பரிதானம் | Bible Question & Answer | வேதவினா போட்டி | Jesus Sam
தலைப்பு: பரிதானம்
==========
1. பரிதானம் யாருடைய கண்களைக் குருடாக்கும்?
Answer: ஞானிகளின் கண்களை
உபாகமம் 16:19
2. பரிதானம் நீதிமான்களின் வார்த்தைகளை என்ன செய்யும்?
Answer: புரட்டும்
யாத்திராகமம் 23:8
3. பரிதானம் நீதிமான்களின் நியாயங்களை என்ன செய்யும்?
Answer: தாறுமாறாக்கும்
உபாகமம் 16:19
4. யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண் ஜாடையாயிருந்தேன்.
யார் யாரிடம் சொன்னது?
Answer: சாமுவேல் - இஸ்ரவேலர் அனைவரையும்
1 சாமுவேல் 12:1,3
5.பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்கள் என்னவாகும்?
Answer: அக்கினி பட்சிக்கும்
யோபு 15:34
6. யார் அசைக்கப்படுவதில்லை?
Answer: தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன்
சங்கீதம் 15:5
7. யார் சபிக்கப்பட்டவன்?
Answer: பரிதானம் வாங்குகிறவன்
உபாகமம் 27:25
8. யார் பார்வைக்கு எது இரத்தினம் போலிருக்கும்?
Answer: பரிதானம் வாங்குகிறவர்களின் - பரிதானம்
நீதிமொழிகள் 17:8
9. பரிதானம் எதைக் கெடுக்கும்?
Answer: இருதயத்தை
பிரசங்கி 7:7
10. பரிதானம் எதை ஆற்றும்?
Answer: குரோதத்தை
நீதிமொழிகள் 21:14
11. யார் பரிதானம் வாங்கி நியாயத்தைப் புரட்டினார்கள்?
Answer: இஸ்ரவேல் வம்சத்தினர் - நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்
ஆமோஸ் 5:12
12. யாரிடத்தில் எது செல்லாது?
Answer: தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்
2 நாளாகமம் 19:7
If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144
#quiz | #questionanswer | #questionandanswer | #tamilbiblequiz | #biblegames | #questionanswer | #holybiblequiz | #quiztime | #gkquiz
#jesussam
@JesusSam
20 окт 2024