வணக்கம் அம்மா. நீங்கள் உங்களைப் போன்ற பெரியவர்கள் நம் இந்த கால குழந்தைகளை வாழ்த்துங்கள் அம்மா. இந்த கால குழந்தைகளுக்கு கஷ்டமே தெரியவில்லை அதனால் சின்ன சின்ன விஷயங்களையும் பெரிதாக நினைத்துக் கொண்டு வருந்துகிறார்கள். அதனால் இவர்கள் எல்லாம் நல்லபடியாக வாழ ஆசிர்வதியுங்கள்் அம்மா. நன்றி வாழ்க நலமுடன்.
அம்மா வணங்குகிறேன், துயரை துச்சமாக மதித்து, நாடு, மலை, காடு கடந்து, தாய் நாடு வந்து, சொல்ல வார்த்தைகள் இல்லை, என்ன வீரம், என்ன ஒரு விவேகம், தாங்கள் சொல்லிய விதத்தில் நேரில் பார்த்த து போல இருக்கு, தங்களது வீர தந்தையை மனக்கண்ணில் தரிசித்தேன். காலம்தோறும் புலம்பெயர்ந்தவர்களின் துயரம் அளவிடமுடியாதது
அம்மா உங்களது பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தாயே. எவ்வளவு பசி,நடைபயணம்,துயரம் என திகிலான அனுபவங்கள் உங்களுக்கு.. உங்கள்து அப்பா, பாட்டி, சித்தப்பா, என உறவுகளுடன் தாயகத்திற்கு வந்து சேர்ந்த அனுபவங்களை ஊரின் பெயர்களை என ஞாபகம் வைத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி நன்றி அம்மா.. 🌳💐🙏🙏🙏
நல்ல பதிவு இந்தியா பெரிய தேசம் என்றுதான் பெயர் வெறும் வீரம் பேசும் தமிழகம் தமிழ் இரானுவ பிரிவு மெட்ராஸ் ரெயின்மன் எல்லாம் வேடிக்கை பார்ததுதான் மிச்சம் மர்மா மலேசியா இலஙஃகைத் தமிழர் என்று தொடருகின்றது வேதனைத்தான்
1965 செப்டம்பர் 8 ஆம் தேதி பர்மாவில் இருந்து என் தாய் தந்தை சென்னை செங்குன்றம் பகுதி பாடியநல்லூரில் கேம் வந்து சேர்ந்தார்கள்...என் தாய்மாமன் பெரும் பணம் படைத்தவர்கள் அம்மாவின் அப்பா பக்கிரிசாமி நாயக்கர் அந்த காலத்தில் இருந்த கவர்னருக்கு சமையல்காரர்.
Even my grandmother is from Burma and my mom is born in Burma. Later their family moved to Tamil Nadu. Feel happy that my ancestors are from Burma and I can relate her stories.
வெள்ளைக்காரர்கள் தனக்கு செய்த உதவியை மறவாமல் பாட்டி சொல்வது நெகிழ்ச்சியாக இருக்கிறது அந்தக் காலத்திலும் கூட வழிநெடுகிலும் உணவு கொடுத்தார்கள் என்ற செய்தி மனதை மகிழச் செய்கிறது. ஆனால் இன்றுள்ள நிலைமையை நினைத்தால் வெட்கக்கேடானது
My mother studied in burma educational trust and her parents sisters brother had to Leave everything and come to india. What a life they must have had. When I read this lady story i.could not control my tears
இந்த மாதிரி கதை எல்லாம் எங்க அப்பா சொல்வாறு .செத்த பிணம் மேல் இருக்கிற நகை எல்லாம் நிறைய பேர் கொண்டு வந்து பணக்காரர் ஆனாங்களாம் .எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்காங்க நம் முன்னோர்கள்
நிச்சயமாக... நாம் இந்த தலைமுறையினர் தமிழை மெல்ல அழிவை நோக்கி நகர்த்துகிறோம்.வலிகள் நிறைந்த வரலாற்றை கொண்ட ஒரு மாபெரும் இனம்.இன்று மதத்தாலும் சாதியாலும் பிரிந்து குத்துயிரும் குலையுறுமாய் மெல்ல இழி நிலைக்கு நகர்கிறதோ என அச்சம் படர்கிறது.
