இந்த இயற்கை சுழற்சியின் உந்து சக்தியில் மனம் சற்றும் சலனப்படாமல் எந்த செயலாக இருந்தாலும் அது தன் நிறைவு அடைகிறது என்று தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் ஆத்மாவை உணர்ந்தவன்
ஆன்மா ஏன் பூமிக்கு வந்தது என்பதை எந்த சமயமும் சொல்ல முடியாது என்கிறார். தவறு வேதாந்தத்தில் அதுற்கு விடை இல்லை என்று தானே சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் ஆன்மா ஏன் பூமிக்கு வருகிறது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. ஐயா அவர்களுக்கு இது தெரியும்; ஆனாலும் பார்வையாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப பேசுகிறார் என நான் அறிகிறேன்.