெண்ணுக்குச் செய்த துரோகமும் அந்த பெண்ணின் ஆவி செய்ததாக நம்பவைத்துவிட்டது.இதற்குப் பின்னால் அமைதியாக இருந்து யாராவது ஒருவர் சதிவேலை செய்திருப்பார் என்று அந்த ஊர் மக்கள் ஒருவருக்கும் நினைத்கத் தோன்றவில்லை.காரணம் அந்தப் பையன் செய்த துரோகத்தால் கிராம மக்கள் அனைவரும் பண்ணையாருக்கு எதிரான மனநிலையை எடுத்திருக்கிறார்கள்.அந்தக் காலத்தில் எழுத்தாளர் கல்கி எழுதிய சரித்திரக் காதல் கதைகள் இப்படித்தானிருக்கும். அதை ஆசிரியர்கள் வகுப்பில் நீதிக்கதைகள் என்று out of the subject சொல்லும்போது வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருத்துவிட்டு நண்பர்களுக்குள் ஆவியின் அற்புதங்கள் பற்றி பேசி சிலாகித்திருக்கிறோம். இப்போது அதையெல்லாம் நம்புகிறது ஒரு கிராமம் என்றால் அவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரிகிறது.காதலித்து திருமணம் செய்தவர் ஊருக்கு வராமல் வெளியூரிலேயே தங்கி விட்டார்கள் என்றாலோ அவர்கள் புத்திசாலிகள்தான்.இருந்தபோதும் இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சித்தரித்து எடுத்த படங்கள் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த நபர்கள் படமாக்கிய விதம் அருமையாக இருந்தது.நீங்கள் தலைப்பு வைத்ததைப் போல் ஆவி பலி மற்றும் பழி வாங்குவதை நம்புபவர்கள் மட்டும் நம்புங்கள்.இல்லையென்றால் நம்பாதீர்கள். காதலித்தது பிரிந்தது துரோகம் செய்தது பெண் பைத்தியமானது தற்கொலை செய்து கொண்டதெல்லாம் நம்பத் தகுந்ததுதான்.பலி வாங்கியது மட்டும் நம்பத் தகுந்தது இல்லை.பழிவாங்கியது வேறு ஒருவர் அல்லது இருவருக்கும் மேற்பட்டவராகக் கூட இருக்கலாம்.
I think he is fraud Please don't broadcast such things, any one easily understand that Matt in front of that person standing is responsible for colour change of water