போர் என்பது கொடுமை. நானும் இதை அனுபவித்து உள்ளேன். இந்த காணொலி என் கடந்தகாலத்தை நினைவு படுத்தி கண்ணில் நீரை வரவைக்கிறது. இலங்கை யாழில் உள்ள காங்கேசந்துறை எனது சொந்த ஊர். கையில் கிடைத்ததை சுமந்துகொண்டு எல்லாவற்றையும் விட்டு கஸ்டப்பட்டு நடத்து நாட்கள். மழைநீரை கையில் ஏந்தி தாகம் தீர்த்த நாட்கள். தம்பி தங்கச்சி இதற்குமேல் நடக்க முடியாது என கண்ணீருடன் கதறிய நாட்கள். காலங்கள் மாறினாலும் காயங்கள் மாறாத அவலங்கள்… உலகில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன ஆதிக்கம் என்ற ஒற்றை வார்த்தையால் முளங்கும் குண்டுகள் … எத்தனை எத்தனை அவலங்கள் ஆனால் மாறாவதாக இல்லையே
துன்ப துயரங்கள் நிறைந்த்து பர்மா அகதிகளின் இந்திய பயணம்..!! அன்றைய நிகழ்வின் ரத்த சாட்சியான லெட்சுமி பாட்டியின் வாக்கு மூலம் நம்மை பதற செய்கிறது. ஒரு போர் , எத்தனை கோடி மக்களுடைய வாழ்வை கபளீகரம் செய்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
உங்களை பார்க்கும் போது என்னுடைய பாட்டியை காண்பது போன்றே இருக்கிறது. அவர்களும் தங்களைப்போல் பர்வமாவில் இருந்து நடந்தே வந்தார்கள். நான் சிறுவயதாக இருக்கும் போது அவர்கள் பர்மாவில் இருந்து நடந்து வந்த அனுபவங்களை கூறுவார்கள். நான் ஆர்வமுடன் கேட்டு இருக்கிறேன். தாங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
பர்மா நாடு .. மலேசியா..போன்று முன்னேறி இருக்க வேண்டிய நாடு..ஆனால் யுத்தங்கள் மற்றும் ராணுவ தலையீட்டால் தனது பெருமைகளை இழந்து இன்று மிக மோசமான நிலையில் இருக்கிறது..! அதே போன்று...இலங்கையும் .. சிங்கப்பூர் அளவுக்கு இருந்திருக்கலாம்..ஆனால் பொறாமை...கொண்ட அரசியல் அதிகாரம் கொண்ட தலைவர்களால் .. இன்று இலங்கை ..கூனி /குறுகி நிற்கிறது..!
எங்கள் முன்னோர்கள் வைத்தியம் செய்யும் பொருட்டு திபெத் சென்று அங்குள்ளவர்களை மணந்து அங்கிருந்து மியான்மர் (பர்மா) சியாம்(தாய்லாந்து ) பகுதியில் சுற்றி மருத்துவத்தில் சம்பாதித்து பல பேர் இந்தியாவிற்கும் சிலர் மலாயா (மலேசியா) சென்றார்கள் 😓😔 வழிபயணம் முழுவதும் கோவேரிகழுதைகள் மூலமும் மாட்டுவண்டிகளிலும் நடந்தும் பயணித்திருக்கின்றனர்..
நாங்களும் பர்மாவில் இருந்து வந்த தமிழர்கள்தான்.என் பாட்டி( அப்பாவின் தாய்) 1920 களில் இந்தியாவில் குடியேறினார். பல ஒற்றைக்கல் கட்டிடக்கலையை கொண்ட கோயில் ,மசூதி களுக்கு கடல் வழி மார்க்கமாக வங்காள விரிகுடா வழியே கல் அனுப்பி வைத்து அதன் மூலம் கோவில் பள்ளிவாசல்களை கட்டினோம்.
Hats off to brave grandma, respect you my beloved paati, our Tamil peoples were really very much known for honest, humanity, hardworking am believing definitely this Tamil peoples will emerge to glorify the ancestral history, our community spread out world wide for business and working they never looted and cheat anyone, of course it's a great pride
எனது எனது கொள்ளும் பாட்டியும் பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நானும் அந்த கதைகளை கேட்டு இருக்கிறேன் போர் நடப்பதால் மிகவும் கஷ்டப்பட்டு தான் கப்பலில் வந்ததாகச் சொன்னார்கள்
எந்த விதத்தில் நண்பா? நம் கலாசாரம், கல்வி முறை, விவசாய முறை, வாழ்கை முறை எல்லாவற்றயும் மாற்றி விட்டான்..அவன் எதுவும் நமக்காக செய்யவில்லை..அவனுக்காக செய்து கொண்டது தான் ரயில் பாதை போன்றவை..அமெரிக்காவை விட வளம் மிகுந்தவை ஆப்பிரிக்கா நாடுகள்..ஆப்பிரிக்கா எங்கோ இருக்கிறது..சுரண்டிய அமெரிக்கா, பிரிட்டன் வளர்ந்த நாடுகள்..நாம் ஒழுங்கா ஒட்டு போட்டால், நாம் கடமைகளை செய்தால் முன்னேறலாம்..அதை செய்வோம்..
19ம் நூற்றாண்டில் எங்கள் ஊரிலிருந்தும்(சேலம்) பினாங்கு சென்று குடியேறியுள்ளனர். தமிழர்கள் விரட்டியடிக்க பட்டபோது சிலர் ஊர் திரும்பி விட்டனர். உலகெங்கும் பரவி வாழும் தமிழினம்
My grand pa also from burma ( rangoon) He told lots of story about rangoon, how they lived in rangoon, from ramanathapuran to rangoon why they send, why they camefor 1942, he ll be cry when he tells story, because missed lot of relatives