Тёмный

நீ அவரைத் தேடினால் | Tamil Christian spiritual Message | Life and Peace Media 

Life and Peace Media
Подписаться 2,1 тыс.
Просмотров 50
50% 1

Nee Avarai Thedinal | Tamil Christian Message | Life and Peace Media
#தேடினால்
#thedinal
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
1 நாளாகமம் 28:9
நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.யாத்திராகமம் 23:22
(படிக்கும்போது கவனம்)
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
யாத்திராகமம் 23:25
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
சங்கீதம் 32:8
பள்ளத்தில் தவறி விழுந்த கதை
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 3:20
1.பிறரை நேசி
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.
மத்தேயு 22:39
மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
லூக்கா 6:31
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. பிலிப்பியர் 2:4
(சாப்பாடு) (தங்குமிடத்தில்)
Balloon story
2. பொல்லாத காரியங்களை விட்டு விலகு
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே, கர்த்தருக்கு பயந்து, தீமையை விட்டு விலகு.
நீதிமொழிகள் 3:7
ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,
1 பேதுரு 3:10
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
எபேசியர் 4:22
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
கொலோசெயர் 3:9
Monkey story
3. பாரத்தை அவர்மேல் வைத்துவிடு
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7
Glass of water
மாட்டுவண்டி கதை
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
கலாத்தியர் 6:2
கையில் கரண்டி சாப்பாடு கதை
4. நித்தியஜீவனை பற்றிக்கொள்
விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
1 தீமோத்தேயு 6:12
அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள். ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள். ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.
ரூத் 1:14
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் 1:17

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12